உடுமலை, ஜூலை 27- உடுமலை மலைப்பகுதியில் மழை இல்லாத காரணத் தால், பஞ்சலிங்க அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க 27 ஆம் தேதி முதல் அனுமதிக்கபட்டுள்ளனர். உடுமலை திருமூர்த்தி மலையில் சுற்றுலாப் பயணிகள் அரு வியில் குளிக்கும் வகையில் செயற்கையாக உருவாக்கப் பட்ட பஞ்சலிங்க அருவியில் மழை காலங்களில் திடீர் வெள் ளம் ஏற்படும் அபாயம் உள்ளதால், கோவில் நிர்வாகத் தின் சார்பில் மழை பெய்யும் போது சுற்றுலாப் பயணி கள் செல்ல தடை விதிப்பார்கள். கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவ மழை பெய்து வந்ததால் மலை அடிவாரத்தில் இருக்கும் கோவில் வரை வெள்ளம் சூழ்ந்தி ருந்தது. இதனால், சுற்றுலாப் பயணிகள் கோவில் மற்றும் பஞ்சலிங்க அருவிக்கு செல்ல தடைவிதிக்கபட்டிருந்தது. இந்நிலையில், மலைப்பகுதியில் மழை இல்லாத தால், பஞ்சலிங்க அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க 27 ஆம் தேதி முதல் அனுமதிக்கபட்டுள்ளனர்.