திருப்பூர், ஜூலை 10- திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் வட்டாரக் கல்வி அலுவலர் அலுவலகம் முன்பு செவ்வாயன்று டிட்டோஜாக் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டாரத் தலை வர் கிருஷ்ணமூர்த்தி, தமிழக ஆசிரியர் கூட்டணி வட்டாரத் தலைவர் இரவி, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி யின் வட்டாரத்தலைவர் தமிழ் செல்வன் ஆகியோரின் கூட்டுத் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் கோ.பிரபாகர் முன்னிலையில் வகித்தார். இதில், 243 அரசா ணையை ரத்து செய்ய கோரி முழக்கங்கள் எழுப்பட்டத்து. முடிவில் வின்சென்ட் நன்றி கூறினார்.