திருப்பூர் தெற்கு மாநகர அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு குழந்தைகளுக்கு பலூன் ஊதி விளையாட்டு விழா நடத்தப்பட்டது. இதில் தெற்கு மாநகர மாதர் சங்கத் தலைவர் மினி, மாநகரச் செயலாளர் எஸ்.பானுமதி மற்றும் கமிட்டி உறுப்பினர் சசிகலா, லலிதா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் பங்கேற்ற குழந்தைகள் பலூன் விளையாட்டில் மகிழ்ச்சியோடு கொண்டாடினர்.