திருப்பூர், ஜூலை 28 - திருப்பூர் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் மூலம் 4 ஜி அலை பேசி சேவை உடனே வழங்க வலியுறுத்தி அனைத்து பிஎஸ் என்எல் ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பிஎஸ்என்எல் டவர்களை தனியாருக்கு விடக் கூடாது, பிஎஸ்என்எல் கேபிள்களை தனியாருக்கு தாரை வார்க்கக் கூடாது, 4 ஜி சேவையை உடனடியாக வழங்க வேண்டும் உள் ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை காலை திருப்பூர் மெயின் தொலைபேசி நிலையம் முன்பாக ஏயுஏபி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் என்எப்பிடி தலைவர் ஆண்டனி மரியபிரகாஷ் தலைமை வகித்தார். பிஎஸ்என்எல் ஊழியர் சங்க முன்னாள் மாநில துணைச் செயலாளர் எஸ்.சுப்பிரமணியன், ஓய்வூ தியர் சங்க மாநில நிர்வாகி ஏ.முகமது ஜாபர், பிஎஸ்என்எல் ஊழியர் சங்க கிளைச் செயலாளர் குமரவேல் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர். இதில் பெருந்திரளா னோர் கலந்து கொண்டு கோரிக்கை முழக்கம் எழுப்பினர்.