districts

img

திருப்பூர் தெற்கு மாநகர சிபிஎம் பேரவை: ரூ.4.38 லட்சம் கட்சி நிதி ஒப்படைப்பு

திருப்பூர், பிப்.29- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப் பூர் தெற்கு மாநகரக் குழு சார்பில் கட்சி நிதி 4  லட்சத்து 38 ஆயிரத்து 93 ரூபாய் கட்சியின்  மாவட்டச் செயலாளரிடம் வியாழனன்று அளிக்கப்பட்டது.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.சுந்தரம்  தலைமையில் நடைபெற்ற தெற்கு மாநகரக்  குழு பேரவை கூட்டத்தில், கட்சி நிதியாக 4  லட்சத்து 38 ஆயிரத்து 93 ரூபாய் மாவட்டச்  செயலாளர் செ.முத்துகண்ணனிடம்  அளித்துள்ளனர்.  இதில், மாநகரச் செயலாளர் த.ஜெய பால் உட்பட மாநகரக்குழு உறுப்பினர்கள் கிளைச் செயலாளர்கள்  பலர் பங்கேற்றனர்.