திருப்பூர், அக். 8 - ஊத்துக்குளி அருகே பள்ளத் தோட் டம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் மூன்று மாதங்களாக ஊக்கத் தொகை வழங்காததை கண்டித்து அக்டோபர் 10ஆம் தேதி செங்கப்பள்ளி யில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று பால் உற்பத்தியாளர்கள் முடிவு செய் துள்ளனர். திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி வட்டம், ஈ.டி.585 பள்ளத்தோட்டம்பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத் தில் பால் உற்பத்தியாளர்கள் ஆலோ சனை கூட்டம் திங்களன்று நடைபெற் றது. இதில், கடந்த ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் ஆகிய மூன்று மாதத்திற் கான பால் லிட்டர் ஒன்றுக்கு ரூ.3 கொடுத்து வந்த ஊக்க தொகையை தற் போது நிறுத்திவிட்டது குறித்தும், கால்நடை மருத்துவர், சங்கத்திற்கு வருகை தராதது குறித்தும், கால்நடைக ளுக்கு கலப்பு தீவனம் வழங்காதது குறித்தும், கறவை மாடுகள் இன்சூ ரன்ஸ் குறித்தும் ஆலோசனை செய்யப் பட்டது. தவிடு, புண்ணாக்கு, பருத்தி கொட்டை, விதை சோளம் கடுமையான விலை உயர்வு ஏற்பட்டுள்ள சூழ் நிலையில் தமிழக அரசும், ஆவின் நிர் வாகமும் லிட்டர் ஒன்றுக்கு ரூ.3/- வழங்கி வந்த ஊக்கத்தொகையை கடந்த 3 மாதமாக நிறுத்தியுள்ளது பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என பால் உற்பத்தியாளர்கள் தெரிவித்த னர். ஆகவே நிறுத்தப்பட்ட ஊக்கத் தொகையை வழங்க கேட்டும் கால்நடை கலப்பு தீவனம், கால்நடை மருத்துவர் கள் வருகை, இன்சூரன்ஸ் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 10 ஆம் தேதி வியாழன் காலை 10 மணிக்கு செங்கப்பள்ளி மேம்பாலம் அருகில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடத் துவது, இந்த போராட்டத்திற்கு ஊத்துக் குளி தாலுகாவில் உள்ள அனைத்து சங்கங்களிலும் பால் ஊற்றி வரும் சங்க உறுப்பினர்களுக்கு தகவல் கொடுத்து திரட்டுவது எனவும் முடிவு செய்யப்பட் டது. கூட்டத்திற்கு தலைவர் முருகசாமி தலைமை வகித்தார். ஈஸ்வரி முன் னிலை வகித்தார். தமிழ்நாடு விவசாயி கள் சங்க மாவட்டச் செயலாளர் ஆர். குமார் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார். தமிழ்நாடு பால் உற்பத்தி யாளர்கள் சங்க கமிட்டி உறுப்பினர் சுப் பிரமணி உட்பட விவசாயிகள் கலந்து கொண்டனர்.