திருப்பூர், ஜூன் 1- திருப்பூர் கோயில்வழி வெளியூர் பேருந்து நிலையத்தில் பேருந்துக்கு காத்தி ருக்கும் பயணிகள் அமர்வதற்கு நிழற் குடை, இருக்கை வசதி இல்லை. இதனால் பெண்கள், குழந்தைகள், வயதான முதியோர் கடுமையான வெயிலிலும் நீண்ட நேரம் நின்று கொண்டு சிரமப்பட வேண்டி யுள்ளது. திருப்பூரில் இருந்து திண்டுக்கல், மதுரை, தேனி, திருநெல்வேலி, தூத்துக் குடி, நாகர்கோயில், செங்கோட்டை, ராமேசு வரம் உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் சீர்மிகு நகரம் திட்டத்தில் புதுப்பித்து கட் டும் பணி நடைபெற்று வருவதால் கோவில் வழி பேருந்து நிலையம் தற்காலிகமாக உரு வாக்கப்பட்டது. எனினும் நீண்டகால அடிப் படையில் தென் மாவட்டங்களுக்கான பேருந்து நிலையமாக இதை நிரந்தரமாக பயன்படுத்தவும் மாநகராட்சி நிர்வாகம் திட் டமிட்டுள்ளது. இந்நிலையில் கோயில் வழி பேருந்து நிலையத்தில் மக்களுக்கான அடிப்படை வசதிகள் முழுமையாக உருவாக்கப்பட வில்லை. நீண்ட தாமதத்திற்குப் பிறகு தான் பொதுக் கழிப்பிடம் குடிநீர் வசதி ஆகியவை கூட ஏற்படுத்தப்பட்டன. மேலும் பேருந்துக் காக வரக்கூடிய பயணிகள் காத்திருக்கும் நேரத்தில் அமர்வதற்கு நிழற்குடை மற்றும் இருக்கை வசதி இங்கு ஏற்படுத்தவில்லை. பேருந்து நிலையத்தின் சுற்றுப் புறச் சுவர் ஓரத்தில் மேற்கூரை அமைக்கப்பட்டிருந்தா லும், அங்கு இருக்கைகள் இல்லை. இங் கொன்றும், அங்கொன்றுமாக ஓரிரு இருக் கைகள் மட்டும் போடப்பட்டுள்ளன. இங்கி ருந்து தென் மாவட்டங்களுக்கு ஆயிரக்க ணக்கான மக்கள் பயணம் செய்யும் நிலை யில், போதுமான இருக்கை, நிழற்குடை இல்லை.
குறிப்பாக திருவிழா, திருமண முகூர்த் தம், வார விடுமுறை போன்ற சமயங்களில் இந்த பேருந்து நிலையத்தில் பல நூறு பேர் பேருந்துக்காக காத்திருப்பதை காணலாம். அதுவும் கைக் குழந்தைகளுடன் பெண்கள், பயணப் பைகளுடன் வயதான முதியோர், சிறார்கள் பலரும் உட்காருவதற்கும் வழி இல்லாமல், நிற்கவும் முடியாமல், தங்கள் ஊர் செல்லும் பேருந்து எப்போது வரும் என்றும் தெரியாமல் கால் கடுக்க, உடல் சோர்ந்து காத்திருக்கும் அவல நிலை இங்கு உள்ளது. பேருந்துகள் கால அட்டவணை கண்ணில் படும்படி இல்லை. தங்கள் கடும் உழைப்பை செலுத்தி இந்தியாவின் பின்னலாடை தலை நகரமாக திருப்பூரை உயர்த்திக் கொண்டிருக்கும் சாமானிய மக்களுக்கு இங்கு குறைந்த பட்ச வசதிகளைக் கூட செய்து தராதவர்க ளாக உள்ளாட்சி நிர்வாகமும், போக்குவ ரத்து துறையும் அலட்சியமாக உள்ளனர். எனவே, கோயில் வழி பேருந்து நிலை யத்தில் பயணிகளுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் முழு மையாக நிறைவேற்றி தரவேண்டும் என்று பயணிகள் எதிர்பார்க்கின்றனர். மாநகராட்சி போக்குவரத்து துறை அதி காரிகளின் காதுகளுக்கு அந்தக் குரல் கேட்குமா.