districts

img

கைத்தறி நெசவாளர்களுக்கு தறி கூடத்துடன் கூடிய இலவச பசுமை வீடுகள் கட்டித்தரத் திருப்பூர் மாவட்ட மாநாடு வலியுறுத்தல்

திருப்பூர், ஜூலை 17- திருப்பூர் மாவட்டம் முழுவதும்  உள்ள கைத்தறி நெசவாளர்களுக் குத் தறி கூடத்துடன் கூடிய இலவச பசுமை வீடுகள் கட்டித்தர வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்களை வலியு றுத்தி திருப்பூர் மாவட்ட கைத்தறி நெசவாளர் சங்க சிஐடியூ கோரிக்கை  மாநாடு நடைபெற்றது. திருப்பூர் மாவட்டம் கைத்தறி நெசவாளர் சங்கம் சிஐடியு கோரிக்கை மாநாடு, பல்லடத்தில் உள்ள சிஐடியு அலுவலகத்தில் மாவட்ட தலைவர் என் கோபால் தலைமையில் நடைபெற்றது. அஞ் சலி தீர்மானத்தைச் சுப்பிரமணி முன்மொழிந்தார். துணைத் தலைவர்  திருவேங்கடசாமி வரவேற்புரை ஆற் றினார். சிபிஎம் தாலூக்கா செயலாளர்  பரமசிவம் வாழ்த்துரை ஆற்றினார். சிஐடியு மாவட்ட தலைவர் உன்னிகி ருஷ்ணன் சிறப்புரை ஆற்றினார்.  இதைத்தொடர்ந்து மாவட்டச் செய லாளர் என் கனகராஜ் தீர்மானங்களை  முன் மொழிந்தார்.

இதையடுத்து திருப்பூர் மாவட் டத்தில் உள்ள ஆயிரக்கணக்கான கைத்தறி நெசவாளர் தொழிலாளர் கள் நலன் கருதி தற்சமயம் ஏறியுள்ள  விலைவாசி உயர்வுக்கு ஏற்ப கடனு தவி வழங்க வேண்டும். மாவட்டம்  முழுவதும் உள்ள கைத்தறி நெசவா ளர்களுக்கு இலவச வீட்டு மனை இட மும், தறி கூடத்துடன் கூடிய பசுமை வீடுகளும் கட்டித்தர வேண்டும். தமிழ்நாடு கட்டுமான நலத்  தொழி லாளர்களுக்கு வீடு கட்ட ரூபாய் ரூ. 4 லட்சம் வழங்குவது போல் நலவா ரியத்தில் உள்ள கைத்தறி நெசவா ளர்களுக்கும் வழங்க வேண்டும். கைத்தறி நெசவாளர்களுக்கு என்று  ஒன்றிய அரசு தனியாகக் கூட்டுறவு  வங்கியை அமைக்க வேண்டும். பல் லடம் வினோபா நகர் மக்களுக்குத் தடையின்மை சான்று வழங்கி வீடு கட்ட கடனுதவி வழங்க வேண்டும். கைத்தறி நெசவாளர்களுக்கு வழங் கப்படும் ஓய்வூதியம் ரூபாய் ஆயி ரத்திலிருந்து 3000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும்  உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டது. புதிய நிர்வாகிகள் தேர்வு : இம்மாநாட்டில் திருப்பூர்  கைத் தறி நெசவாளர் சங்கத் மாவட்ட தலை வராக கே.திருவேங்கடசாமி, மாவட் டச் செயலாளராக என்.கனகராஜ், மாவட்ட பொருளாளராக என்.கோபால், துணைத் தலைவராகச் சுப் பிரமணி, துணைச் செயலாளராக ராம நாதன், உள்ளிட்ட 13 கொண்ட நிர் வாக குழு தேர்வு செய்யப்பட்டது. முடிவில் மாவட்ட மாநாட்டை நிறைவு செய்து நாகராஜ் நன்றி கூறி னார்.