திருப்பூர், ஏப்.25- உலகம் முழுவதும் 8 மணி நேர வேலை என்ற உழைப்பாளி மக்களின் உரிமை முழக் கத்தை சாத்தியமாக்கிய மே தினத்தின் 138 ஆவது ஆண்டை பேரெழுச்சியுடன் கொண் டாடுவதற்கு திருப்பூர் மாநகரம் தயாராகி வருகிறது. திருப்பூரில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டத் தலைமை அலுவ லகமான தியாகி பழனிச்சாமி நிலையம் முன் பாக அவிநாசி சாலையில் பார்வையாளர் களை ஈர்க்கும் வகையில் பிரம்மாண்டமாக மே தின அலங்காரம் வைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மே தின விழாவை முன் னிட்டு அனைத்து குடியிருப்பு மற்றும் தொழிற் சாலை பகுதிகளிலும் செங்கொடி ஏற்றுவது, மாலை அவிநாசி சாலை சிஐடியு அலுவலகம் முன்பிருந்தும், பி.என்.ரோடு ஏஐடியுசி அலுவ லகம் முன்பிருந்தும் மே தின உழைப்பாளர் பேரணியைத் தொடங்குவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்காக அனைத்துப் பகுதிகளிலும் தயாரிப்புக் கூட்டங்கள் நடத் தப்பட்டு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.