districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

ஜன.21ல் வினாடி - வினா போட்டி பதிவு செய்ய இன்றே கடைசிநாள்

சேலம், ஜன.18- தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, சேலம் மாவட் டத்தில் ஜன.21 ஆம் தேதியன்று வினாடி வினா போட்டிகள் நடத்தப்பட உள்ளது. இதுகுறித்து மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியரு மான செ.கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி யிருப்பதாவது, தமிழ்நாட்டில் வாக்காளர்கள் தேர்தல் நடை முறையில் பங்கேற்பதை அதிகரிக்கும் நோக்கில், 14 ஆவது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, ஸ்வீப் (SVEEP) திட் டத்தின்படி மாநில அளவிலான பொது மக்களுக்கான வினாடி -  வினா போட்டி ஜன.21 ஆம் தேதியன்று (ஞாயிற்றுக்கிழமை)  காலை 11 மணி முதல் 11.15 மணி வரை நடத்துவதற்கு ஏற்பாடு  செய்யப்பட்டுள்ளது. இந்தப் போட்டியில் பங்கேற்க விருப்ப முள்ளவர்கள், https://www.erolls.tn.gov.in/Quiz2024 என்ற இணையதளத்தில் தங்கள் விவரங்களை வெள்ளிக் கிழமைக்குள் (இன்று) பதிவு செய்ய அனுமதிக்கப்படுவர். இதில் கலந்து கொள்வதற்கு பங்கேற்பாளரின் கைப்பேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியானது கட்டாயமாக உள் ளீடு செய்யப்பட வேண்டும். “இந்தியாவில் தேர்தல்கள்” என்ற தலைப்பின் அடிப்படையில் இந்த போட்டியானது நடத்தப்பட வுள்ளது. மேலும், விவரங்களுக்கு 1800 - 4252 – 1950 என்ற  மாநில உதவி மைய எண்ணிலோ, 1950 என்ற மாவட்ட உதவி  மைய எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப் பட்டுள்ளது.

 “சாப்பாட்டு ராமன் போட்டி”

தருமபுரி, ஜன.18- தமிழர்களின் முக்கிய திருநாளான பொங்கல் திருநாள் கடந்த மூன்று நாட்களாக வெகு விமர்சையாக கொண்டாடப் பட்டது. கிராமங்கள் தோறும் கலைநிகழ்ச்சிகளுடன், விளை யாட்டு போட்டிகள் நடைபெற்றன. அந்த வகையில் தரும புரி அடுத்த முக்கல் நாயக்கன்பட்டியில் கயிறு இழுக்கும் போட்டி, செங்கல் தூக்கி நிற்கும் போட்டி உள்ளிட்ட பல்வேறு தொடர் விளையாட்டுப் போட்டிகள், நடத்தப்பபட்டது. அதன் ஒருபகுதியாக, காணும் பொங்கலை முன்னிட்டு ‘சாப்பாட்டு ராமன் போட்டி’ என்ற பெயரில் அதிக அளவில் சாப்பிட்டு  சாதனை படைப்பவர்களுக்கு பரிசு வழங்கும் போட்டி நடத்தப் பட்டது. போட்டியில், 1 கிலோ சிக்கன் பிரியாணியை 5 நிமி டத்தில் சாப்பிட்டு முடிக்கும் போட்டி நடந்தது. இதில் சிறிய வர் முதல் பெரியவர் வரை ஏராளமானோர் கலந்து கொண்ட னர். பெண்களுக்கான போட்டியில் ஷாலினி (15) என்பவர், 1 கிலோ சிக்கன் பிரியாணி 4 நிமிடத்தில் சாப்பிட்டு முதல் பரிசை பெற்றார். அதைத்தொடர்ந்து, 1 கிலோ சிக்கன் வரு வலை குறைந்த நேரத்தில் சாப்பிடும் போட்டி நடந்தது. இப்போட்டியில் ஏராளமான இளைஞர்கள் பங்கேற்றனர்.

வெறிநாய்கள் கடித்ததில் 7 ஆடுகள் பலி

நாமக்கல், ஜன.18- பள்ளிபாளையம் அடுத்த காவிரி கரை யோரம் அருகே வெறி நாய்கள் கடித்ததில் ஏழு ஆடுகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி விவசாயிகளிடையே பெரும் சோகத்தை ஏற் படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அடுத்துள்ள, ஆவத்திப்பாளையத்தைச் சேர்ந்த விவசாயிகள், தங்கள் நிலப்பகுதி யில் விவசாயப் பணிகள் நடைபெற்று வருவ தால், தங்கள் ஆடுகளை காவிரி ஆற்றங்கரை யோரம் மேய்ச்சலுக்கு விடுவது வழக்கம். அந்த வகையில், செவ்வாயன்று மூன்று விவ சாயிகள் கிட்டத்தட்ட 20க்கும் மேற்பட்ட ஆடு களை காவிரி ஆற்றங்கரையோரம் மேய்ச்ச லுக்கு விட்டிருந்தனர். வழக்கம்போல மாலை  வீடு திரும்பிவிடும் ஆடுகள், அன்று வீடு திரும் பாததால் ஆட்டின் உரிமையாளர்களான கிருஷ்ணவேணி, சரவணன் உள்ளிட்டோர் ஆற்றங்கரைக்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது, சுமார் 7 ஆடுகள் பலத்த காயங்க ளுடன் பரிதாபமாக இறந்து கிடந்தது. மேலும்,  நான்கு ஆடுகள் மாயமாகி இருந்தது.  இத னால், அதிர்ச்சி அடைந்த விவசாயிகள் இது தொடர்பாக வருவாய்த்துறை அதிகாரிக்கு தகவல் தெரிவித்தனர். இதனை அடுத்து தகவல் அறிந்த கால்நடை மருத்துவர்கள் ஆடுகளை பிரேத பரிசோதனை செய்தனர். பரிசோதனையில், ஆடுகள் அனைத்தும் வெறிநாய் கடித்து இறந்தது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து, காவிரி கரையோரம் ஏழு ஆடுகளும் புதைக்கப்பட்டது. மேலும், காயமடைந்த 3 ஆடுகளுக்கு கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். இதுகுறித்து ஆடுகளை இழந்த உரிமை யாளர்கள் கூறுகையில், இப்பகுதியில் தெரு நாய்கள் கூட்டம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. சில நாய்கள் தெருவில் வருவோர், செல்வோர் அனைவரையும் கடிக்கிறது. இது குறித்து பலமுறை புகார் தெரிவித்தும் நாய் களை பிடிப்பதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்வதில்லை. இப்போது எங்க ளின் ஆடுகள் அநியாயமாக உயிரிழந்துள் ளன. இதற்கான இழப்பீட்டை அரசு தர வேண் டும், என்றனர்.

துணிக்கடையில் ரூ.14.62 லட்சம் கொள்ளை

தருமபுரி, ஜன.18- தருமபுரியில் செயல்பட்டு வரும் வரும் பிரபல துணிக்கடையில் ரூ.14 லட்சத்து 62  ஆயிரம் கொள்ளை போன சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். தருமபுரி நெடுஞ்சாலையில் பிரபல தனி யார் துணிக்கடை ஒன்று இயங்கி வருகிறது. பொங்கலையொட்டி வங்கி விடுமுறை என் பதால் விற்பனையான தொகை ரூ.14 லட்சத்து 62 ஆயிரத்து 500 ரூபாயை கடை ஊழியர்கள் கடையில் வைத்து பூட்டிவிட்டு சென்றுவிட்ட னர். இந்நிலையில், கடையின் மேற்கூரையை உடைத்து நுழைந்த அடையாளம் தெரியாத நபர்கள் மொத்த பணத்தையும் திருடிச் சென்றுள்ளனர். இதனிடையே கடைக்கு வந்த ஊழியர்கள், பணம் திருடுபோனதை கண்டு, அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து கடை ஊழியர் ரியாஸ் அகமது தருமபுரி நகர காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த தருமபுரி காவல் நிலைய ஆய்வாளர் சரவணன், உதவி ஆய் வாளர் விஜயசங்கர் ஆகியோர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கொலை முயற்சி வழக்கில் ஒருவர் கைது

தருமபுரி, ஜன.18-  பாலக்கோடு அருகே மது தர மறுத்தவரை கத்தியால் குத்தியவரை போலீசார் கைது செய்தனர். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அண்ணா நகரைச் சேர்ந்த ராஜா மகன் சத்தியமூர்த்தி (22). இவர் நண்பர்க ளுடன் அதே பகுதியில் உள்ள கோயில் அருகே மது அருந் திக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த தொழிலாளி செல்வம் (24) என்பவர், சத்தியமூர்த்தியிடம் மது கேட்டுள் ளார். ஆனால் சத்தியமூர்த்தி கொடுக்க மறுத்து விட்டார்.  இதுதொடர்பாக அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. தகராறு முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த செல்வம் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால், சத்தியமூர்த்தியின் வயிற் றில் குத்தினார். இதில் படுகாயமடைந்த அவர், தருமபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றிய புகாரின் பேரில், பாலக்கோடு போலீசார் கொலை முயற்சி உள்ளிட்ட  2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, செல்வத்தை கைது  செய்தனர்.

கூட்ஸ் ரயிலில் வந்த 2,600 டன் சோயா

நாமக்கல், ஜன.18-  நாமக்கல் ரயில் நிலையத்திற்கு, கூட்ஸ் ரயில் முலம் 2,600 டன் சோயா வந்தடைந்துள்ளது. நாமக்கல் மாவட்டம். சேந்தமங்கலம் சாலையில் நாமக் கல் ரயில் நிலையம் அமைந்துள்ளது. இங்கு மற்ற மாநிலங்க ளில் இருந்து அவ்வபோது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு ரேசன் அரிசியும், கோழிப்பண்ணைகளுக்கு மக்காச்சோளம், சோயா, தவிடு, புண்ணாக்கு ஆகியவை சரக்கு ரயில் மூலம் கொண்டு வரப்படும். அதன்படி, நாமக் கல் ரயில் நிலையத்திற்கு மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் இருந்து சுமார் 2,600 டன் சோயா கூட்ஸ் ரயில் மூலம் வந்தது.  51 பெட்டிகளில் வந்த சோயா மூட்டைகளை தொழிலாளர் கள் 110 லாரிகளில் ஏற்றினர். பின்னர், அவற்றை கோழி தீவன அரவை ஆலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டது. இதற்காக புதனன்று காலையிலேயே அதிக தொழிலாளர்கள் ரயில் நிலையத்திற்கு வந்து சுமைப்பணிகளை மேற்கொண்டனர். 

ரத்த காயங்களுடன் மீட்கப்பட்ட ஆண் சிசு!

சேலம், ஜன 18 - முட்புதரில் உயிருடன் ரத்த காயங்களுடன் ஆண் சிசு கிடந்த நிலையில், அப்பகுதி மக்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே ராமநாயக்கன்பாளையம் வடக்கு தெரு பகுதியில் அதிகளவில் முட்புதர் உள்ளது. இந்நிலையில், அதேப்பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் அவ்வழியாக சென்றுள்ளார். அப்போது அந்த முட்புதரிலிருந்து ஒரு குழந்தையின் அழுகை சத்தம் கேட்டுள்ளது. இதையறிந்த பெண் இதுகுறித்து அங்கிருந்தவர்களிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அப்பகுதியிலுள்ள பெண்கள் முட்புதரில் தேடிய போது, அங்கே ரத்தகாயத்துடன் சில மணி நேரத்துக்கு முன்பு பிறந்திருந்த ஆண் சிசு கிடந்துள்ளது. இதைத்தொடர்ந்து, அப்பகுதி பெண்கள் அந்த குழந்தையை மீட்டு, முதலுதவி சிகிச்சை அளித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வட்டாட்சியர் வெங்கடேசன் அந்த சிசுவை மீட்டு, ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்தார். வருவாய் கோட்டச்சியர் ரமேஷ், சிசுவை மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இதுகுறித்து ஆத்தூர் ஊரக போலீசார் பிறந்த சில மணி நேரத்திலேயே   ஆண் சிசுவை முட்புதரில் வீசி சென்றது யார்? எதற்காக வீசி சென்றார்கள்? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அரசு தொடக்கப்பள்ளியில் திருட்டு

தருமபுரி, ஜன.18- அரூர் அருகே அரசு தொடக்கப் பள்ளி சமையல் கூடத்தின் பூட்டை உடைத்து சமையல் பாத்திரங்கள் திருடப்பட்ட சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தருமபுரி மாவட்டம், அரூர் அருகே உள்ள மருதிப்பட்டி கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளி சமையல் கூடத்தின் பூட்டை உடைத்து சமைப்பதற்காக வைக்கப்பட்டிருந்த பாத்திரங்களை அடையாளம் தெரியாத நபர்கள் திருடி சென்றுள்ளனர். இதையடுத்து பொங்கல் பண்டிகை முடிந்து வியாழனன்று காலை சமைப்பதற்காக, பணியாளர்கள் சென்று பார்த்தபோது சமையல் அறை கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதன்பின் அருகில் இருந்தவர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அங்கிருந்தவர்கள் வந்து பார்த்தபோது, சமையல் பாத்திரங்கள் திருடுபோனது தெரியவந்தது. இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஊரக வாழ்வாதார இயக்க வட்டார மேலாளர் அறிவழகன் ஆகியோருக்கு அங்கிருந்தவர்கள் தகவல் தெரிவித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் மொரப்பூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் மொரப்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டு, சமையல் பொருட்களை திருடிச்சென்ற நபர்களை தேடி வருகின்றனர்.

திருப்பூரில் இன்று தனியார்துறை  வேலைவாய்ப்பு முகாம்

திருப்பூர், ஜன.18- சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் வளா கம் 4 ஆவது தளத்தில் அறை எண் 439 ல் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் நடை பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, சிறிய அளவி லான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று நடை பெற உள்ளது. இந்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகா மில் தனியார்துறை வேலையளிப்பவர்கள் கலந்து கொண்டு  வேலை தேடுபவர்களை தேர்வு செய்ய வருகை தர இருக்கிறார் கள். இம்முகாமில் வேலை நாடுபவர்கள் தங்கள் வேலை வாய்ப்பு அலுவலக பதிவு அட்டை மற்றும் சுயதகவல்  படிவத் துடன் கலந்து கொள்ளலாம். எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள்  முதல் முதுநிலை பட்டதாரிகள் வரை டிப்ளமோ படித்தவர்கள்  மற்றும் தையல் பயிற்சி பெற்றவர்கள் கலந்து கொண்டு பயன் பெறலாம். மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவ ழிகாட்டும் மையத்தில் நடைபெறும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமிற்கு வரும் போது புதிய பதிவு மற்றும் பதிவு  புதுப்பித்தல் செய்து கொள்ளலாம். மேலும் தகுதியுடைய வர்கள்  வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை விண்ணப் பம் பெற்று உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். தனி யார் துறைகளில் வேலையில் சேருவதால் தங்களின் வேலை வாய்ப்பு அலுவலக பதிவு எண் இரத்து செய்யப்படமாட் டாது. இப்பணி முற்றிலும்  இலவசமானது. மேலும், விவரங்க ளுக்கு 0421-2999152 - 9499055944 என்ற எண்ணை தொடர்பு  கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டத்தில் நாளை  ரேசன் குறை தீர்ப்பு முகாம்

திருப்பூர், ஜன. 18 - திருப்பூர் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட சிறப்பு  குறைதீர்ப்பு முகாம் சனிக்கிழமை நடைபெறவுள்ளது. அன்று  காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை அனைத்து வட்டங்க ளிலும் கீழ்க்கண்ட இடங்களில் இந்த முகாம் நடைபெற உள்ளது. இக்குறைதீர்ப்பு முகாமில் திருப்பூர் மாவட்டத் தில் உள்ள அனைத்து குடிமைப் பொருள் தனி வட்டாட்சி யர்கள், வட்ட வழங்கல் அலுவலர்கள் மற்றும் தனி வருவாய்  ஆய்வாளர்கள் கலந்து கொண்டு முகாமில் பெறப்படும் மனுக் களுக்கு உடனடி தீர்வு செய்ய உள்ளார்கள் என்று மாவட்ட  ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் தெரிவித்தார். அவிநாசி வட்டம், பழங்கரை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், தாராபுரம் வட்டம் கெத்தல்ரேவ் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம்,  காங்கயம்  வட்டம் வீரசோழபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன்  சங்கம்,  மடத்துக்குளம் வட்டம் கணியூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், பல்லடம் வட்டம் சித்தம் பலம் மகளிர் திட்ட இ-சேவை மையம், திருப்பூர் வடக்கு வட்டம்  வேலம்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன்  சங்கம், திருப்பூர் தெற்கு வட்டம் கண்டியன்கோவில் தொடக்க  வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், உடுமலைப்பேட்டை வட்டம் தளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம்,  ஊத்துக்குளி வட்டம் கே.தொட்டிபாளையம் ஊராட்சி காவுத்தம்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன்  சங்கம் ஆகியவற்றில் முகாம்கள் நடைபெறும். முகாமில் மக்கள் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம்,  முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு, மாற்றம் செய்தல்,  புதிய குடும்ப அட்டை, நகல் அட்டை கோரும் மனுக்களை  பதிவு செய்தல் போன்ற மின்னணு குடும்ப அட்டை தொடர் பான கோரிக்கைகளை விண்ணப்பித்து தீர்வு பெறலாம் என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய நெடுஞ்சாலையில் கொட்டப்படும் குப்பைகள்

உடுமலை, ஜன.18- சில தனியார் நிறுவனங்கள் இரவு நேரங்களில் தேசிய நெடுஞ்சாலையின் ஓரங்களில் குப்பைகள் கொட்டி தீ வைப்ப தாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  பொள்ளாச்சி – திண்டுக்கல் 209  தேசிய நெடுஞ்சாலை கோவையில் இருந்து பொள்ளாச்சி வரையிலும், அதே போல்  பொள்ளாச்சி முதல் திப்பம்பட்டி வரையில் நான்கு வழிச்சா லையாக மாற்றும் வகையில் பணிகள் நடைபெற்று வருகி றது. இந்த விரிவாக்க பணிகள் நடைபெறும்  அதே வேலையில்  உடுமலை அருகே உள்ள பெரியகோட்டை பகுதியில் இருந்து  மைவாடி பிரிவு வரையில் தேசிய நெடுஞ்சாலையில் சமத்துவ புரம், பாலப்பம்பட்டி கிராமங்கள் உள்ளன. இதில், பஞ்சாலை,  பனியன் மற்றும் சிறிய அளவிலான ஒர்கஷாப்கள் செயல் பட்டு வருகின்றன. இந்த நிறுவனங்கள் கழிவுகளை நெடுஞ்சா லைகளின் ஓரங்களில் இரவு நேரங்களில் கொட்டி  தீ வைப்பதாக கூறப்படுகிறது. இதனால், அப்பகுதி முழுவதும்  சுகாதார கேடு ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்ற னர். மேலும், தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் மற்றும் பொது மக்கள் அதிகம் வந்து செல்லும் பகுதியான  உள்ள தேசிய நெடுஞ்சாலையின் ஓரங்களில் குப்பைகளை கொட்டுவதை நெடுஞ்சாலைத்துறை தடுக்க வேண்டும் என வும் கோரிக்கை வைத்துள்ளனர்.

குடியரசு தின பாதுகாப்பு நடவடிக்கை

உதகை,ஜன. 18- குடியரசு தினத்தையொட்டி நீலகிரி மாவட்டத்தில், போலீ சார் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின் றனர். இந்நிலையில், உதகையில் சுற்றுலாத் தலங்களுக்கு மோப்ப நாயுடன் திடீரென சிறப்பு குழு வந்ததால் சுற்றுலாப் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.  சர்வதேச சுற்றுலாத்தலமான நீலகிரிக்கு சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வந்தது. கடந்த ஐந்து  நாட்களில் சுமார் 60 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் வந்து  சென்றுள்ளனர். இந்நிலையில் பொதுமக்கள் அதிகம் கூடும்  இடங்கள் சுற்றுலாத்தலங்களில் மோப்பநாய் மூலம் சிறப்புக்  குழுவினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து காவல் துறை சார்பில் கூறுகையில், குடியரசு தின விழா  வர இருப்பதால் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படுவதை தடுப்பதற்காக நீலகிரி உள்பட தமிழகம் முழுவதும் மோப்ப நாய் மூலம் ரோந்து பணியில் ஈடுபட உத்தரவிடப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் ஒரு துணை ஆய்வாளர் தலைமை யில் 10 பேர் கொண்ட குழுவினர் ரோந்து பணியில் ஈடுபட்டு  வருகின்றனர். இதுவரை அரசு தாவரவியல் பூங்கா படகு  இல்லம் ரயில்வே நிலையம் பேருந்து நிலையம் உள்ளிட்ட  இடங்களில் சுழற்சி முறையில் சோதனையில் ஈடுபட்டு  வருகின்றனர். மேலும் குடியரசு தின விழா கொண்டாட் டங்கள் முடியும் வரை ரோந்து பணிகளை தீவிர படுத்தி யுள்ளோம், என்றார்.

மாபெரும் ரேக்ளா போட்டி

கோவை, ஜன.18- பொள்ளாச்சியில் திமுக சார்பில் 300 காளைகள் பங்கேற்ற  மாபெரும் ரேக்ளா போட்டி நடைபெற்றது. திமுக இளைஞரணி மாநாட்டை முன்னிட்டு, கோவை தெற்கு மாவட்ட திமுக சார்பில் 300 காளைகள் பங்கேற்ற, மாபெரும் ரேக்ளா போட்டி, பொள்ளாச்சி அடுத்த சி.கோபா லபுரம் பகுதியில் நடைபெற்றது இதில் கோவை, ஈரோடு, திருப்பூர் மற்றும் கேரளாவைச் சேர்ந்த ஏராளமான வீரர்கள்  மாட்டு வண்டியுடன் கலந்து கொண்டனர். 200 மீட்டர் மற்றும் 300 மீட்டர்  என இருபிரிவாக போட்டிகள் நடை பெற்ற இப்போட்டியில், காளைகள் சீறி பாய்ந்தன. தொடர்ந்து, வெற்றி பெற்ற காளை உரிமையாளர்களுக்கு   முதல் பரிசாக ரூ.50 ஆயிரமும், இரண்டாம் பரிசாக ரூ. 40  ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ.30 ஆயிரமும் வழங்கப் பட்டது. இப்போட்டியை, சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த  ஏராளமான பொதுமக்களும், இளைஞர்களும் ஆர்வத்து டன் கண்டு மகிழ்ந்தனர். முன்னதாக போட்டியை, கோவை தெற்கு மாவட்டச் செயலாளர் தளபதி முருகேசன் மற்றும் திமுக மாநில தகவல்  தொழில்நுட்ப அணி இணைச் செயலாளர் டாக்டர் மகேந்தி ரன் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

விவசாய நிலத்துக்குள் புகுந்த யானைகள்

கோவை, ஜன.18- பெரியநாயக்கன்பாளையம் அருகே விவசாயத் தோட்டத் திற்குள் புகுந்த காட்டுயானைகள் தென்னை மரங்களை கீழே  சாய்த்து சேதப்படுத்தியது.  கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் அடுத்த  கோவனூர் அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் காட்டு  யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. வனப்ப குதிக்கு ஒட்டியுள்ள பகுதி என்பதால் அவ்வப்போது காட்டு யானைகள் உலா வருகின்றது.  இந்நிலையில், புதனன்றூ வெங்கடேசன் மற்றும் சுப்பிர மணியம் ஆகியோரது தோட்டத்துக்குள் புகுந்த காட்டு  யானைகள், அங்கிருந்த தென்னை மரங்களை கீழே தள்ளி சாய்த்தன. மேலும் தென்னை மரத்தின் குருத்துக்களை பிடுங்கி எறிந்தன. தகவலறிந்து வந்த வனத்துறையினர், யானைகளை விரட்டினர்.

கோவை சிறையில் திருநங்கை தற்கொலை முயற்சி

கோவை, ஜன.18- கோவை மத்திய சிறையில் திருநங்கை ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி அருகே முசிறி பகுதியைச் சேர்ந்த வர் திருநங்கை வெண்பா. இவர், கோவை பீளமேட்டில் நிகழ்ந்த ஒரு கொலை வழக் கில் கடந்த 2020-ஆம் ஆண்டு கைதானார். கோவை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த  இந்த வழக்கில் வெண்பாவுக்கு கடந்த  2023 ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை விதிக்கப் பட்டது. இதையடுத்து வெண்பா கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர், வெண்பா பிணைகோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்  செய்திருந்தார். இந்நிலையில் பிணை கிடைக்க தாமதமானதால் மனமுடைந்த திரு நங்கை வெண்பா சிறையில், சேலையில் தூக் கிட்டு செவ்வாய்க்கிழமை தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். இதுகுறித்து சக கைதி கள் சிறைக் காவலர்களுக்கு தகவல் தெரி வித்தனர்.  இதையடுத்து சிறைக் காவலர்கள் வெண் பாவை மீட்டு கோவை அரசு மருத்துவக் கல் லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு மருத்துவர்கள் வெண்பாவுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

வீடு கட்டும் இடத்தில் புதைக்கப்பட்டிருந்த மனித உடல்

கோவை, ஜன.18- அன்னூர் அருகே புதிதாக வீடும்  கட்டும் இடத்தில், கொலை செய்து  புதைக்கபட்ட மனித உடல் பாகங் கள் கண்டெடுக்கப்பட்டது அதிர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது.  கோவையைச் சேர்ந்த மேகலா என்பவர் அன்னூர் அருகே அல்லப் பாளையம் கிராமத்தில் புதிதாக வீடு  கட்டி வருகிறார். இந்த பணியினை கட்டுமான பொறியாளர் பிரகதீஷ் என்பவரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், அவர் பணிகளை மேற் கொண்டு வருகிறார். இந்நிலையில், வீடு கட்டும் பணியை மேற்கொள்ள அசோக்குமார், சதீஷ், முருகையன் ஆகிய மூவரும் பணிபுரிந்து வந்த னர். இவர்கள், கடந்த பத்து நாட்க ளாக பணியினை நிறுத்தி விட்டு சொந்த ஊருக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது.  இதனையடுத்து, வியாழனன்று தனது வீட்டின் கட்டுமான பணியை பார்வையிடுவதற்காக, இடத்தின் உரிமையாளரான மேகலாவின் கண வர் பாலகிருஷ்ணன் வந்துள்ளார். அப்போது, கட்டுமான பணிகள் நடை பெறும் இடத்தில் துர்நாற்றம் வீசி யுள்ளது. இதில் சந்தேகமடைந்த பாலகிருஷ்ணன், உடனடியாக காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தார். தகவலில் அடிப் படையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கட்டுமான பணிகள் நடை பெறும் இடத்தில் மனித உடலின் பாகங்கள் புதைக்கபட்டிருப்பதை கண்டறிந்தனர்.  புதைக்கபட்ட உடலை தோண்டி எடுக்க அன்னூர் வட்டாட்சியர் அனு மதி கோரியுள்ள போலீசார், வட்டாட் சியர் முன்னிலையில் புதைக்கபட்ட உடல் தோண்டி எடுக்கப்பட்ட பின் னரே, கொலை செய்யப்பட்ட நபர் யார்? என்று தெரியவரும் என போலீ சார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.  அதே சமயத்தில், இங்கு பணியில்  இருந்து வந்த அசோக்குமார் என்ப வர் கடந்த 10 நாட்களாக காண வில்லை என்ற தகவல் காவல்து றைக்கு கிடைத்துள்ளதையடுத்து,  அவரை யாராவது கொலை செய்து  புதைத்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசார ணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

களைகட்டிய காணும் பொங்கல்

உடுமலை, ஜன.18- தைத் திருநாளின் மூன்றாம் நாள் காணும் பொங்கல் விழா  கொண்டாடப்படுகிறது. காணும் பொங்கலையொட்டி கோவில்கள் மற்றும் சுற்றுலாத் தலங்களுக்கு செல்வதை மக்கள் வாடிக்கையாக கொண்டுள்ளனர்.  குறிப்பாக கிராமப்பகுதிகளில் பழமையான கோவில்க ளுக்கு சென்று ஊர் சலகெருதுகளுக்கு சிறப்பு வழிபாடுகள் செய்தும், பின்னர் அப்பகுதியில் ஆவராம்பூக்களை பறித்துக் கொண்டு தங்களின் வீடுகளில் வைத்தும் மக்கள் வழிபடுவர்.  அந்த வகையில், உடுமலை குடிமங்கலம் மாலக்கோவி லுக்கு ஆயிரக்கணக்காண மக்கள் தங்களுடைய ஊர் எருது களை அழைத்து வந்து வழிபட்டார்கள். இதே போல் கொங்க லக்குறிச்சி செல்லாண்டியம்மன் கோவிலிலும் வழிபாடுகள் நடைபெற்றது. மேலும், திருமூர்த்திமலை, அமராவதி அணை  மற்றும் மூணார் செல்லும் வழியில் இருக்கும் கோடந்தூர்  மலையிலும் ஆயிரக்கணக்காண சுற்றுலாப் பயணிகள்  குவித்தனர்.

கடும் பனிப்பொழிவால் காய்ச்சல் அதிகரிப்பு

ஈரோடு, ஜன.18- ஈரோடு மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவுடன், குளி ரான தட்ப வெப்ப நிலை நிலவி வருவதால் சளி, காய்ச்சல்  உள்ளிட்ட பருவகால நோய்களின் பாதிப்பு அதிகரித்துள் ளது.  ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக இரவில் தொடங்கும் பனிப்பொழிவு காலை வரை நீடிக்கிறது. தாள வாடி, பர்கூர், ஆசனூர், சத்தியமங்கலம் உள்ளிட்ட பகுதி களில் மாலையில் தொடங்கி காலை 8 மணி வரை பனிப் பொழிவு நீடிப்பதால், வாகனங்களை இயக்குவதில் சிரமம்  ஏற்படுகிறது. அதேபோல், இரவில் கடுமையான குளிரும் நிலவுவதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.  பனிப்பொழிவு, குளிர் காரணமாக பருவகாலத்தில் ஏற்ப டும் காய்ச்சல், சளி, இருமல், தொண்டை பாதிப்பு உள்ளிட்ட  நோய்களின் பாதிப்பும் அதிகரித்துள்ளது. அரசு மற்றும் தனி யார் மருத்துவமனைகளில் இத்தகைய பாதிப்பு கொண்ட நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதுகுறித்து அரசு மருத்துவமனை மருத்துவர்கள் கூறு கையில், பருவநிலை மாற்றம் காரணமாக சளி, காய்ச்சல்  போன்ற நோய்கள் ஏற்படுகின்றன. இவற்றைத் தவிர்க்க குளிர்பானம், ஐஸ்கிரீம் போன்றவற்றைத் அருந்தக்கூடாது. மேலும், சூடான உணவுகளை எடுப்பதோடு, மசாலா கலந்த  உணவுகளைத் தவிர்க்க வேண்டும். தொடர்ச்சியாக காய்ச்சல்  இருப்பின் மருத்துவர் ஆலோசனையின் பேரில் ரத்த பரி சோதனை மேற்கொண்டு, அதற்கேற்ப சிகிச்சை பெற வேண்டும் என்றனர்.

சாலை விபத்து மாணவர்கள் உட்பட 3 பேர் பலி

நாமக்கல், ஜன.18- நாமக்கல் அருகே நடந்த சாலை விபத்தில் ஒரே ஊரை சேர்ந்த பள்ளி மாணவர்கள் உட்பட 3 பேர் உயிரிழந்த சம்ப வம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அடுத்துள்ள பச்சுடை யாம்பட்டி புதூரை சேர்ந்தவர் கட்டிட மேஸ்திரி டேவிட்.  இவரும் அதே பகுதியை சேர்ந்த 12 வகுப்பு மாணவர் சரவணன்  என்பவருடன் செவ்வாயன்று இரவு புதன்சந்தையில் இருந்து சேந்தமங்கலம் நோக்கி இருச்சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். எதிரில் வந்த பச்சுடையாம்பட்டியை சேர்ந்த பூவரசன், மோகன்குமார், பள்ளி மாணவர் கெளதம்  ஆகிய மூவரும் சேந்தமங்கலத்தில் இருந்து புதன்சந்தை நோக்கி ஒரே இருச்சக்கர வாகனத்தில் வந்து கொண்டி ருந்தனர். அப்போது டேவிட் சாலையூர் என்ற இடத்தில் கார்  ஒன்றை  முந்த முயன்ற போது எதிரே வந்த பூவரசனின் இரு  சக்கர வாகனத்தில் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட் டது. இந்த விபத்தில் இரண்டு இரு சக்கர வாகனங்களில் பய ணம் செய்த 5 பேரில் டேவிட் மற்றும் பள்ளி மாணவர்  சரவணன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த மற்ற 3 வரையும் மீட்டு அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் மற்றொரு பள்ளி மாணவர் கெளதம் மருத்துவமனையில்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  இந்த விபத்தில் மூவர்  உயிரிழந்த நிலையில், படுகாயங்களுடன் 2 பேர் சிகிச்சை  பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து சேந்தமங் கலம் போலீசார் விசாரணை வழக்கு பதிவு செய்த மேற் கொண்டு வருகின்றனர்.

தருமபுரியில் எருது விடும் விழா

தருமபுரி, ஜன.18- தருமபுரி மாவட்டத்தில் காணும் பொங்கல் விழாவை யொட்டி, பல்வேறு பகுதிகளில் எருதுவிடும் விழா, மஞ்சு விரட்டு நடைபெற்றது. தருமபுரி மாவட்டத்தில் நல்லம்பள்ளி, கடகத்தூர், அன்ன சாகரம், நூலஅள்ளி, முக்கல் நாயக்கன்பட்டி உள்ளிட்ட பல் வேறு கிராமங்களில் காளைகளுக்கு கயிறு கட்டி அவற்றை  ஓட விடும் எருது விடும் விழா நடைபெற்றது. இதேபோல பாலக் கோடு அடுத்த மாரண்டஅள்ளியில் பல்வேறு கிராமங்களில் இருந்து அலங்கரித்து அழைத்துவரப்பட்ட காளைகளை முக் கிய வீதிகள் வழியாக ஓட விட்டு அவற்றின் கொம்புகளில் கட்டி  வைத்துள்ள பரிசுப் பொருள்களை எடுக்கும் மஞ்சு விரட்டு  நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான இளைஞர்கள் காளைகளின் கொம்புகளில் கட்டப்பட்ட பரிசுப் பொருள்க ளை பறித்தனர். முக்கல்நாயக்கன்பட்டி கிராமத்தில் காணும்  பொங்கல் விழாவையொட்டி அதிக அளவில் அசைவ உணவு  உட்கொள்ளும் நூதனப் போட்டி நடைபெற்றது. பிரியாணி,  கோழி இறைச்சி மற்றும் குளிர்பானங்கள் அருந்தும் போட்டி  நடைபெற்றது. இந்த நூதனப் போட்டியில் பங்கேற்று அதிக  உணவு உட்கொண்ட ஆண்களுக்கு சாப்பாட்டு ராமன் மற்றும்  பெண்களுக்கு சாப்பாட்டு ராணி என பாராட்டு தெரிவிக்கப்பட் டது. மேலும், பரிசுகளும் வழங்கப்பட்டன.

காலமானார்

கோவை, ஜன.18- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத் தின் துடியலூர் கிளை தலைவரும், கோவை மாவட்டச் செயற்குழு உறுப்பினரும், ஓய்வு பெற்ற ஆசிரியருமான தோழர். புலிகேசி காலமானார்.  இதுகுறித்து தமுஎகச கோவை மாவட்டக்குழு வெளி யிட்டுள்ள இரங்கல் செய்தியில், ஒரு இளம் வயது வாலி பனை போல அமைப்பின் வேலைகளை முன்னின்று செய்யக்  கூடியவர் தோழர் புலிகேசி. துடியலூர் பகுதியில் வளர்ந்து  வரும் இந்துத்துவா பிற்போக்கு கருத்தியலுக்கு எதிராக  தொடர்ச்சியாக தனது பணியை களத்தில் செயலாற்றிக் கொண்டிருந்த செயல் வீரர். யாரிடமும் எந்த சூழ்நிலையி லும் கடிந்து பேசாமல் தோழர்களை அரவணைக்க கூடியவ ராக இருந்தவர்.  ஜன. 27ஆம் தேதியன்று நவகவி அவர்களின் நூல் வெளி யீட்டு விழாவை சிறப்பாக நடத்த வேண்டும் என்று, தினசரி அந்தப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருந்த சூழ லில் திடீரென ஏற்பட்ட மாரடைப்பினால் அவர் காலமா னார். அன்புத் தோழரை இழந்து வாடும் குடும்பத்தாரின் துய ரத்தில், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் கோவை  மாவட்டக் குழு இணைந்து கொள்கிறது எனத் தெரிவிக் கப்பட்டுள்ளது.

புத்தர் சிலை மண்டபத்தின் மேற்கூரை சேதம்

சேலம், ஜன. 18- ஆத்தூர் வட்டாட்சியர் அலுவல கத்தில் வைக்கப்பட்டுள்ள  புத்தர் சிலை  மேற்௯ரை தூண்களை  சேதப்படுத்திய  மர்ம ஆசாமிகள் மீது நடவடிக்கை எடுக் கக்கோரி பெளத்த சங்கத்தினர் கண்டன  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரப ரப்பு ஏற்பட்டது.  சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டாட் சியர் அலுவலக வளாகத்தில் அமைந் துள்ள புத்தர் சிலையின்  மேற்௯ரையு டன் அமைக்கப்பட்டுள்ளது.  இந்த புத்தர்  சிலை 1960 ஆம் ஆண்டு வைக்கப்பட்டு  அப்போதைய மாவட்ட ஆட்சியர் எஸ். பி.அன்பு ரோஸ் சிலையை திறந்து வைத் தார். இதனை ஆத்தூர் பகுதியில் உள்ள  பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்கள் பரா மரித்து வருகின்றனர். இந்நிலையில், மர்ம ஆசாமிகள் சிலர் துண்களை  சேதப் படுத்தியுள்ளதாக தெரிகிறது. கடந்த  சில ஆண்டுகளுக்கு முன்பு மர்மநபர் கள் சிலையை  சேதப்படுத்திய போது  மேற்கூரை அமைக்கப்பட்டு மற்றும் பீடங்களை சரி செய்யப்பட்டு புதுப்பிக் கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் மர்ம  நபர்கள் அந்த சிலையின் பீடத்தின்  அருகில்  அமைந்துள்ள மேற்கூரையை  தூண்களை சேதப்படுத்தியுள்ளனர். இதைக் கண்ட ஆத்தூர் பௌத்தர்  சங்க பேரவைகளின் பொறுப்பாளர் கள் புத்தர் சிலை முன்பு திரண்டு புத்தர்  சிலையின் மேற்கூரையை சேதப்படுத் திய மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். மேலும் இந்த புத்தர் சிலையின்  முகங்கள் சேதமடைந்து உள்ளதால் புத்தர் சிலையை சீரமைத்து தர கோரிக்கை வைத்தனர்.

ஜல்லிக்கட்டு ஆட்சியரிடம் மனு

நாமக்கல், ஜன.18- ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி மாவட்ட ஆட்சியரி டம் மனு அளிக்கப்பட்டது. நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் வட்டம் , சிவநாயக் கன்பட்டி, கரியபெருமாள்புதூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி கேட்டு நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மனு அளித்தனர். இதுகுறித்து ஜல்லிக்கட்டு விழா குழுவினர் அளித்த மனுவில் கூறியிருப்பது. நாமக்கல் மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கும் அரசாணையில் உள்ள ஊர்களின் பட்டியலில் எங்க ளது ஊரும் இடம் பெற்றுள்ளது. பாரம்பரியமாக நடைபெ றும் ஜல்லிக்கட்டை வரும் பிப்ரவரி 9-ஆம் தேதியன்று  நடத்த அனுமதி வழங்க வேண்டும். எனத் தெரிவிக்கப்பட் டுள்ளது.

கழுதை பால் விற்பனை அமோகம்

தருமபுரி, ஜன. 18- தருமபுரியின் பல்வேறு பகுதிகளில் கழுதை பால் விற் பனை அமோகமாக நடைபெற்றது. தருமபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் தரும புரி நகரப் பகுதியில் கடந்த சில தினங்களாக பெரம்பலூர் பகுதி யைச் சேர்ந்த 4 விவசாயிகள் 40க்கும் மேற்பட்ட கழுதைகளு டன் ஒவ்வொரு பகுதியாக சென்று கழுதை பால் விற்பனை  செய்து வருகின்றனர். தர்மபுரி நகரப் பகுதி அதனைச் சுற்றி  உள்ள பகுதிகளில் தாய்கழுதை மற்றும் கழுதை குட்டிகளு டன் சென்று பொதுமக்கள் கேட்கும் இடத்திலேயே கழுதை யில் இருந்து பாலை கறந்து விற்பனை செய்கின்றனர். சுமார்  நான்கு எம் .எல் அளவுள்ள பாலாடை 50 ரூபாய்க்கு விற்பனை  செய்கின்றனர். குழந்தைகள் கழுதை பால் குடிப்பதால் நோய்  எதிர்ப்பு சக்தி அதிகரித்து. சளி தொந்தரவு .மஞ்சள் காமாலை.  நோய் வராது என்ற நம்பிக்கையின் பேரில் இந்த கழுதை பாலை பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு வாங்கி கொடுக்கின்றனர்.  கழுதைப் பாலில் உள்ள புரதங்கள், பெப்டைடுகள், என் சைம்கள், வளர்ச்சி காரணிகள், ஒமேகா -3 கொழுப்பு அமிலங் கள், தாதுக்கள் மற்றும் நோய் எதிர்ப்பு காரணிகள், அதிக  ஊட்டச்சத்து மற்றும் உயிரியல் ஆற்றலைக் கொண்டுள் ளது. இந்த பண்புகள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம் படுத்த உதவுகிறது. மேலும், உணவுகளினால் ஏற்படும் ஓவ் வாமை பிரச்சனைகளையும் தடுக்க உதவுகிறது. கழுதைப்  பாலில் ஆன்டிபாடி-சுரக்கும் உயிரணுக்களின் திறன் மேம்படு வதாக கூறப்படுகிறது. இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை  அதிகரிக்க பயன்படுகிறது. மாட்டு பாலில் உள்ள அதிக கேசின்  மற்றும் புரதம் காரணமாக குழந்தைகளுக்கு சில சமயங்களில்  ஒவ்வாமை ஏற்படும். இது குழந்தைகளில் பொதுவாக ஏற்ப டும் ஒரு பிரச்சனையாகும். இதனால் கால்சியம் போன்ற சத் துக்கள் குழந்தைகளுக்குக் கிடைக்காமல் ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்பட வாய்ப்புகள் அதிகம். இந்தக் கழுதை  பால் பசு மற்றும் மாட்டு பாலுக்கு சரியான ஒரு மாற்று பாலாக  உள்ளதாக சில தரவுகள் சொல்லப்படுகிற நிலையில், கழு தைப்பாலை வாங்கி குழந்தைகளுக்கு கொடுப்பதற்கு பொது மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

மாணாக்கர்களுக்கான பேச்சுப்போட்டி

சேலம், ஜன.18- சேலம் மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில்  தமிழறிஞர், எழுத்தாளர்களை நினைவு கூறும் வகையில் பள்ளி, கல்லூரி மாணாக்கர்களுக்கான பேச்சுப்போட்டிகள் நடத்தப்படவுள்ளது. இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் செ.கார்மேகம் தெரி வித்துள்ளதாவது, தமிழ் வளர்ச்சித்துறையின் 2021-22 ஆம் ஆண்டுக்கான மானியக் கோரிக்கையில் ”தமிழறிஞர்கள், எழுத்தாளர்கள் ஆகியோரின் நினைவிடங்களில் அவர்களின்  பிறந்தநாளன்று உள்ளுர் இலக்கிய அமைப்புகள் மூலம்  ஆண்டுதோறும் கவியரங்கம், கருத்தரங்கம், இலக்கியக் கூட்டங்கள் 150 இடங்களில் நடத்தப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதனடிப்படையில் சேலம்  மாவட்டத்தில் பாவலரேறு பெருஞ்சித்திரனார், கவிஞர்  தமிழ்நாடன் மற்றும் கவிஞர் முருகுசுந்தரம் ஆகியோர்க ளின் தமிழ் இலக்கியப்பணி, தமிழ்த்தொண்டு, தமிழ்மொழிக் கான பங்களிப்பு ஆகியவற்றை நினைவுகூரும் வகையில்  பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலக்கூடிய மாணவர்களுக்கு ஜன.31 ஆம் தேதியன்று பேச்சுப்போட்டிகள் சேலம் -7, அரசு  கலைக்கல்லூரியில் காலை 9.30 மணிக்கு நடைபெற உள்ளது.  வெற்றி பெறும் கல்லூரி, பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட  அளவில் முதல் பரிசு ரூ.5 ஆயிரம், இரண்டாம் பரிசு  ரூ.3 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.2 ஆயிரம் மற்றும் பாராட் டுச் சான்றிதழ் வழங்கப்படும் என ஆட்சியர் தெரிவித் துள்ளார்.