districts

img

ஒன்றிய பாஜக அரசிற்கு எதிராக டிராக்டர் பேரணி

ஈரோடு, ஜன. 27- ஒன்றிய அரசைக் கண்டித்து ஐக்கிய விவசாயிகள் முன்னணி  மற்றும் அனைத்து தொழிற்சங்கங் கள் இணைந்து டிராக்டர் - இருசக்கர  வாகன பேரணியில் ஈடுபட்டனர். விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச விலை கிடைக்க சட்டம் கொண்டு வரப்படும் என  கொடுத்த வாக்குறுதியை நிறை வேற்றாத ஒன்றிய அரசைக் கண் டித்து நடைபெற்ற டிராக்டர்- இருசக்கர பேரணியானது, வில் லரசம்பட்டி நால்ரோட்டில் துவங்கி  நசியனூர் சாலை, சம்பத் நகர்,  அரசு மருத்துவமனை வழியாக,  இவிஎன் சாலையை அடுத்து ரயில்  நிலையத்தில் நிறைவடைந்தது. முன்னதாக பேரணியில், மின்சர சட்டத்திருத்தத்தை ரத்து செய் யாததைக் கண்டித்தும், 44 தொழி லாளர் நலச்சட்டங்களை 4 தொகுப் பாக மாற்றியதைத் திரும்பப் பெற வலியுறுத்தியும், அத்தியாவசிய பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி  விதிப்பை ரத்து செய்ய வேண்டும்.  விலைவாசி உயர்வைக் கட்டுப்ப டுத்த வேண்டும். பொதுத்துறை மற்றும் அரசுத்துறை நிறுவனங் களை தனியாருக்கு விற்பதைக் கைவிட வேண்டும் என முழக்கங் கள் எழுப்பப்பட்டது. பேரணிக்கு, ஈரோடு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஏ.எம்.முனு சாமி மற்றும் தமிழ்நாடு விவசா யிகள் சங்கத்தின் (சிபிஐ) மாவட்டச்  செயலாளர் சி.எம்.துளசிமணி ஆகி யோர் தலைமை வகித்தார். மேலும்,  சிஐடியு மாவட்ட துணைத் தலை வர் (சிபிஎம் மாவட்டச் செயலா ளர்) ஆர்.ரகுராமன் மற்றும் இந்திய  கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் பிரபாகர் ஆகியோர் பேரணியைத் தொடங்கி வைத்து பேசினர்.  இதேபோன்று, ஈரோடு ரயில் நிலையம் முன்பாக நடைபெற்ற பேரணி விளக்க கூட்டத்தில் சிஐ டியு மாவட்டத் தலைவர் எஸ்.சுப்ர மணியன், செயலாளர் எச்.ஸ்ரீராம்,  ஏஐடியுசி மாவட்டச் செயலாளர் சின்னச்சாமி, தொமுச மாவட்ட  துணைச் செயலாளர் ரவிச்சந்திரன், எம்எல்எப் மாவட்டத் தலைவர் காளியப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கோவை  இதேபோன்று, கோவை மாவட்டம் மாதம்பட்டி பகுதியில் துவங்கிய பேரணி, பேரூர் வட்டாட் சியர் அலுவலகம் அருகே நிறை வடைந்தது. பேரணியில் விவசாய சங்க மாவட்டத் தலைவர் இளங் கோவன், மாவட்டச் செயலாளர் வி.ஆர்.பழனிசாமி, விவசாய சங்கம்(சிபிஐ) மாவட்டத் தலைவர் சு.பழனிசாமி, பெரியசாமி, கட்சி சார்பற்ற விவசாய சங்கம் சார்பில்  மூர்த்தி, எல்.பி.எப் சார்பில் ப.மணி,  வி.ஆனந்த், வணங்காமுடி, ஐ.என். டி.யு.சி சார்பில் பி.சண்முகம், துளசி தாஸ், ஆர்.ரங்கநாதன், ஏ.ஐ.டி.யு.சி  சார்பில் எம்.ஆறுமுகம், சி.தங்க வேல், டி.எஸ்.ராஜாமணி, க.வீரா சாமி, ஜி.மனோகரன், சிஐடியு சார்பில் எஸ்.கிருஷ்ணமூர்த்தி,  கே.மனோகரன், ஆர்.வேலுசாமி உள்ளிட்ட தொழிற்சங்க கூட்டமைப் பினர் மற்றும் விவசாய கூட்டக்கு ழுவைச் சார்ந்த பலர் கலந்து கொண்டு ஒன்றிய அரசுக்கு  எதிரான முழக்கங்களை எழுப்பி னர்.