districts

img

ஈரோடு புத்தகத் திருவிழாவின் சிந்தனை அமர்வு

ஈரோடு, ஆக. 9- ஈரோடு புத்தகத் திருவிழாவில் செவ்வாயன்று நடை பெற்ற சிந்தனை அரங்க நிகழ்வில் எழுத்தாளர்கள் இமையம்,  சல்மா, கா.உதயசங்கர் ஆகியோர் பங்கேற்றனர். தமிழ்நாடு அரசு மற்றும் மக்கள் சிந்தனை பேரவை இணைந்து நடத்தும் புத்தக திருவிழா ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. செவ்வா யன்று மாலை நடைபெற்ற சிந்தனை அரங்கிற்கு எஸ் அண்டு  எஸ் இன்ப்ராகான் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர்  டி.சண்முகன் தலைமை வகித்தார். சிகரம் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ஆர்.சிவலிங்கம் வாழ்த்தி பேசினார். மக்கள் சிந்தனைப் பேரவையின் தலைவர்  த.ஸ்டாலின்குணசேகரன் அறிமுகவுரை நிகழ்த்தினார். குழந்தைகளின் அற்புத உலகில் என்ற தலைப்பில் கா. உதயசங்கர் உரை நிகழ்த்தினார். குழந்தை இலக்கியம் இன்று  அடைந்திருக்கிற வளர்ச்சி, சமீபகாலத்தில் அவ்விலக்கி யத்திற்கு குழந்தைப் படைப்பாளிகள் அளித்த பங்களிப்பு குறித்து விளக்கினார். ‘எழுத்தும் வாழ்வும்’ என்ற தலைப்பில்  எழுத்தாளர் சல்மா  உரை நிகழ்த்தினார். இன்றைய சமூகம் பெண்களை எவ்வாறு  நடத்துகிறது என்பதையும், தன் வாழ்வில் சந்தித்த பெண் களின் வாழ்நிலை குறித்தும் தனது உரையில் விளக்கினார்.   அண்மையில் எமைக்கவர்ந்த ஐந்து நூல்கள் என்ற தலைப் பில் உரை நிகழ்த்திய எழுத்தாளர் இமையம், தான் சமீபத்தில்  படித்த ஐந்து புத்தகங்கள் குறித்தும்,  அந்த புத்தகங்களில் சொல்லப்பட்டிருக்கும் வரலாற்று நிகழ்வுகள், மனிதர்களின்  வாழ்வியல் வலிகள் ஆகியவற்றைப் பகிர்ந்து கொண்டார். இந்நிகழ்வில் பொதுமக்கள், மாணவர்கள், வாசகர்கள் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.