திருப்பூர், டிச. 22 - திருப்பூர் மாநகரில் நடைபெற்று வரும் முக்கியமான ஏழு சாலை பணிகளை மாநகராட்சி மேயர் ந.தினேஷ் குமார் நேரில் ஆய்வு செய்தார். வியாழக்கிழமையன்று வேலம்பாளையம் முதல் சோளிபாளையம் சாலை, அவிநாசி சாலை முதல் அவிநாசி கவுண்டம்பாளையம் சாலை, போயம்பாளையம் பிரிவு முதல் நஞ்சப்பா நகர் சாலை, போயம்பாளையம் முதல் வாவி பாளையம் சாலை, பொம்மநாயக்கன்பாளையம் முதல் கஞ்சம்பாளையம் சாலை, குமார் நகர் முதல் சாமுண்டிபுரம் சாலை மற்றும் சாமுண்டிபுரம் முதல் காவிலிபாளையம் புதூர் சாலை ஆகிய பகுதிகளில் நடைபெறும் 7 சாலைப் பணிகளை ஆய்வு மேற்கொண்டு, போர்க்கால அடிப்படையில் பணிகளை விரைந்து முடிக்க மேயர் ந. தினேஷ்குமார் அறிவுறுத்தினார். இந்நிகழ்வில் முதலாவது மண்டல தலைவர் உமா மகேஸ்வரி, இரண்டாவது மண்டல தலைவர் கோவிந்த ராஜ், மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி மற்றும் நெடுஞ் சாலை துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண் டனர்.