உதகை, பிப்.20- நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் சனி யன்று நடைபெற்ற போதிலும், வெளி மாநில சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருந்ததால் உதகையில் சுற்றுலா தலங்கள் நிரம்பி வழிந்தன. நீலகிரி மாவட்டத்திற்கு நாள் தோறும் வெளி, மாவட்டங்கள் மாநி லங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். குறிப்பாக அண்டை மாநிலங்களான கேரளா மற் றும் கர்நாடகா மாநிலங்களில் இருந்து அதிகளவு சுற்றுலா பயணிகள் வரு கின்றனர். வார இறுதி நாட்களான சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழ மைகளில் அதிகளவு சுற்றுலா பயணி கள் வருவது வழக்கம். இந்நிலையில், தமிழகம் முழுவ தும் சனியன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதனால், தமி ழகத்தின் பிற பகுதிகளில் இருந்து பொதுமக்கள் உதகை வருவதை தவிர்ப்பார்கள் என எதிர்பார்க்கப் பட்டது. தேர்தல் அதிகாரிகளின் கெடு பிடி அதிகமாக இருந்ததால், வெளி மாநில சுற்றுலா பயணிகள் வருகையும் குறைந்து காணப்படும் என நம்பப் பட்டது. ஆனால், வார விடுமுறை நாட்களில் உதகைக்கு வரும் சுற்றுலா பயணிகள் போன்று, சனியன்றும் உத கைக்கு ஏராளமான சுற்றுலா பயணி கள் வருகை தந்தனர். குறிளப்பாக, அண்டை மாநிலமான கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இருந்து அதிகளவு சுற்றுலா பயணிகள் வந்த னர். இதனால் உதகை தாவரவியல் பூங்கா, படகு இல்லம் உள்ளிட்ட அனைத்து சுற்றுலா தலங்களிலும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட் டது. சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக காணப்பட்டதால் உதகை யில் உள்ள வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.