districts

img

பரிசல் இயக்க 5ஆவது நாளாக தடைவிதிப்பு சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

தருமபுரி, ஆக.20- ஒகேனக்கல்லில் ஞாயிறன்று சுற்றுலா பயணிகள் குவிந்த நிலையில், 5ஆவது நாளாக பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.  கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதி யில் மழை பெய்து வருகிறது. இதனால் கே.ஆர்.எஸ், கபிணி அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்தது. இதையடுத்து, ஞாயி றன்று காலை கே.ஆர்.எஸ் அணையில் இருந்து 12,776 கனஅடியும், கபிணியில் இருந்து 5 ஆயிரம் கனஅடி என மொத்தம் 17,776 கனஅடி தண்ணீரை தமிழக காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் தருமபுரி மாவட்டம், ஒகேனக் கல்லில் சனியன்று 15 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவி, சினி பால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதன் காரணமாக காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.  இந்நிலையில், ஞாயிறன்று விடுமுறை என்பதால் ஒகேனக்கல் சுற்றுலா தளத்திற்கு காலை முதலே சுற்றுலா பயணிகள் வருவது  அதிகரித்து காணப்பட்டது. சுற்றுலா பயணிகள் தொங்கு பாலத்தில் நின்று அருவி களில் தண்ணீர் விழுவதையும் கண்டு ரசித் தனர். இந்நிலையில், ஒகேனக்கல்லுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணி களின் பாதுகாப்பு கருதி காவிரி ஆற்றில் பரிசல் இயக்க 5ஆவது நாளாக மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.  இதனால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.