திருப்பூர், டிச.1, நூல் விலை கடந்த சில மாதங்களாக அதிகரித்து வந்த நிலையில், பத்து ரூபாய் குறைந்துள்ளது. ரூ.187 இருந்து ரூ.300 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த ஒரு கிலோ நூல் விலை ரூ.10 குறைந்து, ரூ.177 முதல் 280 ரூபாய் வரை விற்பனை செய்யப்படும் என நிர் ணயம் செய்து நூற்பாலைகள் அறி விப்பு வெளியிட்டுள்ளது. பின்னலாடை தயாரிப்புக்கு மிக முக் கிய மூலப்பொருளாக நூல் விலையை பொறுத்து தான் ஆடைகளின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. ஆர்டர் களை பெறுகிற நிறுவனங்கள் அப் போதைய நூல் விலை உள்ளிட்ட செல வுகளை கருத்தில் கொண்டு, ஆடை களின் விலையை வர்த்தகர்கள் மற்றும் வியாபாரிகளுக்கு தெரிவிப்பார்கள். இதன் பின்னர் அவர்கள் கொடுக்கிற ஆர் டர்களின் படி ஆடைகள் தயாரித்து அனுப்பி வைக்கப்படும். நூல் விலை சீராக இருந்தால், வர்த்தகம் எந்த ஒரு தொய்வும் இன்றி இருக்கும். ஆனால் நூல் விலை அடிக்கடி மாற்றம் ஏற்படு வதால், தொழில்துறையினர் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறார் கள். ஏற்கனவே போடப்பட்ட ஒப்பந் தத்தை தாண்டி உற்பத்தி செலவு அதிக ரிக்கும் பட்சத்தில், ஆடைகளின் விலையை, நூல் விலையை காட்டி உயர்த்தி கேட்டால், ஆர்டர்கள் ரத்து ஆகும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் பனியன் தொழில் நடந்து வருகிறது. இதற்கிடையே தொழில்துறையினர் சற் றும் எதிர்பார்க்காத வகையில், நூல் விலையை நூற்பாலைகள் மாதத்திற்கு இருமுறை அறிவிப்பதாக தெரிவித்த னர். அதன்படி டிசம்பர் மாதத்திற்கான நூல் விலையை நூற்பாலைகள் வெள் ளியன்று அறிவித்தனர். இதில், நூல் விலை கிலோ ரூ.10 குறைந்தது. அதன்படி நூல் விலையா னது (கிலோவுக்கு) 10 ஆவது நம்பர் கோம்டு நூல் விலை ரூ.177-க்கும், 16 ஆம் நம்பர் ரூ.187-க்கும், 20 ஆவது நம்பர் ரூ.245-க்கும், 24 ஆவது நம்பர் ரூ.257-க்கும், 30 ஆவது நம்பர் ரூ.267-க்கும், 34 ஆவது நம்பர் ரூ.280-க்கும், 40 ஆவது நம்பர் ரூ.300-க்கும், 20-ஆவது நம்பர் செமி கோம்டு நூல் ரூ.237-க்கும், 24 ஆவது நம்பர் ரூ.247-க்கும், 30ஆவது நம்பர் ரூ.257-க்கும், 34 ஆவது நம்பர் ரூ.270-க்கும், 40 ஆவது நம்பர் ரூ.290-க்கும் விற்பனை செய்யப்படும்.