districts

img

லாரி ஓட்டுநர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்

நீலகிரி, ஜன.19- நீலகிரியில் பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி லாரி உரிமை யாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் சங் கத்தினர் வேலை நிறுத்த போராட் டத்தை தொடங்கி உள்ளனர். இத னால் ஆயிரம் டன் காய்கறிகள் தேங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஒன்றிய மோடி அரசு, புதிய  மோட்டார் வாகன சட்டத் திருத்த  மசோதாவை கொண்டு வந்துள் ளது. அதில், விபத்து ஏற்படுத்தி  விட்டு தப்பி செல்லும் ஓட்டுநர்க ளுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை  அல்லது ரூ.7 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என ஒரு விதி உள் ளது. இது ஓட்டுநர்களை அச்சுறுத் தும் செயல் எனவும், இதை திரும் பப் பெற வேண்டும் என வலியு றுத்தியும் கடந்த சில நாட்களாக தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா ஆகிய மாநி லங்களில் காலவரையற்ற வேலை  நிறுத்தத்தை லாரி ஓட்டுநர்கள் சங்கத்தினர் நடத்தி வருகின்றனர்.  இதன் ஒரு பகுதியாக, நீலகிரி  மாவட்டத்தில் இன்று (சனிக்கி ழமை) காலை 6 மணி முதல் நாளை  (ஞாயிற்றுக்கிழமை) காலை 6  மணி வரை 24 மணி நேரம் லாரி  உரிமையாளர்கள் மற்றும் ஓட்டு நர்கள் சங்கத்தினர் வேலை நிறுத் தப் போராட்டத்தை தொடங்கி உள் ளனர். இதுகுறித்து லாரி உரிமையா ளர்கள் சங்கத் தலைவர் நடராஜ் கூறுகையில், விபத்து ஏற்படுத்தி தப்பி செல்லும் ஓட்டுநர்களுக்கு பத்தாண்டு சிறை தண்டனை என் பது பெரும் அச்சுறுத்தலாக உள் ளது. எனவே இந்த சட்டத்தை ஒன்றிய அரசு திரும்ப பெற வலியு றுத்தி லாரி ஓட்டுநர்கள் சங்கத்தி னர் போராட்டத்தை தொடங்கியுள் ளனர். அவர்களுக்கு ஆதரவாக லாரி உரிமையாளர்கள் சங்கம், கேரட் கழுவுபவர்கள் சங்கம், இங்கிலீஷ் காய்கறிகள் வியாபா ரிகள் சங்கம் உள்பட பல்வேறு சங் கத்தினரும் ஆதரவு தெரிவிக்கின்ற னர்.இதன்படி நீலகிரி மாவட்டத் தில் ஆயிரம் டன் காய்கறிகள் தேக் கமடையும் அபாய சூழ்நிலை ஏற்பட் டுள்ளது என்றார்.