உதகை, ஜன.12- உதகையில் நிலவும் உறை பனியை கண்டு ரசிக்க ஆபத்தை உணராமல், காமராஜர் அணை பகு தியில் அத்துமீறும் சுற்றுலாப் பய ணிகளால் விபரீதம் ஏற்படும் அபா யம் உள்ளது. மலைகளின் அரசியான உத கைக்கு தமிழ்நாடு மட்டுமன்றி, வெளி மாநிலம், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பய ணிகள் வந்து செல்கின்றனர். உதகை அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தொட்டபெட்டா மலைசிகரம், படகு இல்லம் உள் ளிட்ட சுற்றுலாத் தலங்களை கண்டு ரசித்து விட்டு, பைக்காரா படகு இல்லம், பைக்காரா நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலாப் பயணிகள் வாகனங்க ளில் செல்கிறார்கள். அவ்வாறு செல்லும் வழியில், உதகை - கூட லூர் தேசிய நெடுஞ்சாலை தலை குந்தா பகுதியில் காமராஜ் அணை யின் இயற்கை எழில்மிகுந்த தோற் றத்தை கண்டு ரசித்து செல்கின்ற னர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அணைப் பகுதியில் சுற்று லாப் பயணிகள் அனுமதிக்கப்பட்ட தோடு, அணையையொட்டி குதிரை சவாரி செய்து மகிழ்ந்த னர். இதையடுத்து அணைப்பகுதி யில் உள்ள ஆபத்தை கருத்தில் கொண்டு சுற்றுலாப் பயணிகள் அணைப் பகுதிக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டு, நுழைவுவாயில் அடைக்கப்பட்டது. மேலும் சில இடங்களில் சுற்றுலாப் பயணிகள் உள்ளே செல்வதை தடுக்க தடுப்பு கள் அமைக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், கடந்த சில நாட்க ளாக அவ்வழியாக வரும் சுற்றுலாப் பயணிகள் தடுப்புகளை தாண்டி காமராஜ் அணைக்குள் அத்துமீறி இறங்கி செல்கின்றனர். அணை யில் உள்ள தண்ணீர் அருகே நின்ற படி செல்பி எடுக்கின்றனர். சிலர் பாறை மீது ஏறி புகைப்படம் எடுத்து கொள்கின்றனர். மேலும், அவர்கள் தங்களது குழந்தைகளோடு ஆபத்தை உணராமல் தண்ணீரை தொட்டு விளையாடுகின்றனர். இதுகுறித்து சமூக ஆர்வலர் கள் கூறியதாவது, காமராஜர் சாகர் பகுதியில் கேரள மற்றும் கர்நாடக மாநில சுற்றுலாப் பயணிகள் பெண் கள் அதிக அளவில் இறங்கி செல்கின்றனர். சில இடங்களில் ஜீரோ டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை நிலவுவதால் புல்வெளியில் பணி கொட்டி வெள்ளை போர்வை போல் காட்சி அளிக்கிறது. நீர் நிலை களில் காலையில் சூரிய ஒளிப்பட்டு பனி ஆவியாக செல்கிறது இதை பார்க்க சுற்றுலாப் பயணிகள் ஆர்வ முடன் வருகின்றனர். தண்ணீர் உள்ள பகுதியை யொட்டி உள்ள இடம் எப் போதும் ஈரப்பதமாகவே இருக்கும். சுற்றுலாப் பயணிகள் நிற்கும் போது, கால் இடறினால் அணைக் குள் தவறி விழும் அபாயம் உள் ளது. சமவெளி பகுதிகளில் உள்ள அணை நீர் போன்று உதகையில் தண்ணீர் கிடையாது. இங்குள்ள தண்ணீர் எப்போதும் குளிர்ச்சி யாகவே இருக்கும். இதனால் அணையில் யாரேனும் தவறி விழுந்தால் இந்த தண்ணீரில் நீந்த முடியாது, உயிருக்கு ஆபத்து ஏற் படும் நிலை உள்ளது. ஏற்கனவே சில நாட்களுக்கு முன் இப்பகுதி யில் புலி நடமாட்டம் உள்ளதாக வனத்துறை அறிவித்துள்ளது, எனவே பெரிய அளவில் விழிப்பு ணர்வு பலகைகள் வைத்து சுற்று லாப் பயணிகள் அங்கு செல்வதை தடுக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.