திருப்பூர், ஜூன் 24- திருப்பூர் காதர்பேட்டை பனியன் சந்தை யில் ஏற்பட்ட தீ விபத்தில் 50 க்கும் மேற்பட்ட கடைகள் எரிந்து முழுமையாக சாம்பலா னது. தீ விபத்து நடந்த இடத்தில் செய்தி மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் ஆய்வு செய்து, வணிகர்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் நாளைய தினமே கடை கள் அமைக்கப்படும் என உறுதியளித்தார். தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண் டும் என சாலையோரம் வியாபாரிகள் சங்கம் மற்றும் பாதிக்கப்பட்ட வணிகர்கள் கேட்டுக் கொண்டனர். திருப்பூர் ராயபுரம் அருகே காதர்பேட்டை பகுதியில் மிகப்பெரிய பனியன் சந்தை செயல்பட்டு வருகிறது. இங்குள்ள தனியார் இடத்தில் பனியன் பஜார் என்ற பெயரில் 50க்கும் மேற்பட்ட சிறுகடைகள் அமைக்கப் பட்டு வியாபாரம் நடைபெற்று வந்தது. வெள் ளியன்று இரவு 9.30 மணியளவில் இங்கு திடீ ரென தீப்பற்றியது. இந்த வளாகம் முழுவதும் காங்கிரீட் சுவர்கள் இல்லாமல் தகரம் மற்றும் பிளாஸ்டிக் தடுப்புகள் அமைக்கப்பட்டு கடை கள் செயல்பட்டு வந்தன. இங்குள்ள கடை களின் உள்ளே ஏராளமான பனியன் ஆடை கள் இருப்பு வைக்கப்பட்டிருந்தன. தீப்பற்றி யவுடன் உடனடியாக இந்த வளாகம் முழுவ தும் உள்ள அனைத்து கடைகளிலும் தீ விரை வாக பரவியது. இந்த தீயில் 50 க்கும் மேற்பட்ட கடைகள் முழுமையாக எரிந்து சாம்பல் ஆனது. தீ எரிவதைக்கண்டு அக்கம் பக்கத்தி னர் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளித்தனர். திருப்பூர் வடக்கு, தெற்கு, அவி நாசி, பல்லடம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஐந்துக்கும் மேற்பட்ட தீயணைப்பு வாக னங்கள் கொண்டு வரப்பட்டு, பல மணி நேரப் போராட்டத்திற்கு பிறகு தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதனைதொடர்ந்து இரவு மாவட்ட ஆட்சி யர், சட்டமன்ற உறுப்பினர், மாநகராட்சி ஆணையாளர் உள்ளிட்டோர் சம்பவ இடத் திற்கு வந்தனர். சனியன்று காலை மாநில செய்தி மற்றும் தமிழ் வளர்ச்சி துறை அமைச் சர் சாமிநாதன் சம்பவ இடத்தில் பார்வை யிட்டு நேரில் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வுக்கு பின் செய்தியாளர்களை சந் தித்த அவர், வெள்ளியன்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில் 50 கடைகள் மூன்று வீடுகள் 4 இருசக்கர வாகனங்கள் சேதமடைந்திருக் கின்றன. தோராயமாக அதன் மதிப்பு மூன்று கோடி ரூபாய் என தெரிய வந்திருக்கிறது. வணிகர்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் நாளைய தினமே மீண்டும் இவ் விடத்தில் கடைகள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டும் என்றார். சம்பவம் நிகழ்ந்த உடனே சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட ஆட்சியர், மாநகர மேயர், மாநகராட்சி ஆணையாளர் உள்ளிட் டோர் சம்பவ இடத்திற்கு வந்து பணிகளை துரிதப்படுத்தினர். இந்த சம்பவத்தில் உயிர் சேதமோ, காயமோ இல்லை எனவும் தெரி வித்தார். மேலும் வணிகர்களுக்கான இழப் பீடு குறித்து மாவட்ட ஆட்சியர் தமிழக அரசு டன் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுப்பார் எனத் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பி னர் செல்வராஜ், தமிழக அரசால் என்ன இழப்பீடு வழங்க முடியுமோ அதை மாவட்ட நி ர்வாகம் தொடர்ந்து முயற்சி செய்யும், சட்ட மன்ற உறுப்பினர் என்ற முறையில் தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.50 ஆயிரம் உதவி வழங்கினார். மேலும் வணிகர் களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் நாளைய தினமே அவர்களின் கடைகள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட வணிகர்கள் மற்றும் சாலை யோர வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் தமி ழக அரசு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண் டனர்.