districts

img

நீடித்த வளர்ச்சியின் இலக்கை நிறைவேற்ற காலக்கெடு

ஈரோடு, டிச.3- மாற்றுத்திறனாளிகளுக்கான நிலையான நீடித்த வளர்ச்சியின் இலக்கை நிறைவேற்ற காலக்கெடு முடிவு செய்ய வேண்டும் உள் ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மாற்றுத் திறனாளிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  மாற்றுத்திறனாளிகளுக்கான நிலையான நீடித்த வளர்ச்சியின் இலக்கை நிறைவேற்ற காலக்கெடு முடிவு செய்ய வேண்டும். தேசிய நிதியம் உடனே தொடங்க வேண்டும். நிதி ஒதுக்கீட்டை உயர்த்தி, உதவித்தொகையை உடனே உயர்த்தி வழங்க வேண்டும். கிரா மப்புற 100 நாள் வேலை என்பதை, 200 நாளாக மாற்றி கூலியை ரூ.600 ஆக உயர்த்தி வழங்க  வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமை களுக்கான சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புதிய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் சத்தி ஒன் றிய தலைவர் பி.ஆனந்தன் தலைமை வகித் தார். ஒன்றிய செயலாளர் எஸ்.ஏ.ராம்தாஸ் கோரிக்கைகளை விளக்கி பேசினார். போராட்டத்தை வாழ்த்தி மார்க்சிஸ்ட் கட்சி யின் ஒன்றிய செயலாளர் கே.எம்.விஜய குமார் பேசினார். இதேபோன்று, ஈரோடு இபிபி நகரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு சங்கத்தின் நகர செயலாளர் செந்தில் குமார் தலைமை வகித்தார். மாவட்டப் பொரு ளாளர் ராஜூ சிறப்புரையாற்றினார். மாவட்டக் குழு உறுப்பினர் ரேணுகா நன்றி கூறினார்.

நாமக்கல்

உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு அனைத்துவகை மாற் றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரி மைகளுக்கான சங்கம் சார்பில், கொடியேற் றுதல் மற்றும் சங்கப்பெயர் பலகை திறப்பு  விழா நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் வட்டார பகுதி முழுவதும் நடைபெற்றது.  ஆவரங்காடு, ஓடப்பள்ளி அக்ரஹாரம் கிளை, காவிரி ஆர் எஸ் கிளை, வெடியரசம்பாளை யம் கிளை உள்ளிட்ட பள்ளிபாளையம் ஒன் றிய பகுதியின் பல்வேறு இடங்களில் மாற் றுத்திறனாளிகள் சங்க கொடியேற்றுதல் விழா மற்றும் பெயர் பலகை திறப்பு விழா  நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், பள்ளிபாளை யம் தாலுகாத் தலைவர் அர்ஜுனன், தாலுகாச் செயலாளர் அருண்குமார், தாலுகாப் பொரு ளாளர் கனகவள்ளி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்க கொடியினை ஏற்றி மாவட்ட  அமைப்பாளர் எம்.ஆர்.முருகேசன் சிறப்பு ரையாற்றினார். மேலும், தாலுகா துணைச் செயலாளர் சரவணன், ஓடப்பள்ளி கிளைத் தலைவர் சுப்பிரமணி, மதிமுக நகரச் செய லாளர் ரமேஷ் மற்றும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள், மாற்றுத்திறனாளிகள் என பலர் நிகழ்வில் பங்கேற்றனர். இதேபோன்று, நாமக்கல் நகராட்சி, அர சினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி (தெற்கு) கலையரங்கத்தில் உலக மாற்றுத்திறனாளி கள் தின விழா நடைபெற்றது. இவ்விழாவில், விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்று முதல் மூன்று இடங்களை பிடித்த அனைத்து சிறப்பு பள்ளி மாற்றுத்திறனாளி குழந்தைக ளுக்கு பரிசுகளையும், 15 மாற்றுத்திறனாளிக ளுக்கு தலா ரூ.16.05 லட்சம் மதிப்பீட்டில் பேட் டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலி களும் வழங்கப்பட்டன. மேலும், சமூக பாது காப்பு திட்டத்தின் கீழ் 23 மாற்றுத்திறனாளி களுக்கு தலா ரூ.3.91 லட்சம் மதிப்பீட்டில் ரூ.20.24 லட்சம் மதிப்பீட்டிலான அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மாநிலங்க ளவை உறுப்பினர் கே.ஆர்.என்.ராஜேஸ் குமார் கலந்து கொண்டு நலத்திட்ட உதவி களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ச.உமா, நாமக்கல் சட்டமன்ற உறுப் பினர் பெ.இராமலிங்கம், நாமக்கல் நகர்மன்றத் தலைவர் து.கலாநிதி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மகிழ்நன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், துறை சார்ந்த அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

திருப்பூர்

சர்வதேச மாற்றுதிறனாளிகள் தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு அனைத்துவகை மாற் றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரி மைகளுக்கான சங்கத்தின் சார்பில் சனியன்று தாராபுரம், அண்ணா சிலை முன்பு விடியல் முழக்கம் என மெழுவர்த்தி ஏந்தி கொண்டா டப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு சங்கத்தின் தாரா புரம் கிளை துணைத்தலைவர் பாத்திமா  தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தாலூகாச் செயலாளர் என்.கனகராஜ், மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் குறித் தும், அவர்களின் கோரிக்கைகளை அரசு  நிறைவேற்றக்கோரியும் உரையாற்றினார். இந் நிகழ்ச்சியில் சங்கத்தின் கிளைத்தலைவர் வீரக்குமார், செயலாளர் சந்திரன், பொருளா ளர் தேவசகாயம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.