districts

img

குழப்பத்தை ஏற்படுத்தும் திருப்பூர் போக்குவரத்து கழக நிர்வாகம்

திருப்பூர், ஆக.27- அரசு போக்குவரத்துக் கழக திருப்பூர் மண்டல நிர்வாகத்தின் உத்தரவால், ஓட்டுநர்களும், பய ணிகளும் குழப்பத்திற்கு தள்ளப் படும் நிலை ஏற்பட்டுள்ளது.  திருப்பூர் மாநகரில், பழைய பேருந்து நிலையம் தற்போது கலைஞர் கருணாநிதி பேருந்து நிலையம் என்ற பெயரில் புதுப் பித்துக் கட்டப்பட்டுள்ளது. ஏற்க னவே மதுரை, தேனி, நெல்லை, நாகர்கோவில், தென்காசி, செங் கோட்டை, ராமேஸ்வரம் உள் ளிட்ட தென் மாவட்டங்களுக்கு தாராபுரம் வழித்தடத்தில் இயக் கப்படும் வெளியூர் பேருந்துகள் அங்கிருந்து புறப்பட்டு வந்தன.  நகர வளர்ச்சியின் காரண மாக, போக்குவரத்து நெரிசல் மிகுந்த நிலையில், மேற்கண்ட தென் மாவட்டங்களுக்கு இயக் கப்பட்ட பேருந்துகள், தாராபுரம் சாலை கோயில் வழி பேருந்து நிலையத்திற்கு மாற்றப்பட்டன. அதேபோல் திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, நாகப்பட்டினம், சிதம்பரம், கடலூர் உள்ளிட்ட  மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகள் பெருமாநல்லூர் சாலையில் உள்ள புதிய பேருந்து நிலையத்தில் இருந்து காங்கே யம் சாலை வழியாக இயக்கப் பட்டு வருகின்றன.  கலைஞர் பேருந்து நிலையத் தில் இருந்து, கோயில் வழி பேருந்து நிலையத்திற்கு தென் மாவட்ட பேருந்துகளை மாற்றிய போது, பொது மக்களுக்கு பெரும் சிரமம் ஏற்பட்டது. பல்வேறு அடிப் படை வசதிகள் குறைபாடாக இருந் தது. குறிப்பாக நகரத்தின் மையப் பகுதியில் இருந்து கோயில் வழிக்கு நகரப் பேருந்துகள் குறை வாகவே இயக்கப்பட்டு வந்தன. எனினும் நாளடைவில் இப்பிரச் சனைகள் முழுமையாக தீர்க்கப் படாத போதும், பயணிகள் கோயில் வழி பேருந்து நிலை யத்திற்கு செல்வதற்கு பழக்கப் பட்டு விட்டனர். அத்துடன் தற் போது கோயில் வழியில் பேருந்து நிலையத்தை, முழுமையான பேருந்து நிலையமாக புதுப்பித் துக் கட்டும் பணியும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது அரசு போக்குவரத்துக் கழக திருப்பூர் கிளை நிர்வாகம், தென் மாவட்டங் களுக்கு இயக்கப்படும் பேருந்து களை, பணிமனையில் இருந்து செட் அவுட் செய்யும் பொழுது, நேரடியாக கலைஞர் பேருந்து நிலையத்திற்கு சென்று விட்டு, அங்கிருந்து கோவில் வழிக்கு செல்ல வேண்டும் என்று உத்த ரவு பிறப்பித்துள்ளது. இது போக் குவரத்து தொழிலாளர்கள் மத்தி யில் அதிருப்தியை ஏற்படுத்தியுள் ளது. இந்த உத்தரவினால் திருப் பூர் மண்டலத்தில் இருந்து இயக் கப்படும் அரசு பேருந்துகளுக் கும், தென் மாவட்டங்களைச் சேர்ந்த மதுரை, நெல்லை கோட் டப் பேருந்துகளுக்கும் இடையே தேவையில்லாத சச்சரவை ஏற்ப டுத்தும் என்று ஓட்டுநர்கள் கூறு கின்றனர்.  ஏற்கனவே கோயில் வழி பேருந்து நிலையத்தை பயன்ப டுத்த தொடங்கும் பொழுது, திருப் பூர் மாநகராட்சி நிர்வாகம், போக்கு வரத்து துறை, காவல்துறை ஆகிய வற்றுடன் மாவட்ட நிர்வாகம் கலந்த ஆலோசனை செய்து,  முடிவு செய்யப்பட்டது. தென் மாவட் டங்களில் இருந்து வரக்கூடிய மற் றும் இங்கிருந்து புறப்பட்டு செல் லக்கூடிய அரசு போக்குவரத்துக்  கழகத்தின் எல்லா கோட்டப் பேருந் துகளும், தனியார் பேருந்துகளும் கோயில் வழியில் இருந்து தான் புறப்பட்டுச் செல்ல வேண்டும் என்று அரசு நிர்வாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் தற் போது மாநகராட்சி நிர்வாகத் தையோ, காவல்துறையையோ, மாவட்ட நிர்வாகத்தையோ கலந் தாலோசிக்காமல் போக்குவரத்து கழக மண்டல கிளை நிர்வாகம் தன்னிச்சையாக முடிவு செய்துள் ளது. இது வெளிப்படையாக ஊட கங்களிலோ, செய்தி அறிக்கையா கவோ தெரிவிக்கப்படவில்லை.  இந்த நிலையில் கோவை கோட்ட திருப்பூர் கிளை பேருந்து கள் கலைஞர் பேருந்து நிலையத் திலிருந்து இயக்கப்படும் அதே சமயம், மற்ற கோட்ட அரசு பேருந் துகள் கோயில் வழியில் இருந்து இயக்கப்படும். வசூலை அதிக ரிக்க வேண்டும் என்ற திருப்பூர்  கிளை நிர்வாகத்தின் குறுகிய, ஒற்றை நோக்கத்தால், குழப்பம் ஏற் படும் நிலை உருவாகியுள்ளது. உதாரணத்திற்கு, பிற கோட்டப் பேருந்துகள் கோயில் வழியில் பயணிகளை ஏற்ற காத்திருக்கும் நிலையில், திருப்பூர் கிளை பேருந் துகள், கலைஞர் பேருந்து நிலை யத்தில் பயணிகளை ஏற்றி நிரப் பிக் கொண்டு கோவில் வழிக்கு  வரும்பொழுது, பிற கோட்ட பேருந் துகள் குறைவான பயணிகளுடன் இயக்கப்படும் நிலை ஏற்படும். விடுமுறை மற்றும் பண்டிகை காலங்களில் அங்கு காத்திருக் கும் பயணிகளுக்கு இடம் கிடைக் காமல் போகும்.  இதனால் பிற கோட்ட பேருந்து நிர்வாகங்களும், கலைஞர்  பேருந்து நிலையத்திற்கு வர வேண் டிய நிர்பந்தம் ஏற்படும். சில பேருந்துகள் கலைஞர் பேருந்து நிலையத்தில் இருந்தும், வேறு சில பேருந்துகள் கோயில் வழி யில் இருந்தும் இயக்கப்படும் போது பயணிகள் எங்கு சென்று பேருந்தில் பயணிப்பது என்ற குழப்பம் ஏற்படும்.  இது ஏற்கனவே போக்குவ ரத்து நெருக்கடியில் சிக்கி இருக் கும் திருப்பூர் மாநகரத்திற்கு உள்ளே,  குறிப்பாக கலைஞர் பேருந்து நிலையத்தில் இன்னும் நெருக்கடியை அதிகரிக்கும். அத்துடன் அரசு பேருந்துகளின் பிற கோட்டங்களுக்கு இடையே யும் சச்சரவை ஏற்படுத்தும். பய ணிகளும் தவிப்பைச் சந்திப்பார் கள்.  எனவே திருப்பூரில் கிளை நிர் வாகத்தின் தன்னிச்சையான உத் தரவை கைவிட வேண்டும். ஏற்க னவே மாவட்ட நிர்வாகம் அனைத்து துறைகளையும் கலந்து ஆலோ சித்து முடிவு செய்ததைப் போல  தற்போதும், அனைத்து கோட்ட பேருந்துகளும் எந்தப் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட் டுச் செல்ல வேண்டும் என்று ஒரே  மாதிரி முடிவெடுக்க வேண்டும் என்று போக்குவரத்து தொழிலா ளர்கள் கூறுகின்றனர். அரசு போக்குவரத்து நிர்வா கம், அதிக வசூல் என்ற ஒற்றை  நோக்கத்தை மட்டும் வைத்துக் கொண்டு, போக்குவரத்து ஊழி யர்களையும் அலைக்கழிக்கிறது, பயணிகளின் சேவையையும் புறக் கணிக்கிறது. இப்பிரச்சனையில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு ஒழுங்குபடுத்த வேண்டும் என்று தொழிலாளர்கள் எதிர்பார்க்கின் றனர்.