districts

img

கழிப்பிடங்களை தூய்மை செய்யும் எந்திரம்

நீலகிரி, மார்ச் 29- கழிப்பிடங்களை தூய்மை செய்யும் ஊழியர்கள், இது நாள்வரை கைகளிலேயே தண்ணீர் கொண்டு தூய்மை செய்து  வந்த நிலையில், தூய்மை பணிக்கு தண்ணீர் பீய்ச்சி அடிக்கும்  எந்திரம் வாங்கப்பட்டது.  நீலகிரி மாவட்டம், கோத்தகிரி மற்றும் அதனை சுற்றி யுள்ள பகுதிகளில் உள்ளூர் பொதுமக்கள் மற்றும் வெளியூர்  சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டிற்க்காக பொது கட்டண  கழிப்பிடங்கள் இயங்கி வந்தன. இந்த கழிப்பிடங்களை தூய்மை செய்யும் ஊழியர்கள் இது நாள்வரை கைகளி லேயே தண்ணீர் கொண்டு சுத்தம் செய்து வந்தனர். பொது  கழிப்பிடங்களை ஊழியர்கள் கைகளில் சுத்தம் செய்வதற்கு  சமூக நல அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.  இதையடுத்து, கழிப்பிடங்களை தூய்மை  செய்யும் ஊழி யர்களுக்கு நவீன கருவிகளை வழங்க வேண்டி கோத்தகிரி  பேரூராட்சி செயல் அலுவலர், செயல் அலுவலர் நீண்ட நாள்  முயற்சிக்கு பிறகு கழிப்பிடங்களை சுத்தம் செய்யும் தண்ணீர்  பீய்ச்சி அடிக்கும் எந்திரம் வாங்கப்பட்டது. இந்த எந்தி ரத்தின் சோதனை ஓட்டம் நடைபெற்றது.  இந்த எந்திரம் எந்த அளவு தண்ணீரை பீய்ச்சி அடித்து தூய்மை செய்கிறது என்பதையறிந்து தேவைக்கேற்றார் போல் மேலும் சில எந்திரங்களை வாங்க நடவடிக்கை மேற் கொள்ளபடும் என செயல் அலுவலர் தெரிவித்தார்.