சேலம், டிச.30- குளுமையான காலநிலையை அனு பவிக்கவும், திங்களன்று (நாளை) ஆங் கில புத்தாண்டை கொண்டவும் ஏராள மான சுற்றுலாப் பயணிகள் ஏற்காட்டில் குவிந்துள்ளனர். தமிழ்நாட்டிலுள்ள முக்கிய சுற்று லாத் தலங்களில் சேலம் மாவட்டம், ஏற் காடும் ஒன்று. இங்கு தமிழ்நாடு மட்டு மின்றி அண்டை மாநிலங்களான கர்நா டகா, கேரளம், ஆந்திரா, பாண்டிச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்து, ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். தற்போது பள்ளிக ளுக்கு அறையாண்டு விடுமுறை விடப் பட்டுள்ளதை தொடர்ந்து, கடந்த ஒரு வாரமாக சுற்றுலாப் பயணிகள் அதிகள வில் வந்த வண்ணம் உள்ளனர். இந்நி லையில், திங்களன்று (நாளை) ஆங் கில புத்தாண்டைக் கொண்டு சனியன்று ஏற்காட்டில் சுற்றுலாப் பயணிகள் அதி களவில் குவிந்துள்ளனர். ஏற்காடு வந்த வர்கள் இங்குள்ள அண்ணா பூங்கா, ஏரி பூங்கா, ரோஸ் கார்டன், தாவரவியல் பூங்கா, லேடி சீட், ஜென்ஸ் சீட், சேர்வ ராயன் குகை கோவில் போன்ற இடங் களை சுற்றிப் பார்த்தனர். படகு இல்லத் திலும் அதிகளவில் சுற்றுலாப் பயணி கள் படகு சவாரி செய்ய குவிந்தனர். இத னால் படகு சவாரி செய்ய வந்த சுற்றுலாப் பயணிகள் நீண்ட வரிசையில் நின்று வெகு நேரம் காத்திருந்து படகு சவாரி செய்யும் நிலை ஏற்பட்டது. மேலும், சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் அதிகளவில் வந்ததால் ஏற்காடு அண்ணா பூங்கா சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் கூட்டம் கலைக்கட்ட தொடங்கியுள்ளதால் சாலையோர வியாபாரிகள் மகிழ்ச்சிக் குள்ளாகியுள்ளனர்.