திருப்பூர், ஜூலை 18 - திருப்பூர், ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல் நிலைப் பள்ளியில் மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் மூலம் பள்ளி வளாகத்தில் முதல் கட்டமாக தூய்மைப் பணி ஞாயிற் றுக்கிழமை நடைபெற்றது. பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் மகேஸ்வரி தலை மையில் துணைத் தலைவர் ரத்னா உள்பட மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு பள்ளியின் நுழைவா யிலின் வலது பக்கம் உள்ள தோட்டப் பகுதிகளை சுத்தம் செய் தனர். இதைத் தொடர்ந்து துளசி உள்பட மூலிகை செடிகள் நடப்பட்டு அனைத்து மரம், செடிகளுக்கும் தண்ணீர் ஊற்றி னர். தலைமையாசிரியை ஸ்டெல்லா அமலோற்பவ மேரி மேற்பார்வையில் காலை 7 மணிக்கு ஆரம்பித்த சுத்தப்ப டுத்தும் பணி 10 மணி வரை நீடித்தது.