உடுமலை, ஆக.30 - உணவுப் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரியை ஒன்றிய அரசு ரத்து செய்ய வேண்டும் என அனைத்து வியாபாரிகள் நலச் சங்கம் வலியுறுத்தி உள்ளது. திருப்பூர் மாவட்டம், உடுமலை அடுத்த துங்காவி அனைத்து வியாபாரிகள் நலச் சங் கத்தின் மாநாட்டில், சில்லறை வர்த்தகத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களை அனுமதிக்க கூடாது. சிறு குறு வணிகர்களை பாதுகாக்க சிறப்பு சட்டம் நிறைவேற்ற வேண்டும். உணவுப் பொருட்களின் மீதான ஜிஎஸ்டி வரியை ஒன்றிய அரசு ரத்து செய்ய வேண் டும். வணிகர் நல வாரியத்தை முறைப்படுத்தி பணப்பலன்களை உரிய நேரத்தில் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக துங்காவி வியாபாரிகள் சங் கத்தின் தலைவர் ஜோசப் தலைமையில் நடை பெற்ற இக்கூட்டத்தில், சங்கத்தின் பொரு ளாளர் கணேஷ்குமார் வரவேற்று பேசினர். சிஐடியு திருப்பூர் மாவட்டச் செயலாளர் கே. ரங்கராஜ், மாவட்ட துணைச் செயலாளர் ஜெக தீசன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மேலும், நடைபெற்ற கூட்டத்தில் உடுமலை மற்றும் மடத்துக்குளம் சிஐடியு நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில், சங்கத்தின் செயலா ளர் வெற்றிவேல் நன்றி கூறினார்.