தொழிற்சங்க அங்கீகாரத் தேர்தல்
சேலம், நவ 23- சேலம் உருக்கு ஆலை தொழிற்சங்க அங்கீகாரத் தேர்தல் நவம்பர் 22ஆம் தேதி நடைபெற்றது. நான்கு தொழிற்சங்கங் கள் போட்டியிட்ட தொழிற்சங்க அங்கீகாரத் தேர்தலில் தொமுச வெற்றி பெற்றது. ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனமான சேலம் உருக்காலை தொழிற்சங்க அங்கீகார தேர்தலை மத்திய தொழிலாளர் ஆணையம் நடத்தியது. துணைத் தொழிலாளர் ஆணையர் சீனிவாசலு தேர்தல் அதிகாரியாக செயல்பட்டு தேர்தலை நடத்தினார். 591 பேர் வாக்களிக்க தகுதியான வர்கள் என்ற நிலையில், 578 தொழிலாளர்கள் வாக்களித்த னர். இதில் தொமுச - 273, சிஐடியு - 228, ஐஎன்டியுசி - 49, பிஎம்எஸ் -26, செல்லாதவை 02 என வாக்குகள் பதிவாகியது. இதர தொழிற்சங்கங்களை விட அதிகமான வாக்குகளை (273) பெற்று தொமுச வெற்றி பெற்றது. சிஐடியு 228 வாக்கு களை பெற்று இரண்டாவது இடத்தை பெற்றது.
நியாய விலை கடைகளில் தேங்காய் எண்ணெய் ஈஸ்வரன் பேட்டி
கோவை, நவ.23- நியாய விலை கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங் காய் எண்ணெய்யை வழங்க வேண்டும் என கொங்குநாடு மக் கள் தேசிய கட்சியின் பொதுசெயலாளர் ஈஸ்வரன் கோவை யில் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். கோவை மாவட்டம், அவிநாசி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மாவட்ட பொதுக்குழு கூட்டம் சனியன்று நடைபெற் றது. இதில் பங்கேற்ற ஈ.ஆர்.ஈஸ்வரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஆக்கப்பூர்வமான அரசியல் என்பது, எல்லாத் திட்டங்களும் மக்களுக்கு சென்று சேர வைப்பது தான். தமிழக அரசு, பொள்ளாச்சியை தனி மாவட்டமாக அறிவிக்க தயங்க கூடாது. அதேபோல் சொத்துவரியால் பொதுமக்கள் பெரிதளவு பாதிக்கப்படுகிறார்கள், அதை குறைக்க வேண் டும். கோவை மாநகராட்சி மிகப்பெரிதாக விரிவடைந்து கொண்டிருப்பதால் அதை இரண்டாக பிரிக்க வேண்டும். ஆனைமலை - நல்லாறு திட்டத்தை கேரள அரசுடன் பேசி, விரைந்து அமல்படுத்த வேண்டும். கோவைக்கு மெட்ரோ ரயில் திட்டத்தை விரைந்து கொண்டு வர வேண்டும். நியாய விலை கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண் ணெய்யை வழங்க வேண்டும் என்றார்.
பள்ளி ஆசிரியர் பணியிடைநீக்கம்
சேலம், நவ.23- மாணவர்களை காலை அமுக்கி மசாஜ் செய்ய வைத்ததாக எழுந்த குற்றச்சாட்டின் காரணமாக ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். சேலம் மாவட்டம், வீரகனூர் அருகே உள்ள கிழக்கு ராஜபாளையயத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 90 மாணவ, மாணவிகள் பயின்று வரு கின்றனர். தலைமை ஆசிரியை உட்பட 6 பேர் பணியாற்றி வருகின்றனர். இதில் ஜெ.ஜெயப் பிரகாஷ் (49) என்பவர் கணித ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். இவர் தினமும் பள்ளிக்கு மது போதையில் வருவதாகவும், வகுப்பறை யில் பாடம் நடத்தாமல் தூங்குவதாகவும், அவரது கால்களை மாணவா்கள் அமுக்க வைப்பதாகவும் புகார் எழுந்தது இந்நிலையில் அதுதொடர்பான காணொ ளிகள் இணையத்தில் பரவியது. இதைய டுத்து கணித ஆசிரியர் ஜெ.ஜெயப்பிர காஷை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மு.கபீர் உத்தர விட்டுள்ளார்.
டெங்கு காய்ச்சலில் மாணவி உயிரிழப்பு
ஈரோடு, நவ.23- தாளவாடி அருகே டெங்கு காய்ச்சலால் பள்ளி மாணவி உயிரிழந்தார். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி அருகே உள்ள ஜீரகள்ளி கிராமத்தை சேர்ந்தவரின் மகள் தனியார் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வந்துள் ளார். கடந்த வாரம் உடல்நிலை பாதிக்கப் பட்டு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார். அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப் பது உறுதியானதால் கர்நாடக மாநிலம் மைசூ ரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி வெள் ளியன்று உயிரிழந்தார். இந்த சம்பவம் அப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள் ளது. பள்ளி மாணவி படித்து வந்த தனியார் பள்ளியில் பல மாணவ, மாணவர்களுக்கு காய்ச்சல் இருப்பதாக தெரிகிறது. சம்பந்தப் பட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் அங்கு சென்று மருத்துவ பரிசோதனை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற் றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
போதைக்கெதிராக விழிப்புணர்வு
போதைக்கெதிராக விழிப்புணர்வு நாமக்கல், நவ.23- போதைப்பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து குமாரபாளையம் காவல் துறை சார்பில், விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. போதை ஊசி, குட்கா, கஞ்சா தடுப்பு சம்பந்தமாகவும், போதைப்பொருளை பயன்படுத்தி வாகனங்களில் செல்லும் போது ஏற்படும் விபத்துகள் மற்றும் பைனான்ஸ் கந்து வட்டி மூலம் கடன் பெறுவதால் ஏற்படும் இன்னல்கள் குறித் தும் நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் காவல் துறை சார்பில் விழிப்புணர்வு பிரச்சாரம் வெள்ளியன்று இரவு நடை பெற்றது. குமாரபாளையத்தில் பல்வேறு பகுதிகளில் நடை பெற்ற இந்நிகழ்ச்சிகளில், நாடகக் கலைஞர்களை கொண்டு நகைச்சுவையாக பேசியும், போதைக்கு அடிமையாகும் இளைஞர்களின் வாழ்க்கை குறித்தும் தத்ரூபமாக நடித்துக் காட்டினர். குமாரபாளையம் காவல் ஆய்வாளர் தவமணி, நாடக கலைஞர்களுடன் சேர்ந்து போதை ஊசி களை மாணவர்கள், இளைஞர்கள் எப்படி பயன்படுத்துகி றார்கள்? அதை பெற்றோர்கள் எவ்வாறு கண்டு பிடிக்க வேண்டும்? அடிமையானவர்களை எப்படி காப்பாற்று வது என்று, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத் தினார். மேலும், கந்துவட்டிக்கு பணம் வாங்குவதால் ஏற் படும் பிரச்சனைகள், காவல் துறையை எப்படி அணுக வேண் டும் என்பது குறித்து எடுத்துரைக்கப்பட்டது. குமாரபாளையம் காவல் நிலையம் சார்பாக போதைப் பொருள், கந்துவட்டி பிரச்சனைகள் குறித்து பொதுமக்கள், இளைஞர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதை சமூக ஆர்வலர்கள் காவல்துறையை வெகுவாக பாராட்டினர். இதே போன்ற முன்னெடுப்பை அனைத்து காவல் நிலையங்களி லும் மேற்கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி கிடைக்கும் வகையில், காவல் துறையினர் பாதிக் கப்படும் பொதுமக்களுக்கு உதவ வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
தார்ச்சாலையை சீரமைக்க வலியுறுத்தல்
தார்ச்சாலையை சீரமைக்க வலியுறுத்தல் தருமபுரி, நவ.23- சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படும் தார்ச் சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். தருமபுரி மாவட்டம், பென்னாகரத்தை அடுத்த பாப்பாரப் பட்டி அருகே உள்ள மாக்கனூர் கிராமத்திலிருந்து மூக்கன் அள்ளி, பூச்செட்டிஅள்ளி, பேடறஅள்ளி ஆகிய கிராமங்க ளுக்கு செல்லும் தார்ச்சாலை, குண்டும், குழியமாக காட்சிய ளிக்கிறது. இச்சாலை நீண்ட காலமாக சீரமைக்கப்படா மலேயே உள்ளது. இவ்வழியாக செல்லும் அரசு, தனியார் பேருந்துகள், பள்ளி, கல்லூரி வாகனங்களை இயக்கவே சிரமமாக உள்ளதென, வாகன ஓட்டிகள் கூறுகின்றனர். சாலை மோசமான நிலையில் உள்ளதால் ஊர்ந்து செல்லும் வாக னங்களால் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், முதியவர் கள் கர்ப்பிணிகள் ஆகியோர் உரிய நேரத்திற்கு செல்ல முடியா மல் தவித்து வருகின்றனர். எதிரே வரும் வாகனங்களுக்கு வழி விட்டு நின்றால் மழைக்காலங்களில் உடல் முழுவதும் சேறாகி விடும் அவல நிலை உள்ளது. இந்த தார்ச்சாலையானது கடந்த 35 வருடங்களுக்கு முன்பு அமைக்கப்பட்டது. ஆனால், இதுவரை சீரமைக்க அரசு முன்வரவில்லை. மாவட்ட நிர்வா கத்திடம் பலமுறை புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. எனவே, இந்த தார்ச்சாலையை உடனடியாக சீர மைக்க வேண்டும், என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி யுள்ளனர்.
விடுதி மாணவர்களுக்கு தரமான உணவு அமைச்சர் கோவி.செழியன் பேட்டி
விடுதி மாணவர்களுக்கு தரமான உணவு அமைச்சர் கோவி.செழியன் பேட்டி கோவை, நவ.23- மாணவர்கள் - பேராசிரியர்கள் அடங்கிய குழு அமைக் கப்பட்டு விடுதி மாணவர்களுக்கு தரமான உணவு அளிக்கப் படும் என அரசு கலைக் கல்லூரி மாணவர் விடுதியில் அமைச் சர் கோவி.செழியன் பேட்டியளித்தார். கோவையில் நடைபெற்ற உயர் கல்வித்துறை பங்களிப் போர் கலந்தாய்வுக் கூட்டத்தில் வெள்ளியன்று பங்கேற்ற தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன், இரவு பந்தய சாலை பகுதியிலுள்ள அரசு கலை கல்லூரி மாணவர்கள் விடுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். மாண வர்கள் தங்கும் அறைகளை பார்வையிட்ட அவர் மாணவர்களி டம் கலந்துரையாடி அவர்களுக்கான குறைகளை கேட்டறிந் தார். அப்போது மாணவர்கள் தரப்பில் தரமான உணவு வழங்க வேண்டும், கழிப்பிடங்கள் தூய்மைப்படுத்த வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது. அவற்றை கேட்ட அமைச்சர், உணவுகள் தரமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். மேலும், விடுதியின் இரண்டாம் தளத்தில் உரிய பராமரிப்பின்றி உள்ள கழிவறை களை நேரில் பார்வையிட்டு அவற்றை ஓரிரு தினங்களில் சீர மைக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார். இதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச் சர், மாணவர்களுக்கான தரமான உணவுகள் வழங்குவதற் காக மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டு என்னென்ன உணவுகள் வழங்கப்படும் என்ற பட்டியல் தயாரிக்கப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படும். கழிப்பிட வசதிகளுக்கு இரண்டு மூன்று நாட்களில் துரித நடவடிக்கை மேற்கொள்ள துறை ரீதியாக விடுதி காப்பா ளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாணவர்களின் நலன் சார்ந்த செயல்கள் மாணவர்களின் கருத்துக்கு ஏற்ப செய்து தரப்படும். முதல்வரின் ஆணைக்கிணங்க, தமிழகம் முழுவ தும் இது போன்று மாணவர் விடுதிகளை ஆய்வு செய்து துரித நடவடிக்கைகள் எடுப்பதற்கு அறிவுறுத்தி வருவதாக வும் இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என வும் கேட்டுக்கொண்டார்.
வீடு வீடாக வாக்காளர் சரிபார்க்கும் பணி 97 சதம் முடிந்ததாக தகவல்
வீடு வீடாக வாக்காளர் சரிபார்க்கும் பணி 97 சதம் முடிந்ததாக தகவல் திருப்பூர், நவ. 23 – திருப்பூர் மாவட்டத்தில் வாக்காளர் விபரம் சரி பார்க்கும் பணி 96.61 சதவிகிதம் முடிந்து விட்டதாக வாக்காளர் பட்டியல் பார்வையாளர் மற்றும் தமிழ்நாடு காதி மற்றும் கிராமத் தொழில் வாரிய முதன்மைச் செயல் அலுவலர் பி.மகேஸ்வரி தெரிவித்திருக்கிறார். திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சனியன்று நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் வாக்காளர் சேர்ப்பு முகாமினைப் பயன்படுத்தி 18 வயது பூர்த்தியடைந்த அனைவரையும் வாக் காளர்களாக பதிவு செய்திடவும், பெயர் மற்றும் முகவரி மாற் றம், திருத்தம் தொடர்பாக முறையான விண்ணப்பங்களை வழங்கிடவும் ஒத்துழைக்க வேண்டும் என பி.மகேஸ்வரி தெரி வித்தார்.
மின் இணைப்பு வழங்க மின் வாரியம் காலதாமதம்: உடுமலை குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் புகார்
உடுமலை, நவ.23 - விவசாயிகளுக்கு தமிழக அரசின் இலவச மின் இணைப்பு வழங்காமல், காலதாமதம் செய்யும் மின்வாரிய அதி காரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண் டும் என தமிழ்நாடு விவசாய சங்கத்தி னர் உடுமலையில் வெள்ளியன்று நடை பெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத் தில் வலியுறுத்தி உள்ளனர். உடுமலை வருவாய் கோட்டாட்சியர் குமார் தலைமையில் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் கடந்த 2022ஆம் ஆண்டு முதல் விவசாய விளைநிலங்களுக்கு தமிழக அரசு இலவச மின் இணைப்பு வழங்கும் என அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி மின் இணைப்புகளை வழங்காமல் உள்ள மின் வாரிய அதிகாரிகளின் செயல்பாடு கள் கண்டனத்திற்குரியது. உடனடியாக விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இயந்திரங்கள் பழுதாகி, கடந்த இரு ஆண்டுகளாக இயங்காமல் உள்ள அம ராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் சுமார் 1356 ஏக்கர் கரும்பு அறவைக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பல நூறு ஏக்கர் கரும்புகளை பதிவு செய்ய விவ சாயிகள் காத்திருக்கின்றனர். எனவே இந்த ஆண்டு சர்க்கரை ஆலையை இயக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். உடுமலை மற்றும் மடத்துக்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் செயல்ப டும் நில அளவை பிரிவில் வேலை செய் யும் அதிகாரிகள் விவசாயிகள் மற்றும் பொது மக்களிடம் பணம் பெற்றுக் கொண்டு அளவீடு செய்வதாகவும், பணம் தராத விவசாயிகளின் நிலங் களை அளவீடு செய்வதில்லை. பிஏபி பிரதான கால்வாய் முதல் கிளை கால் வாய்களை சுத்தம் செய்ய ஊரக வேலை திட்ட தொழிலாளர்களை பயன்படுத்த வேண்டும். கடந்த மாதம் பெய்த மழைக்கு விளைநிலங்கள் மற்றும் குடி யிருப்புகளுக்குள் மழை நீர் சென்ற தற்கு காரணம், அனைத்து நீர் வழித்த டங்களும் புதிய வீட்டுமனைக்காக முற் றிலும் அழித்துவிட்டதே. லாபநோக்கில் அழிக்கப்பட்ட நீர் வழித்தடங்களை வருவாய்த்துறை ஆவணங்களின் படி மீட்க வேண்டும். குடிமங்கலம் பகுதி யில் ஆவின் பால் நிலையம் அமைக்க வேண்டும். கிராமங்களின் இணைப்புச் சாலைகளை முறையாக பராமரிக்க வேண்டும். இந்தக் கூட்டத்தில் மிகவும் முக்கியமாக விளைநிலங்களை சேதப் படுத்தும் காட்டுபன்றி, குரங்கு, மயில் மற்றும் யானைகளை கட்டுப்படுத்த வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண் டும். மேலும் பாதிக்கப்பட்ட விவசாயிக ளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் தமிழ்நாடு விவசாய சங்கத்தி னர் பேசினர். இந்த கூட்டத்தில் தமிழ்நாடு விவ சாய சங்கத்தின் நிர்வாகிகள் பாலதண்ட பாணி, உடுக்கம்பாளையம் பரமசிவம் மற்றும் அனைத்து துறை அரசு அதிகாரி கள் கலந்து கொண்டார்கள்.