திருப்பூர், பிப்.29- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப் பூர் தெற்கு மாநகரக் குழு சார்பில் கட்சி நிதி 4 லட்சத்து 38 ஆயிரத்து 93 ரூபாய் கட்சியின் மாவட்டச் செயலாளரிடம் வியாழனன்று அளிக்கப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.சுந்தரம் தலைமையில் நடைபெற்ற தெற்கு மாநகரக் குழு பேரவை கூட்டத்தில், கட்சி நிதியாக 4 லட்சத்து 38 ஆயிரத்து 93 ரூபாய் மாவட்டச் செயலாளர் செ.முத்துகண்ணனிடம் அளித்துள்ளனர். இதில், மாநகரச் செயலாளர் த.ஜெய பால் உட்பட மாநகரக்குழு உறுப்பினர்கள் கிளைச் செயலாளர்கள் பலர் பங்கேற்றனர்.