திருப்பூர், ஜன. 24 - திருப்பூர் மாவட்டத்தில் புத்தக வாசிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகை யில் அனைத்து பள்ளிகளிலும் மாணவர் வாசிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. திருப்பூர் புத்தகத் திருவிழா நடைபெ றுவதை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் செவ்வாயன்று புத்தக வாசிப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. புத்தகத் திருவிழாவில் மாணவர்களை பங்கேற்க ஊக்கப்படுத்தும் வகையில், புத் தக வாசிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத் தவும் செவ்வாயன்று காலை 10.30 மணி முதல் 11 மணி வரை அனைத்துப் பள்ளிகளி லும் பயிலும் அனைத்து வகுப்பு மாணாக்கர்க ளும் வாசிப்புத் திறன் செயல்பாட்டில் பங்கேற் கும்படி மாவட்ட கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பி இருந்தது. இதன்படி திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலை, உயர் நிலை, நடுநிலைப் பள்ளிகள், மாநகராட்சி, நக ராட்சி பள்ளிகள், தனியார் பள்ளிகள் அனைத் திலும் மாணவ மாணவியர் புத்தக வாசிப்பு நிகழ்வில் பங்கேற்றனர். “திருப்பூர் வாசிக் கிறது” என்ற நிகழ்வுகள் போல் இந்த ஆண்டு இந்நிகழ்ச்சி நடைபெற்றது. புத்தகத் திரு விழா ஜன. 27ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் இந்த நிகழ்ச்சியில் ஒரே நாளில் ஆயிரக்கணக்கான மாணாக்கர்கள் புத்தக வாசிப்பில் ஈடுபட்டனர்.