districts

img

விசைத்தறி உரிமையாளர் காலவரையற்ற வேலை நிறுத்தத்திற்கு தொழிற்சங்கத்தினர் ஆதரவு

அவிநாசி, ஜன.8- விசைத்தறி உரிமையாளர்கள் நடத்தும் காலவரையற்ற வேலை நிறுத் தத்திற்கு அனைத்து தொழிற்சங்கத் தினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். அவிநாசி பகுதி அனைத்து தொழிற் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆலோசனை கூட்டம் அவிநாசியில் சிஐடியு அலுவலகத்தில் திருப்பூர் மாவட்ட விசைத்தறி தொழிலாளர் சங் கத்தின் மாவட்ட செயலாளர்  பி.முத்து சாமி தலைமையில் நடைபெற்றது. இதில் சிஐடியு விசைத்தறி தொழிலா ளர் மாவட்ட துணைச் செயலாளர் ஆர். பழனிச்சாமி, ஏஐடியுசி மாவட்ட நிர்வா கிகள் கே.எம். இசாக், செல்வராஜ், ஐஎன்டியுசி மாவட்ட துணைத்தலை லைர் ஆர்.நவநீத கண்ணன், தொமுச செயலாளர் குணசேகரன்,  ஏடிபி நட ராஜ் உட்பட பலர் கலந்து கொண்ட னர்.   இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பின்வருமாறு, கோவை, திருப்பூர் மாவட்டத்தில் சுமார் இரண்டு லட்சம் விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இத்தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாக வும் ஒரு லட்சத்திற்கும் மேற் பட்டோருக்கு வேலைவாய்ப்பை அளிக்கிறது. இதில் 3 ஆண்டு களுக்கு ஒருமுறை விலைவாசி உயர் வுக்கு ஏற்ப கூலி உயர்வு ஒப்பந்தம் போடப்படுகிறது. ஆனால், கடந்த 2014 ஆம் ஆண்டிற்கு பிறகு எட்டு ஆண்டுகளாக கூலி உயர்வு இல்லை. தற்போதைய விலைவாசி உயர்வால் இத்தொழிலை நடத்த முடியாமல் விசைத்தறியாளர்களும், விசைத்தறி தொழிலாளர்களும்  தவித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த நவம்பர் 24  ஆம் தேதி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாநில அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர், தொழிலாளர் துறை அதிகாரிகள் முன்னிலையில் நடை பெற்ற பேச்சுவார்த்தையில் சோமனூர் ரகத்திற்கு 23சதவிகிதமும், பல்லடம் ரகத்திற்கு 20 சதவிகிதமும் கூலி  உயர்வு வழங்க முடிவு செய்யப்பட் டது. மேலும் இதனை டிசம்பர் 1ஆம் தேதி முதல் அமலாக்க வேண்டும் என  அறிவிக்கப்பட்டது. ஆனால், இதை யும் ஜவுளி உற்பத்தியாளர்கள் அம லாக்காமல் காலம் தாழ்த்தி வருகின்ற னர். இதனால் கூலி உயர்வு ஒப்பந் தத்தை அமலாக்க வலியுறுத்தி விசைத் தறி உரிமையாளர்கள் ஜனவரி 9ஆம் தேதி முதல் (இன்று) காலவரை யற்ற வேலை நிறுத்தத்தை அறிவித் துள்ளனர்.  இந்தப் போராட்டத்திற்கு விசைத் தறி தொழிலாளர் சங்கங்களும் ஆதரவு அளிக்க வேண்டும் என விசைத்தறி உரிமையாளர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளன. இதனடிப் படையில் அனைத்து தொழிற்சங்கங்க ளும் விசைத்தறி உரிமையாளர்களின் வேலை நிறுத்த போராட்டத்திற்கு ஆத ரவு அளிப்பதோடு, விசைத்தறி தொழி லாளர்களுடன் இணைந்த போராட்டத் தில் கலந்து கொள்வது  என இக்கூட்டத் தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.