districts

img

மழையால் ஆயிரம் ஏக்கர் விவசாய பயிர்கள் சேதம்

தருமபுரி, டிச. 3- வாணியாறு அணையிலிருந்து   திறந்து விடப்பட்ட வெள்ளநீர் விவ சாய நிலங்களுக்குள் புகுந்து பயிர் கள் சேதமடைந்துள்ளன. இதனால்  விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டம்  ஏற்பட்டு மன வேதனையில் உள்ள னர்.  பெஞ்சல் புயல் காரணமாக தரு மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி  கடத்தூர் பொம்மிடி மற்றும் வாணி யாறு அணை நீர்பிடிப்பு பகுதியான சேலம் ஏற்காடு உள்ளிட்ட பகுதிகளி லும் கனமழை வெளுத்து வாங்கி யது. இதனால் வாணியாறு அணைக்கு விநாடிக்கு 2900 கன அடி  உபரிநீர் வந்தது. தண்ணீர் வரத்தால்  அணையானது தனது முழு கொள் ளவான 65.27 அடியை எட்டியது. இந் நிலையில் அணையின் பாதுகாப்பு  கருதி அணையில் இருந்து  வினா டிக்கு 3,750 கன அடி உபரி நீர் ஆற் றில் திறந்து விடப்பட்டன. ஆற்றில்  வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தென் கரை கோட்டை ஜம்மனஹள்ளி  வெங்கடசமுத்திரம் பாப்பிரெட்டிப் பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள  பாலங்களை மூழ்கடித்தவாறு வெள்ள நீரானது ஆற்றில் சென் றது, ஆற்றுப்பகுதிகளில் முறை யாக ஆக்கிரமிப்புகள் மற்றும்  நீர்வழிப் பாதைகள் அடைப்பு களை சுத்தம் செய்யாததால் வெள்ள நீரானது  தென்கரைக் கோட்டை ஜம்மனஹள்ளி பறையப் பட்டி புதூர் வடகரை ஆகிய கிராம  பகுதியில் உள்ள சுமார் ஆயிரத்திற் கும் மேற்பட்ட விவசாய நிலங்க ளுக்குள் புகுந்ததால் நெல், கரும்பு, மஞ்சள் வாழை மர வள்ளி கிழங்கு, தென்னை, நிலக் கடலை, பருத்தி, மக்காச்சோளம்  உள்ளிட்ட பயிர்கள் ஆற்றில்  அடித்து செல்லப்பட்டன, தென் கரைக்கோட்டை ஜம்மனஹள்ளி   செல்லக்கூடிய பிரதான சாலை  துண்டிக்கப்பட்டன. பயிர்கள்  மற்றும் விவசாய கிணறு உள்ள  இடங்கள் தெரியாத அளவிற்கு  வெள்ள நீரானது நிலத்தில்  சென்று  கொண்டுள்ளதால் விவசாய நிலங் கள் முழுவதும் கடல் போல் காட்சி  அளிக்கின்றன.  விவசாய பயிர்களை பயிர்  செய்துள்ள விவசாயிகளின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக் கப்பட்டு விவசாயிகள் கண்ணீர் வடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது, போர்க்கால அடிப்படையில் விவ சாய பயிர்களுக்கு உரிய நிவாரணத்  தொகை வழங்க வேண்டும், மழைக் காலங்களில் விவசாய நிலங்களுக் குள் தண்ணீர் புகாமல் இருக்க  உரிய நடவடிக்கை எடுக்க வேண் டும் என விவசாயிகள் மாவட்ட  நிர்வாகத்தையும் தமிழக அரசை யும் வலியுறுத்தியுள்ளனர்.