உடுமலை, ஜன.18- உடுமலை பகுதிகளில் உள்ள கோவில் கள் மற்றும் சுற்றுலா தளங்களில் மக்கள் குவிந்துள்ளனர். கானும் பொங்கலை கொண்டாடும் வகை யில் கிராமங்களில் பழமையான கோவில்க ளுக்கு சென்று ஊர் சலகெருதுகளுக்கு சிறப்பு வழிபாடுகள் செய்வதும், அப்பகுதி யில் ஆவாரம்பூக்களை பறித்துக்கொண்டு தங்களின் வீடுகளில் வைத்து வழிபடுவது வழக்கம். இந்நிலையில், குடிமங்கலம் மால கோவிலுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் தங்களுடைய ஊர் எருதுகளை அழைத்து வந்து வழிபட்டார்கள். இதே போல் கொங்க லக்குறிச்சி செல்லாண்டியம்மன் கோவிலி லும் வழிபாடுகள் நடைபெற்றது. மேலும் திரு மூர்த்திமலை, அமராவதி அணை மற்றும் மூணார் செல்லும் வழியில் இருக்கும் கோடந் தூர் மலையிலும் சுற்றுலாப் பயணிகள் குவிந் தார்கள்.