districts

img

தேசிய ஊரக வேலைத் திட்டத்தை அழிக்க முயலும் ஒன்றிய அரசு: உடுமலையில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர், ஜன.30 - மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை முடக்கும் வகையில்  பல மாதங்களாக சம்பளம் தராத ஒன்றிய அர சைக் கண்டித்து அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் செவ்வாயன்று உடுமலை, மடத்துக்குளம் மற்றும் பொங்க லூர் பகுதிகளில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறு தியளிப்பு திட்டத்தில் வேலை செய்த தொழி லாளர்களுக்கு பல மாதமாக சம்பளம் தராமல்  இருப்பது இந்த திட்டத்தை முடக்கும் வகை யில் உள்ளது. எனவே உடனடியாக சம்ப ளத்தை தர வேண்டும். இந்த  திட்டத்தை விவ சாயப் பணிகளுக்கும் இணைக்க வேண்டும். மேலும், ஆதார் அடிப்படையில் சம்பளப்ப ணம் பரிவர்த்தனை செய்யும் முறையை கைவிட வேண்டும்.  வருகை பதிவேட்டில் தொழிலாளர்களின் கண் விழித்திரையை பதிவு செய்வதை  கைவிட வேண்டும். நடப்பு  ஆண்டு நிதிநிலை அறிக்கையில் இரண்டு லட் சம் கோடி ரூபாய் நிதியை இந்த திட்டத் திற்கு ஒதுக்க வேண்டும். மேலும் தொழிலா ளர்களுக்கு வேலை நாட்களை 200 நாளாக வும், தினச் சம்பளத்தை ரூ.600 ஆகவும் உயர்த்த வேண்டும் என்று அகில இந்திய  விவசாயத் தொழிலாளர் சங்கம் வலியுறுத்தி யுள்ளது. உடுமலை ஒன்றியம்: உடுமலை நூலகம் அருகில் குட்டைத் திட லில் இருக்கும் காந்தி சிலைக்கு மாலை அணி வித்து  ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வரை இரண்டு கிலோ மீட்டர் தூரம் விவசாயத் தொழிலாளர்கள் இரண்டாயிரத்துக்கும் மேற் பட்டோர் ஊர்வலமாக சென்று கோரிக்கை மனு அளித்தனர். கிராமவாரியாக தொழிலா ளர்கள் மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்தனர். இந்த இயக்கத்திற்கு சங்கத்தின் ஒன்றி யத்தலைவர் எம்.ரங்கராஜ் தலைமை வகித் தார். சங்கத்தின் ஒன்றியச் செயலாளர் கி.கனக ராஜ் கோரிக்கையை விளக்கிப் பேசினார். விவசாயிகள் சங்க மாவட்ட நிர்வாகி ஏ.பால தண்டபாணி, சிஐடியு நிர்வாகி எஸ்.ஜெகதீ சன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாவட்டத்  தலைவர் சண்முகம் நிறைவுரை ஆற்றி னார். சங்க ஒன்றியப் பொருளாளர் சுப்புலட் சுமி, கமிட்டி உறுப்பினர்கள் சுந்தரம், வனிதா,  மாரியம்மாள், பழனிச்சாமி, வஞ்சிமுத்து, கிருஷ்ணசாமி மற்றும் சகோதர சங்க நிர்வா கிகள் உள்பட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். போராட்டத்தின் முடிவில் ஒன்றிய அலுவ லகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பி ரமணியத்தைச் சந்தித்து மனுக் கொடுத்தனர்.

இதில், பிப்ரவரி 5ஆம் தேதிக்குள் ஊதி யம் வழங்கப்படும், தொழிலாளர் பிரச்சனைக ளில் உரிய தீர்வு காணப்படும் என்று உத்தர வாதம் அளிக்கப்பட்டது. மடத்துக்குளம்: ஊராக வேலை திட்டத்தை முடக்கும் வகையில் செயல்படும் ஒன்றிய அரசை கண் டித்து மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவ லகத்தின் முன்பு, சங்கத்தின் தாலுகாத் தலை வர் மாசாணம் தலைமையில், 100க்கும் மேற் பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில்,  ஒன்றிய செயலாளர் ஆறுமுகம், விவசாய சங் கத்தின் எம்.எம்.வீரப்பன், சிஐடியு சங்கத்தின்  பன்னீர் செல்வம் மற்றும் தாலுகாக் குழு உறுப் பினர்கள் ஈஸ்வரன், காந்தி, பரிமளா, ராஜேஸ் வரி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில்  கலந்து கொண்டார்கள். ஆர்ப்பாட்டத்தின் நிறைவாக ஒன்றிய வட்டார  வளர்ச்சி அலுவலரிடம் கோரிக்கை மனு கொடுத்து நிர்வாகிகள் பேசினர். கொடுவாய்: அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் பொங்கலூர் ஒன்றியக்கமிட்டி சார் பில் செவ்வாயன்று கொடுவாயில் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. சங்கத்தின் பொங்கலூர்  ஒன்றியத் தலைவர் எஸ்.சிவசாமி தலைமை யில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திருப்பூர்  மாவட்டச் செயலாளர் ஏ.பஞ்சலிங்கம், ஒன்றி யச் செயலாளர் ஜி.சுந்தரம் ஆகியோர் சிறப் புரையாற்றினர். கமிட்டி உறுப்பினர்கள் எஸ். சண்முகம், பழனிச்சாமி, குமார், செல்வம் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.