districts

img

கண்ணாடி உடைந்து பெண் பயணி காயம்

கோவை, மார்ச் 18- டைமிங் பிரச்சனையை முன்வைத்து தனியார் பேருந்து களின் ஊழியர்கள் நடத்தும் அளப்பறைகள் நாளுக்குநாள் பொதுமக்களை முகம் சுழிக்க வைத்துள்ளது. இதன்தொ டர்ச்சியாக, முன்னே சென்ற பேருந்தை இடித்து தள்ளிய மற்றொரு பேருந்து ஓட்டுநரின் நடவடிக்கையால் பய ணிகள் அதிர்ச்சியடைந்தனர். இதில், பெண் பயணி ஒருவர் காயமடைந்தார்.  வடவள்ளி –- ஒண்டிப்புதூர் வழித்தடத்தில் 1சி எண் கொண்ட ஜெய்சக்தி மற்றும் முருகன் என்ற இரு தனியார் பேருந் துகள் 10 நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இரு பேருந்துகள் மாலை 5.45 மணியளவில் ஒண்டிப்புதூரில் இருந்து 5 நிமிட இடைவெளியில் புறப்பட் டன. போக்குவரத்து நெரிசல் காரணமாக யார் முன் செல்வது எனக்கூறி இரு பேருந்து ஒட்டுநர்களுக்கு டைமிங் பிரச்சனை ஏற்பட்டது.  இரு பேருந்துகள் போட்டி போட்டு கொண்டு வேகமாக ராமநாதபுரம் சிக்னல் அடைந்தது. அப்போது, ஜெய்சக்தி பேருந்து சிக்னலில் முன் நின்று கொண்டிருந்தது, அப் போது பின் வந்த, முருகன் பேருந்து ஒட்டுநா் வலதுபக்கம் முன்னேறி, பெண்கள் அமர்திருந்த வலது பகுதியில் இடித்துள் ளார். இதனை கண்ட பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதில், பெண்கள் முன் பகுதியில் ஏறும் பகுதியில் ஜன்னல் கண்ணாடி சிதலமடைந்தது. ஜன்னல் ஓரத்தில் அமர்ந்தி ருந்த பெண் ஒருவரின் கையில் கண்ணாடி  இடித்தால், கையில் வீக்கம் ஏற்பட்டது. 

இதையடுத்து, இரு பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர் கள் சிக்னலில் பிரச்சனை ஏற்பட்டது. அங்கு இருந்த போக்கு வரத்து போலீசார் பயணிகனை இறக்கவிட்டு, இரண்டு பேருந்துகளை அப்புறப்படுத்தினர். இந்த சம்பவம் பேருந்தில் பயணத்தில் குழந்தைகள், பள்ளி மாணவர்கள், பெண்கள், முதியவர்கள் என பலரை அதிர்ச்சிகுள்ளாக்கியுள்ளது.  இதுகுறித்து பெண் பயணி ஒருவர் கூறுகையில், வேண்டு மென்றே பின்னே வந்த பேருந்து முன்பக்கம் வந்து இடித்தது.  இதில், ஒரு பெண் பயணிக்கு கண்ணாடி உடைந்து கையில் ஏறி காயம் ஏற்பட்டது. ஒரு குழந்தைக்கும் லேசான காயம் ஏற்பட்டது. நேர பிரச்சனை என்றால், பேருந்து ஓட்டுநர் கள் பேசி தீர்த்துகொள்ளாமல், பல பேர் பயணிக்கும் பேருந் தில், வேண்டுமென்றே மோதுவது கொலை முயற்சி போன்றே  உள்ளது. நல்ல வேளையாக வேறு எந்த பயணிகளுக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை. இருந்தபோதிலும், பேருந்து ஒட்டுநர் இப்படி செய்வது பயணிகள் உயிருக்கு உத்தரவாத மாக இருக்க முடியாது. எனவே, பேருந்து மீது மோதிய ஒட்டுநர் மற்றும் நடத்துநரின் உரிமத்தை ரத்து செய்ய போலீசார் நடவ டிக்கை வேண்டும். இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் தனி யார் பேருந்துகளின் நிறுவனத்தின் மீது போக்குவரத்து துறை  கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். தனியார் பேருந்துகளின் இதுபோன்ற செயல்கள் புதியாது  அல்ல. அன்றாடம் கோவை மாநகரத்தின் ஏதாவது ஒரு பகுதி யில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்து கொண்டே இருக்கி றது. மாவட்ட நிர்வாகம் தலையிட வேண்டும் என்பதே அனை வரது வேண்டுகோளாகவும் இருக்கிறது.