districts

img

அடிப்படை வசதி இல்லாத தொப்பூர் வாரச்சந்தை அவதிக்குள்ளாகும் வியாபாரிகள், பொதுமக்கள்

தொப்பூர் வாரச்சந்தையில் எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாததால், வியாபாரிகளும், சந்தைக்கும் வரும் பொதுமக்களும் அவதிக்குள்ளாகியுள்ளனர். உடனடியாக அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.

தருமபுரி மாவட்டம், நல்லம் பள்ளி வட்டம், தொப்பூரில் வாரந்தோறும் திங்கட் கிழமை சந்தை நடைபெறுவது வழக்கம். காலை முதல் மாலை  வரை காய்கறிகள் மற்றும் அத்தி யாவசிய பொருட்கள் விற்பனை  நடைபெறும் இச்சந்தைக்கு, தொப்பூர் மற்றும் அதனை சுற்றி யுள்ள கிராமப்பகுதியிலிருந்து பொதுமக்கள் அதிகளவில் பொருட்களை வாங்குவதற்கு வந்து செல்கின்றனர். இங்கு நல் லம்பள்ளி, தருமபுரி, மேச்சேரி, மேட்டூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த வியாபாரிகளும் அதிக அளவில் பொருட்களை விற் பனை செய்வதற்கும், வாங்குவ தற்கும் வருகின்றனர்.  இந்த வாரச்சந்தை பகுதிகளில் முட்புதர்கள் மற்றும் செடி, கொடி கள் அடர்ந்து காணப்படுவதால், பாம்பு உள்ளிட்ட விஷப்பூச்சிகள் அதிகளவில் இருக்கின்றன. இத னால் சந்தையில் கடை வைப்ப தற்கே பலர் அச்சப்பட்டு, சாலை  பகுதிகளில் கடை வைத்து வரு கின்றனர்.

இதனால், வாரச்சந் தைக்கு என்று ஒதுக்கப்பட்ட வளா கம் வெறிச்சோடி காணப்படுகிறது. போக்குவரத்துக்காக உள்ள சாலையில் கடை வைத்து வியாபா ரம் செய்ய வேண்டிய நிலை வியா பாரிகளுக்கு ஏற்பட்டுள்ளது. இந்த  வாரச்சந்தையில் பொதுமக்கள் மற் றும் வியாபாரிகளுக்கு தேவை யான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என வியா பாரிகள் மற்றும் பொதுமக்கள் வலி யுறுத்துகின்றனர்.  இதுகுறித்து வியாபாரிகள் கூறு கையில், வாரச்சந்தையின் ஒப்பந் ததாரர் மற்றும் பொதுமக்கள், வியா பாரிகள் ஊராட்சி மன்ற தலை வர் மற்றும் வட்டார வளர்ச்சி  அலுவலர்களிடம் பலமுறை புகார் அளித்தும், எந்தவித நடவடிக்கை யும் எடுக்கப்படவில்லை. இதே நிலை தொடர்ந்தால் இப்பகுதியில் வியாபாரிகள் கடை வைப்பது குறைந்து விடும். பொதுமக்களும் சந்தைக்கு வருவது நாளடைவில் குறைந்துவிடும். எனவே, உடன டியாக நடவடிக்கை எடுத்து வார சந்தைப்பகுதி வளாகங்களை தூய்மை செய்து, அடிப்படை வசதி களை செய்து கொடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.  ஏழை, எளிய, உழைப்பாளி மக் களின் வரப்பிரசாதமான வாரச் சந்தையை பாதுகாக்க மாவட்ட நிர் வாகம் தலையிட வேண்டும் என்கிற கோரிக்கை பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் இருந்து வலு வாக எழுந்துள்ளது. 

ஜி.லெனின், தருமபுரி.