நாமக்கல் மாவட்டத்தின் எல்லை பகுதியான குமாரபாளையம் தாலுகா வில் பள்ளிபாளையம் பகுதி அமைந் துள்ளது. இங்கு எண்ணற்ற விசைத்தறி கூடங்களும், ஏராளமான சாயப்பட்ட றைகளும், கார்மெண்ட்ஸ் நிறுவனங்க ளும் அதிக அளவு இயங்கி வருகிறது. இந்த தொழில்களை நம்பி நேரடியாக வும் மறைமுகமாகவும் லட்சக்கணக் கான தொழிலாளர்கள் பணியாற்றி வரு கின்றனர். கணிசமான அளவில் பர்னிச் சர், எலக்ட்ரானிக், ஜவுளிக்கடைகள், பேக்கரிகள், துரித உணவகங்கள், தனி யார் மருத்துவமனைகள், மருந்தகங் கள் அதிக அளவு செயல்பட்டு வரு கிறது. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் பாக சென்னை கன்னியாகுமாரி தொழிற் தட திட்டத்தின் அடிப்படையில் சுமார் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆலாம்பா ளையம் சாலையில் இருந்து ஈரோடு பாலம் வரை சாலை விரிவாக்கம் மற்றும் மேம்பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டது. தனியார் கட்டுமான நிறுவனத்தின் சார்பில் இந்த பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலை யில், தற்போது 90 சதமான பணிகள் நிறைவு பெற்றுள்ளது. இந்நிலையில் கடந்த மூன்று ஆண்டு களாகவே மேம்பால பணிகளுக்காக பிர தான சாலைகள் முடக்கப்பட்டு, வாக னங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டது. மேலும் சாலையின் இரு புறம் இருந்த கடைகள் ஏழு முதல் எட்டு அடி வரை மேம்பால பணிகளுக்காக அகற்றம் செய்யப்பட்டதால் ஏராளமான வியாபாரிகள் தங்கள் கடைகளின் முன் பகுதியை இழந்தனர். இதனையடுத்து, பலர் கடைகளை காலி செய்தனர். மேலும் தொழில் செய்ய முடியாத நிலையும் ஏற்பட்டது. பொதுவாகவே வியாபாரம் செய்வதற்கு மிக ஏதுவான காலகட்டம் தீபாவளி பண்டிகையாகும். ஆனால் தொடர்ச்சியாக பள்ளிபாளை யம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட வந்த பாலப்பணிகள் காரணமாக பொது போக்குவரத்து முற்றிலும் முடங்கி உள் ளது. வியாபார பாதிப்பும் ஏற்பட்டதால் கடந்த மூன்று ஆண்டுகளாகவே சுற்று வட்டார கடை வியாபாரிகள் தீபாவளி பண்டிகை வியாபாரத்தை இழந்தனர். தற்போது பணிகள் ஓரளவுக்கு நிறைவு பெற்று பிரதான சாலைகள் முழுவதும், பழையபடி பொதுமக்கள் வாகன ஓட்டி கள் பயன்பாட்டிற்காக திறந்து விடப் பட்டுள்ளதால், தற்போது போக்குவ ரத்து பாதிப்பு ஏதும் இன்றி வாகனங்கள் சென்று வருகிறது. மேம்பாலம் அமைக் கும் பணிகள் ஒருபுறம் நடந்து கொண்டி ருந்தாலும் அது பொதுமக்கள் வாகன ஓட்டிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தாது என்பதால் இந்த வருட தீபாவளி பண்டிகை வியாபாரம் ஓரளவு கை கொடுக்கும் என வியாபாரிகள் எதிர் பார்க்கின்றனர். இது குறித்து பள்ளிபாளையம் ஈரோடு சாலையில் எலக்ட்ரானிக் மற் றும் பர்னிச்சர் கடை வைத்துள்ள கோபி குமார் கூறுகையில், நகரின் வளர்ச்சிக் காக மேம்பாலம் அமைக்கப்பட்டாலும், இந்த பணிகள் காரணமாக கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து வியாபார பாதிப்பை சந் தித்து வந்தோம். கடை வாடகை, மின் சார கட்டணம், ஊழியர்களுக்கு சம்ப ளம் கூட கொடுக்க முடியாத நிலை ஏற் பட்டது. தற்போது நிலைமை சீரடைந்து வருவதால் இந்த வருடம் ஓரளவு தீபா வளி விற்பனை சிறப்பானதாக இருக் கும் என எதிர்பார்க்கிறேன் என்றார். -பிரபாகரன்