தமுஎகச சார்பில் முப்பெரும் விழா
தமுஎகச சார்பில் முப்பெரும் விழா நாமக்கல், டிச.23- திருச்செங்கோட்டில் தமுஎகச சார்பில் நடைபெற்ற முப்பெரும் விழாவில், ஏராளமானோர் கலந்து கொண் டனர். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்களின் சங்கத்தின் பொன்விழா, கவிஞர் தமிழ் ஒளி நூற்றாண்டு நிறைவு மற்றும் சிந்துவெளி அகழாய்வு நூற்றாண்டு நிறைவு என முப்பெரும் விழாவை, தமுஎகச-வின் நாமக் கல் மாவட்டம், திருச்செங்கோடு பகுதி கிளைகளின் சார்பில் ஞாயிறன்று திருச்செங்கோடு கே.எம்.மஹா லில் நடைபெற்றது. தமுஎகச கிளைத் தலைவர் சீ.பரணி தரன் தலைமை வகித்தார். சூரியம்பாளையம் கிளைச் செயலாளர் சி.ரமேஷ்குமார், திருச்செங்கோடு நகரக் கிளைத் தலைவர் ஆர்.நந்தகோபல் ஆகியோர் முன் னிலை வகித்தனர். மாவட்ட துணைத்தலைவர் க.கோபி வரவேற்றார். மாநில பொதுச்செயலாளர் ஆதவன் தீட் சண்யா சிறப்புரையாற்றினார். மாவட்டச் செயலாளர் சீ. சேகரன் நிறைவுரையாற்றினார். முடிவில், நகரக்கி ளைச் செயலாளர் எம்.நித்தியானந்தன் நன்றி கூறினார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கல்லூரி மாணவர் மீது தாக்குதல்
கல்லூரி மாணவர் மீது தாக்குதல் சேலம், டிச.23- கல்லூரி மாணவர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்ப வம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். சேலம் மாவட்டம், காடையாம்பட்டியை அடுத்த பொட்டியபுரத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் மகன் ஸ்ரீதர் (20). தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பொறியியல் பயோ மெடிக்கல் பயின்று வரும் இவர், அதே கல்லூரியில் பயிலும் கொண்டலாம்பட்டி யைச் சேர்ந்த மாணவியை காதலித்து வந்ததாக கூறப் படுகிறது. இதற்கிடையே அந்த மாணவிக்கும், அதே ஊரைச் சேர்ந்த மோகன் என்பவருக்கும் கடந்த டிச.15 ஆம் தேதி திருமணம் பேசி முடிக்கப்பட்டது. இதைய டுத்து ஸ்ரீதர் அந்த மாணவியிடம் தான்கொடுத்த ரூ.2,500 பணம், தேர்வு அனுமதிச் சீட்டு, புத்தகங்களைத் திருப் பித் தருமாறு கேட்டுள்ளார். இதையறிந்த மோகன், ஸ்ரீதரை தொடர்பு கொண்டு காளிப்பட்டி குடிநீர் தொட்டி அருகே வந்து அனைத்தையும் வாங்கி கொள்ளுமாறு கூறியுள்ளார். அதை நம்பி ஸ்ரீதர் அங்கு சென்றபோது, மோகனும் அவரது நண்பர்கள் 6 பேரும் சேர்ந்து ஸ்ரீதரை தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த ஸ்ரீதர் ஓம லூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள் ளார். மேச்சேரி காவல் துறையினர் சம்பவ விசாரணை நடத்தி மாணவரை தாக்கிய சேலம், சித்தனூரைச் சேர்ந்த மோகன் (20) மற்றும் 3 சிறார்களை கைது செய்தனர். மேலும், 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஊராட்சி செயலர் மீது திமுக நிர்வாகி ஊழல் புகார்
ஈரோடு, டிச.23- பிரம்மதேசம் ஊராட்சி செயலாளர் மீது திமுக நிர்வாகி அடுக்கடுக்கான ஊழல் புகார்களைத் தெரிவித்த சம்ப வம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம், அந்தியூர் வட்டத் திற்குட்பட்ட மணக்காட்டுத்தோட்டத் தைச் சேர்ந்த திமுக தொண்டரணி நிர் வாகி எஸ்.வி.சண்முகம் குறைதீர் கூட் டத்தில் கொடுத்த மனுவில் தெரிவித் துள்ளதாவது, பிரம்மதேசம் ஊராட்சி யில் செயலாளராக சின்னசாமி என்ப வர் கடந்த 29 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். இவர் சுமார் ரூ.2 லட்சம் மதிப் புள்ள ஆழ்துளை கிணறு குழாய்களை விற்று விட்டார். ஜல்ஜுவன் திட்டத்தின் கீழ் தலா ரூ.2 ஆயிரம் வீதம் 300 வீடுக ளில் வசூலித்து தானே வைத்துக் கொண் டார். வசூலித்த பணத்திற்கு ரசீது எது வும் வழங்கவில்லை. இதனால், ஊராட் சிக்கு ரூ.6 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளது. முனியப்பம்பாளையம், பிரம்மதேசம் புதூர், செம்புளிச்சாம்பாளையம் ஆகிய பகுதிகளில் மஹால், மருத்துவமனை இடங்களுக்கு அனுமதி வழங்குவதில் முறைகேடு செய்துள்ளார். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் வேலைக்கு வராதவர்களை வந்ததுபோல கணக்கு எழுதி தொகை யைப் பெற்றுள்ளார். இதற்கு பணித்தள பொறுப்பாளரும் உடந்தையாக இருந் துள்ளார். இவ்வாறு வரும் வருவாயில் ஊராட்சி செயலர் தனது பெயரிலும், தனது மனைவி பெயரிலும் சொத்து களை வாங்கி குவித்துள்ளார். எனவே அவர் களவாடிய பணத்தை பறிமுதல் செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண் டுமென மனு அளித்துள்ளார்.
சுகாதாரமற்ற விடுதி? மருத்துவரை கடித்த விஷப்பூச்சி
கோவை, டிச.23- கோவை அரசு மருத்துவமனை தங்கும் விடுதி சுகாதாரமற்ற நிலையில் இருந்த நிலை யில், விஷப்பூச்சி கடித்து பயிற்சி மருத்துவர் ஒருவர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக் கப்பட்டுள்ளார். கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத் துவமனையில் ஏராளமான பயிற்சி மருத்து வர்களும் பணியாற்றி வருகின்றனர். மருத்து வமனை வளாகத்திலேயே அவர்களுக்கான தங்கும் விடுதியும் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் ஞாயிறன்று இரவு பணி முடிந்து சென்ற பயிற்சி மருத்துவர் ஜெயக் குமார் என்பவர் வழக்கம் போல விடுதி அறை யில் ஓய்வு எடுத்துள்ளார். பின்னர் காலை மீண்டும் எழுந்து பார்த்த போது, காலில் பூச்சி கடித்தது போல லேசான காயம் இருந்துள் ளது. மேலும், வலி ஏற்பட்டதால் அவர் அவசர சிகிச்சை பிரிவிற்கு சென்றார். அங்கு மருத்து வர்கள் பரிசோதனை செய்து, ஐ.சி.யு பிரிவில் அனுமதித்தனர். அவரை பாம்பு அல்லது வேறு ஏதாவது விஷப் பூச்சி கடித்தாக என்பது குறித்தும் பரிசோதனை செய்து வருகின்ற னர். இது குறித்து பேசிய மருத்துவமனை முதல்வர் நிர்மலா கூறியதாவது, பயிற்சி மருத்துவர் விடுதி அறையில் இருந்த போது, பூச்சி ஏதோ கடித்துள்ளதாக கூறினார். அவர் தொடர் மருத்துவர்கள் கண்காணிப்பில் உள் ளார். மேலும் தற்போது வரை உடல் நலம் சீராக உள்ளது. இருப்பினும் அவரது ரத்தத் தில் உறையும் தன்மை சற்று அதிகமாக இருந்ததால் இன்றும் கண்காணிப்பில் இருப் பார். தகவல் தெரிந்ததும் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டேன். விடுதியின் பின் னால் உள்ள குப்பைகளையும் அகற்ற கூறி யுள்ளேன். பாம்பு கடித்ததா? அல்லது வேறு பூச்சி கடித்ததா? என இதுவரை உறுதிபடுத்த வில்லை என கூறினார்.
கைதி தப்பியோட்டம்: 5 காவலர்கள் பணியிடை நீக்கம்
திருப்பூர், டிச.23 - திருப்பூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி தப்பி ஓடிய சம்பவத்தையடுத்து, கோவை மத்திய சிறை கண்கா ணிப்பாளர் செந்தில்குமார் காவலர்கள் 5 பேரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். திருப்பூர் மாநகரம் நல்லூர் காவல் நிலைய எல்லைக்குட் பட்ட வழிப்பறி சம்பவத்தில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பாரதிநகர் பகுதியைச் சேர்ந்த சூர்யா (24) என்ப வர் கடந்த மாதம் 19ஆம் தேதி கைது செய்யப்பட்டு, திருப்பூர் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், கடந்த 21ஆம் தேதி சிறையில் வருகை பதிவை சரிபார்த்த போது, சூர்யா காணாமல் போனது தெரிய வந்தது. இதைய டுத்து, சிறை முழுவதும் ஆய்வு செய்ததில், சிறையில் ஒரு புறத் தில் இருந்த இரும்பு வேலி வழியாக அவர் தப்பிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்ப வம் தொடர்பாக ஞாயிறன்று கோவை சரக சிறைத்துறை டிஐஜி சண்முகசுந்தரம் சிறையில் விசாரணை மேற்கொண் டார். இதையடுத்து கைதி தப்பியோடிய சம்பவம் தொடர்பாக திருப்பூர் மாவட்ட சிறையின் உதவி சிறை அலுவலர்கள் கங்கா ராஜன், சீதா, முதல்நிலைக் காவலர் ராஜபாண்டி, இரண்டாம் நிலை காவலர்கள் சக்திவேல், ரவிக்குமார் ஆகிய 5 பேரை பணியிடை நீக்கம் செய்து அவர் உத்தரவிட்டுள்ளார். மேலும், தப்பி ஓடிய சூர்யாவை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
சொத்து தகராறு: தம்பியை கொலை செய்து விபத்து நாடாகமாடிய அண்ணன் கைது
அவிநாசி, டிச.23 - அவிநாசி அருகே குட்டகத்தில் தம்பியைக் கொலை செய்த அண்ணனை காவல் துறையினர் கைது செய்தனர். அவிநாசி அருகே குட்டகம் திருமலைக்கவுண்டன்பாளை யம் பகுதியைச் சேர்ந்த விவசாயி பழனிசாமி (64). இவர்களது மூத்த மகன் விவேக் (35), இளையமகன் அசோக் (30). இவர்க ளுக்குள் சொத்து சம்பந்தமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 16ஆம் தேதி, இருசக்கர வாகனத்தில் சென்ற அசோக் நிலைதடுமாறி கீழே விழுந்து விபத்துக்குள்ளாகி இறந்து விட்டதாகக் கூறி, சேவூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இது குறித்து சேவூர் போலீஸ்சார் வழக்குப்பதிவு செய்து, அசோக்கின் உடலைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக் காக அவிநாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேதப் பரிசோதனையில் அசோக் தலையில் பலமாகத் தாக்கி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து சேவூர் போலீசார் விபத்து வழக்கை, கொலை வழக்காக மாற்றி, விசாரணை செய்தனர். அசோக்கின் அண்ணன் விவேக் தலைமறைவானதை அறிந்து அவரை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், சேவூர் அருகே பொங்கலூர் பகுதி யில் தலைமறைவாக இருந்த விவேக்கை திங்கள்கிழமை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். இதில், சொத்து தொடர்பாக ஏற்பட்ட தகராறில், இரும்பு கம்பியால் அசோக்கை தலையில் பலமாக தாக்கியதில், அவர் உயிரிழந்தார் என்பது தெரியவந்தது. மேலும் விவேக்கின் நன் பரான அதே பகுதியைச் சேர்ந்த ஆனந்தன் (36) உதவியுடன் சரக்கு ஆட்டோவில் அசோக்கின் உடல், இருசக்கர வாக னத்தை எடுத்து வந்து சாலையோரம் தள்ளிவிட்டு, விபத்துக் குள்ளானதாக நடகமாடியது தெரிய வந்தது. இதையடுத்து சேவூர் போலீஸார், அசோக்கைக் கொலை செய்த வழக்கில், தொடர்புடைய அண்ணன் விவேக்கையும், அவரது நண்பர் ஆனந்தனையும் திங்கள்கிழமை கைது செய்தனர்.
ரூ.25.12 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம்
அவிநாசி, டிச.23 சேவூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத் தில் திங்கட்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ.25 லட்சத்து 12 ஆயிரத்துக்கு வர்த்தகம் நடைபெற்றது. இந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் 3845 கிலோ நிலக்கடலையை கொண்டு வந்திருந்த னர். கிலோ ஒன்றுக்கு முதல் ரக நிலக்கடலை ரூ.68 முதல் ரூ.70.56 வரையிலும், இரண்டாம் ரக நிலக்கடலை ரூ.62.50 முதல் ரூ.67.50 வரை யிலும், மூன்றாம் ரக நிலக்கடலை ரூ.50.50 முதல் ரூ.62 வரையிலும் ஏலம் போனது. மொத் தம் ரூ.25 லட்சத்து 12 ஆயிரத்துக்கு ஏலம் நடை பெற்றது.
மாட்டு கொட்டகை கேட்டு விவசாயி தர்ணா
அவிநாசி, டிச.23 - மாட்டு கொட்டகை கேட்டு கால்நடைக ளுடன் விவசாயி அவிநாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திங்கள்கிழமை தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அவிநாசி ஊராட்சி ஒன்றியத்திற்கு உள் பட்ட சின்னேரிபாளையம் ஊராட்சி ரங்கா நகர் பகுதியில் வசித்து வருபவர் கலைச்செல்வன். இவர், கால்நடைகள் வளர்ப்பை வாழ்வாதார மாகக் கொண்டுள்ளார். இந்நிலையில் இவர், கால்நடைகளுக்காக இலவச மாட்டு கொட் டகை அமைத்து தரக்கோரி, மாவட்ட ஆட்சி யர் உள்ளிட்டோரிடம் மனு அளித்துள்ளார். ஓராண்டுக்கு மேல் ஆகியும் இது குறித்து நடவடிக்கை எடுக்காததால் கால்நடைக ளுடன் அவிநாசி ஊராட்சி ஒன்றிய அலுவல கம் முன் திங்கள்கிழமை தர்ணாவில் ஈடுபட் டார். சம்பவ இடத்திற்கு வந்த ஊராட்சி ஒன் றிய நிர்வாகத்தினர், அவரிடம் பேச்சுவார்த் தையில் ஈடுபட்டனர். மாட்டுக் கொட்டகை அமைத்திடும் திட்டம் தற்போது செயல்பாட் டில் இல்லை. திட்டம் நடைமுறைப்படுத்திய உடன் கொட்டகை அமைத்து தரப்படும் என்ற னர் இதையடுத்து கால்நடைகளுடன் அவர் அங்கிருந்து சென்றார்.
கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கு வட்டாட்சியர் தடை: ஆட்சியரிடம் முறையீடு
ஈரோடு, டிச. 23- பெருந்துறை அருகே கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கு வட்டாட்சியர் தடை விதித்துள்ள நிலையில், மாவட்ட ஆட்சிய ரிடம் முறையீடு செய்யப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம், பெருந்துறையை அடுத்த பெத்தாம் பாளையம் கிராமத்தில் பொன்னாண்டான்வலசு, அண்ணா நகரில் கிறித்தவ தேவாலயம் அமைந்துள்ளது. 40க்கும் மேற் பட்ட குடும்பத்தினர் வசித்து வரும் அப்பகுதியில் 38 குடும் பத்தினர் கிறித்தவத்தைத் தழுவி கடந்த 15 ஆண்டுகளாக இதில் ஆராதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கடந்த ஆண்டு சில அமைப்பினர் தலை யிட்டு கிறிஸ்துமஸ் ஆராதனை நடத்தக்கூடாது என தடுத்து நிறுத்தினர். இந்த வருடமும் சிற்றாலயத்தில் ஆராதனை நடத் தக் கூடாது என பெருந்துறை வட்டாட்சியர் கடிதம் கொடுத்துள் ளார். எனவே இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பிறப்பைக் கொண் டாட அனுமதி அளிக்க வேண்டும், என சிஎஸ்ஐ பிரப் நினைவு சர்ச் குழுவினர், சம்பந்தப்பட்ட பொதுமக்களுடன் வந்து ஆட்சி யரிடம் குறைதீர் கூட்டத்தில் மனு அளித்தனர்.
திருவள்ளுவர் தினம் கொண்டாட்டம்
சேலம், டிச.23- சேலம் மாவட்ட மைய நூலகத்தில், திருவள்ளுவர் தினம் திங்களன்று கொண்டாடப்பட்டது. கன்னியக்குமரியில் திருவள்ளுவரின் 133 அடி உயர திருவு ருவச் சிலை கடந்த 2000 ஆம் ஆண்டு நிறுவப்பட்டு, 25 ஆண்டுகள் நிறைவு பெற்ற நிலையில், அதற்கான வெள்ளி விழா சேலம் மாவட்ட மைய நூலகத்தில் டிச.23 முதல் 31 ஆம் தேதி வரை கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், திங்களன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், திருக்குறள் புகைப்பட கண்காட்சியினை மாவட்ட ஆட்சியர் ரா.பிருந்தாதேவி துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். மேலும், திருக்குறள் கருத்தரங்கம், திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி, பேச்சுப் போட்டி, வினாடி வினா போட்டி, உள்ளிட்ட நிகழ்ச்சிகள் டிச.31 ஆம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் பங்கேற் கும் அனைவருக்கும் மாவட்ட நூலகம் சார்பில் பரிசுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்துமஸ் பரிசு வழங்கி விழிப்புணர்வு
தருமபுரி, டிச.23: தலைக்கவசம் அணிந்து வந்த இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு போலீசாரும், சமூக ஆர்வலர்களும் கிறிஸ்துமஸ் பரிசு வழங்கி சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தி னர். தருமபுரி போக்குவரத்து காவல் துறை யினரும், சமூக ஆர்வலர்களும் இணைந்து தலைக்கவசம் அணிவது குறித்த பல் வேறு சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசா ரங்கள் செய்து வருகின்றனர். இந்நிலையில், ஞாயிறன்று தருமபுரி நான்கு ரோட்டில் தலைக்கவசம் அணிந்து வந்த இருசக்கர வாகன ஓட்டிகளுக்கும், சாலை விதிகளை கடைப்பிடித்து சென்ற வாகன ஓட்டிகளுக் கும் போக்குவரத்து காவல் துறையினர் கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்து பரிசு வழங்கி சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
துப்பாக்கி வைத்திருந்த 3 பேர் கைது
கோவை, டிச.23- கோவையில் துப்பாக்கி வாங்கி வைத்தி ருந்த இந்து அமைப்பின் பொறுப்பாளர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். கோவை தீவிரவாத தடுப்பு பிரிவு போலீ சாருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு பீகார் மாநிலத்தில் இருந்து துப்பாக்கி ஒன்றை கோவையைச் சேர்ந்த நபர்கள் வாங்கி இருப் பதாக தகவல் கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத் தினர். அப்போது கோவை மாவட்டம், பீள மேடு அடுத்த வினோபாஜி நகர் பகுதியில் வசிக்கும் இளைஞர்கள் சிலர் துப்பாக்கியை வாங்கியது தெரிய வந்தது. தொடர்ந்து தீவி ரவாத தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் பீள மேடு போலீசார் வினோபாஜி நகரில் சந் தேகத்திற்குரிய வீட்டை அதிரடியாக முற்று கையிட்டு உள்ளே நுழைந்து சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வீட்டில் துப்பாக்கி மற்றும் ஆறு தோட்டாக்கள் இருந் தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து அந்த வீட்டில் இருந்த மூன்று நபர்களை பிடித்து விசாரணையில் ஈடுபட்டனர். அதில், பிடிபட்ட நபர்கள் சேரன் மாநகர் பகுதியைச் சேர்ந்த மணிகண்ட பிரபு (22), காளப்பட்டி அடுத்த காபி கடை பகுதியைச் சேர்ந்த ஹரி ஸ்ரீ (23) மற்றும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த குந்தன் ராஜ் (22) என்பது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் அவர்கள் மூவரையும் கைது செய்து விசாரித்ததில், கைது செய்யப்பட்ட மணிகண்ட பிரபு ஒரு இந்து அமைப்பின் பொறுப்பாளராக இருப்பதாகவும் ஐ.டி நிறு வனத்தில் பணி புரிந்து வருவதாகவும் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்ததாக போலீ சார் தெரிவித்தனர். மேலும், பீகார் மாநிலத் திற்கு சென்று இவர்கள் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை வாங்கி வந்ததும், இவர்கள் எதற்காக துப்பாக்கியை வாங்கி வைத் துள்ளார்கள் ஏதேனும் சதித் திட்டம் தீட்டி உள்ளனரா? என்பது குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர். இதேபோன்று கடந்த சில மாதங்க ளுக்கு முன்பு கோவை புலியகுளம் பகுதியில் துப்பாக்கி வைத்திருந்தாக சங்பரிவார் அமைப்பை சேர்ந்த அயோத்தி ரவி என்பவர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நில உரிமைக்கான போராட்டக்குழு அமைப்பு
உதகை, டிச.23- நிலம் சார்ந்த பிரச்சனைக ளுக்கு நிரந்தர தீர்வு காணவும், போராட்டங்களை முன்னெடுக்கவும் கூடலூரில் மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமையில் போராட்டக்குழு அமைக்கப்பட்டது. பந்தலூர், கூடலூர், மசின குடி பகுதியில் யானைகள் வழித்தடம் என அறிவித்து, மக்களை வெளி யேற்றும் முயற்சி நடைபெறுகிறது. இதுபோன்றே நிலம் சார்ந்த பிரச் சனை தொடர்ந்து இப்பகுதியில் நிலவி வரும் சூழலில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நீலகிரி 12 ஆவது மாவட்ட மாநாடு, போராட் டக்குழுவை அமைப்பது, இதன் மூலம் போராட்டத்தை முன்னெ டுத்து தீர்வு காண்பது என முடி வெடுக்கப்பட்டது. இந்த தீர்மானத்தின் அடிப்படை யில், கூடலூர் கட்சி அலுவலகத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் குஞ்சுமுகமது தலைமையில், கட்சி யின் மாவட்டச் செயலாளர் வி.ஏ. பாஸ்கரன் முன்னிலையில் கட்சி யின் மாவட்டக்குழு உறுப்பினர்கள் மற்றும் ஏரியாகமிட்டி செயலாளர் கள், ஏரியாகமிட்டி உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்ற போராட் டக் குழு அமைப்புக்குழு கூட்டம் ஞாயிறன்று நடைபெற்றது இதில், போராட்டக் குழு தலை வராக என். வாசு, செயலாளராக வி.ஏ. பாஸ்கரன், பொருளாளராக தங்கராஜ் மற்றும் 101 பேர் கொண்ட போராட்டக்குழு அமைக்கப்பட்டது. இக்கூட்டத்தில், கூடலூர் மக்க ளின் நிலம் சார்ந்த அனைத்து பிரச் சனைகளுக்கும் நிரந்தர தீர்வு காண வேண்டும். அனைத்து வீடுகளுக் கும் மின்இனைப்பு வழங்கவேண் டும். வன விலங்கு தாக்குதலில் இருந்து கூடலூர் மக்களை பாது காக்க வேண்டும். 2010 ஆண்டு முதல் இதுவரை வனவிலங்கு தாக்குதலுக்கு உள்ளான அனை வருக்கும் ரூ.1 கோடி இழப்பீடு வழங்கவேண்டும். வனவிலங்கு - மனித தாக்குதலை விஞ்ஞான ரீதி யான நடைமுறையை பயன்ப டுத்தி, வனவிலங்கு ஊருக்குள் வரா மல் தடுப்பது மற்றும் தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் என கோரிக் கைகளை முன்வைத்து போராட்டங் களை முன் எடுப்பது, என இக்கூட் டத்தில் முடிவெடுக்கப்பட்டது.