districts

img

“கையேந்தி பவனி”டம் வீரத்தை காட்டும் மாநகராட்சி அதிகாரிகள்

கோவை, டிச.20- சாலையோர கடைகளை அகற்றக்கோரி எந்தவித முன்ன றிவிப்பின்றி கோவை மாநகராட்சி அதிகாரிகள் அடாவடியாக உணவுப்பொருட்களை சாலை யில் வீசி எரிந்து அரஜாக நடவடிக் கையில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சி யை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாநகராட்சிக்குட்பட்ட வஉசி மைதானம், பூங்கா ஆகிய பகுதியில் 30 ஆண்டுகளுக்கு மேலாக தள்ளுவண்டி மற்றும் சிறிய கடைகள் அமைத்து சிற் றுண்டி, கைவினைப் பொருட் கள் விற்பனை செய்து வாழ்வா தாரத்தை பாதுகாத்து வருகின் றனர்.  இந்நிலையில், கோவை மாநக ராட்சி அதிகாரிகள் எந்தவித முன் னறிவிப்புமின்றி திங்களன்று மாலை கிரேன் இயந்திரத்துடன் வந்து, அடாவடியாக கடைகளை இடித்து அகற்றினர். மேலும், கடை களில் இருந்த மாவு, சாம்பார் உள்ளிட்ட உணவுப்பொருட்களை கீழே தரையில் கொட்டி அதிகார ஆணவத்தை வெளிப்படுத்தினர். கடை உரிமையாளர்கள் ஊழி யர்கள் ஒரு நாள் அவகாசம் வழங்க  வேண்டும் என பனிந்து கேட்டும், மாநகராட்சி அதிகாரிகள் காதில் போட்டுக்கொள்ளவே இல்லை. இதையடுத்து அங்கு வந்த வந்த சிஐடியு மாவட்ட நிர்வாகி ரத்தினகுமார் தலைமையில் சாலை யோர வியாபாரிகள் சங்கத்தினர் மாநகராட்சி மேயர் மற்றும் மண்டல அதிகாரிகள் அனைவரிடத்திலும் முறையிட்டனர். 

ஆனால், மாநகராட்சி அதிகாரி கள் எந்தவித முன்னறிவிப்புமின்றி கடிதம் கொடுக்காமல் பிடிவாத மாக கருணையின்றி கடைகளை உடைத்து அகற்றினர். கடை நடத்த  தயார் செய்து கொண்டிருந்த  நூற்றுக்கணக்கான வியாபாரி களின் ஆயிரக்கணக்கான மதிப் பிலான உணவு மற்றும் மூலப் பொருட்கள் வீணாகியது. இது குறித்து பாதிக்கப்பட்ட சாலை யோர வியாபாரிகள் கூறுகையில்,  1990களிலிருந்து ரூ.2, ரூ.5 முதல் தொடர்ந்து ஆண்டாண்டுகளாக நில வாடகை செலுத்தி அனுமதி  பெற்று கடைகளை நடத்தி வந் தோம். கடந்த 2014 ஆம் ஆண்டில் கடைகளுக்கு அனுமதி லைசன்ஸ் வழங்கி 89 கடைகளுக்கு அங்கீ காரம் வழங்கப்பட்டது. அதேகால கட்டத்தில் சுமார் 60க்கும் மேற்பட்ட  கடைகளுக்கு, “தள்ளுவண்டி, கூடைகள், தரைவிரிப்பு ஆகிய வற்றை வியாபாரம் செய்பவர் களை பிறகு வகைப்படுத்தலாம்” எனக்கூறி அனுமதி அங்கீகாரம் வழங்காமல் இருந்தது.

அந்த சமயத்தில் அங்கீகாரம் பெறமுடியாத கடைகளுக்கு அனுமதி பெற மாவட்ட, மாநகர நிர்வாகத்திடம் பலமுறை கோரிக் கை வைத்தும், மாவட்ட, மாநகர நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை. இப்போது திடீரென வந்து கடை களை உடைத்து செல்கின்றனர். மாநகராட்சி அதிகாரிகளின் இந்த நடவடிக்கையை கண்டித்து விரை வில் ஒன்றிணைந்து போராட்டத் தில் ஈடுபட உள்ளோம் என்றனர். எளிய மக்களின் “கையேந்தி பவனாக” இருக்கும் இந்த கடை களை நடத்துபவர்களும், வாங்கி  உண்பவர்களும் எளிய உழைப் பாளி மக்களே. அன்றாடம் கிடைக் கும் வருவாயை கொண்டு, வாழ்க் கையை நடத்தும் இதுபோன்ற சாலையோர வியாபாரிகளிடம் தனது அதிகாரத்தின் வீரத்தை வெளிப்படுத்தும் மாநகராட்சி அதிகாரிகள், விதிமீறல்களையே அன்றாட நடவடிக்கையாக கொண் டுள்ள ஜக்கியின் ஈஷா மையம் போன்ற அமைப்புகளின் விதிமீறல் களுக்கு சலுகை வழங்க வேண்டும்  என நீதிமன்றத்திடம் கைகட்டி யாசகம் கேட்பதையும், நீதிமன்ற மும் விதிமீறல்களுக்கு ஆசி வழங் குவதையும் மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.