கோவை, மார்ச் 25- கோவை உக்கடம் அருகே கோவிலில் இருந்த பொருட்களை திருடிய 3 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். கோவை உக்கடத்தில் உள்ள மதுரைவீரன் கோவி லில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தங்க காசுகள் மற்றும் வாள் உள்ளிட்ட பொருட்கள் திருட்டுப் போனது. இதுகுறித்து உக்கடம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், மதுரைவீரன் கோவிலில் திருடியதாக நவீன், விக்கி என்கிற விக்ரமார்த்தாண் டன் மற்றும் குட்டி பிரகாஷ் ஆகிய மூன்று பேரை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும், இவர்கள் பல்வேறு கடைகளில் வயர்களையும் திருடியது தெரிய வந்தது. இதையடுத்து திருடிய பொருட்களை பறி முதல் செய்ய காவல் துறையினர், அவர்களை கைது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.