districts

img

ஆழியார் அணை, ஆற்றுப்பகுதியில் குளிக்கும் சுற்றுலா பயணிகள்

கோவை, பிப்.4- கோவையை அடுத் துள்ள ஆழியார் அணை மற்றும் ஆற்றுப்பகுதியில் ஆபத்தை உணராமல் குளிக்கும் சுற்றுலா பயணி களை கண்காணிக்க வேண்டுமென சமூக ஆர்வ லர்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.  கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் அணைக்கு உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து செல் கின்றனர். ஆழியார் அணையை சுற்றி பார்க்க  வரும் பயணிகள் பலர்  ஆற்றோர பாலத்தின்  கீழ் பகுதி மற்றும் அணையை ஒட்டியுள்ள  இடங்களில் குளிக்கின்றனர். அந்த இடங் களில் பயணிகள் குளிக்க தடை உள்ளது. ஆனால், சில சுற்றுலா பயணிகள் தடையை மீறி குளிக்கின்றனர். ஆழமான பகுதி மற்றும்  மணல் நிறைந்த சேறு பகுதியாக இருப்ப தால் மரணம் ஏற்படுகிறது.  இந்நிலையில், அணையில் தற்போது தண்ணீர் அதிகமாகவே உள்ளது. விடுமுறை நாட்களில் வரும் சுற்றுலா பயணிகளில் சிலர் நீர்நிலையை பார்த்து ஆனந்தத்தில் குளிக்க ஆழமான பகுதிக்கு செல்வதால் சுற்றுலா பயணிகளின் உயிருக்கு உத்தர வாதம் இல்லாமல் போகிறது. ஆழியார்  அணைப்பகுதியில் குளிக்கும் சுற்றுலா  பயணிகள் அடுத்தடுத்து பலியாகும்  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்துகிறது.  அணையின் மேல் பகுதி, பூங்கா, ஆழி யாறு பாலம், சுற்றுலா மாளிகை பின்பகுதி  உள்ளிட்ட பல இடங்களில், காவல்துறை  சார்பில் சுமார்  6 ஆண்டுகளுக்கு முன்பு  விழிப்புணர்வு  பதாகைகள்  வைக்கப்பட்டன. ஆனால், அவை தற்போது மாயமான நிலை யில் உள்ளது. மொத்தம் 120 அடி கொண்ட  ஆழியார் அணையின் நீர்மட்டம் சுமார் 98 அடியாக உள்ள நிலையில், விதிமீறி குளிக்கும் சுற்றுலா பயணிகள், தண்ணீரில் சிக்கி கொள்ளும் அவலம் ஏற்படுகிறது. மேலும், ஆழியாரில் துவங்கி கேரள  மாநிலம் பாலக்காடு வரையிலும் உள்ள ஆழி யாற்றில் ஆங்காங்கே தடுப்பணைகள் உள்ளன. இங்கு தண்ணீர் அதிகளவு செல்லும் போது, சுற்றுலா பயணிகள் குளிக்கின்றனர். ஆனால், ஆற்றில் குளிக்கும் வெளியூர் சுற்றுலா பயணிகளில், ஆழம் எது என தெரி யாமல் இருப்பதால், சில நேரத்தில் விபரீத  சம்பவம் நேரிடுகிறது. எனவே, ஆழியார் அணை மட்டுமின்றி, ஆழியாற்று பகுதியிலும் மரணங்களை தடுக்கவும், அங்கு வரும் சுற்றுலா பயணி களை பாதுகாக்கவும், எச்சரிக்கை பதா கைகள் அமைப்பது உள்ளிட்ட நடவடிக்கை மேற்கொண்டு முறையாக கண்காணித்து தடுக்கவும், முறைப்படுத்தவும் வேண்டு மென சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.