உதகை, டிச.28- தொடர் விடுமுறை காரணமாக சுற்றுலா பயணிகள் வருகை அதிக ரித்துள்ளதால், 3 நாட்களாக போக்கு வரத்து நெரிசலில் சிக்கி தவிப்பதாக வும், இதனை தடுக்க போலீசார் தனி திட்டம் கொண்டு வர வேண்டும் என சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள் ளனர். நீலகிரி மாவட்டத்தில் நிலவும் இத மான காலநிலையை அனுபவிக்க வும், இயற்கை வளம் மிகுந்த வனப் பகுதிகள் மற்றும் சுற்றுலா தலங்க ளைக் கண்டு ரசிக்கவும் தமிழகத்தின் பிற மாவட்டங்கள், வெளிமாநிலங் கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வரு கின்றனர். வழக்கமாக சீசன் நேரங்க ளில் மட்டும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கட்டுப்படுத்த முடியாத அளவில் இருப்பதால் போக்குவ ரத்து நெரிசலில் உதகை நகரம் திண் டாடும். இந்நிலையில் தற்போது கிறிஸ் துமஸ், புத்தாண்டு மற்றும் பள்ளி விடு முறை என தொடர் விடுமுறை விடப் பட்டதால் சுற்றுலா பயணிகள் எண் ணிக்கை கடந்த 3 நாட்களாக அதிக ரித்துள்ளது. தினசரி சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வருகின்றனர். இவர்க ளில் எண்பது சதவிகிதம் பேர் குடும் பத்தோடு வருவதால் சொந்த வாகன மான கார்களில் வருகின்றனர்.
இத னால் மார்க்கெட் சாலை, ஆட்சியர் அலுவலகம் சாலை, பேருந்து நிலை யம் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு சாலைகள் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. இதனால் அவசரத்திற்கு சென்ற ஆம் புலன்ஸ் வாகனங்கள் கூட செல்ல முடியாமல் திக்குமுக்காடின. இதுகுறித்து சுற்றுலா பயணிகள் கூறுகையில், மிகவும் ஆர்வமாக உதகைக்கு சுற்றுலா கிளம்பி வருகி றோம். ஆனால், ஒவ்வொரு முறையும் உதகையில் நாம் நினைத்த இடத் திற்கு, நினைத்த நேரத்தில் போக முடி யாமல் போய்விடுகிறது. சுற்றுலா தலங்களில் செலவழித்த நேரத்தை விட சாலைகளில் செலவழித்த நேரம் தான் அதிகமாக உள்ளது. மூன்று நாட் கள் சுற்றுலா வந்ததில் ஒரு நாள் முழு வதும் போக்குவரத்து நெரிசலுக்கு செலவானது போல் உள்ளது. உதகை மாதிரி ஒரு சர்வதேச சுற்றுலா தலத் தில் போக்குவரத்து நெரிசலை கட் டுப்படுத்த தனித்திட்டம் கொண்டு வர போலீசார் நடவடிக்கை எடுக்க வேண் டும், என்றனர். இதுகுறித்து போலீசார் கூறுகை யில், பொதுவாக வாகனங்கள் நகர்ந்து கொண்டே இருந்தால் போக் குவரத்த நெரிசல் ஏற்படுவதில்லை. ஆனால், சுற்றுலா பயணிகள் உணவு மற்றும் பொருட்கள் வாங்குவதற் காக ஆங்காங்கே சாலைகளில் வாக னங்களை நிறுத்தி விடுகின்றனர். தேவையான அளவு பார்கிங் வசதி இல்லாததாலும், சாலையோரங்க ளில் நிறுத்தப்படும் வாகனங்களாலும் தான் போக்குவரத்து நெரிசல் ஏற்படு கிறது. இருந்தாலும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த தீவிர முயற்சி செய்து வருகிறோம், என்றனர்.