districts

img

விக்கிரவாண்டியில் திமுக கூட்டணியை எதிர்ப்பவர்கள் டெபாசிட் இழப்பார்கள் இளங்கோவன் பேட்டி

ஈரோடு, ஜூன் 15- விக்கிரவாண்டி தேர்தலில் திமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெரும். எதிர்த்து நிற்கும் கட்சிகள் அனைத்தும் டெபாசிட் தொகையை இழப்பார்கள் என்று ஈரோட்டில் ஈவிகே எஸ் இளங்கோவன் செய்தியாளர் சத்திப்பில் தெரிவித்தார் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான ஈவிகேஎஸ். இளங் கோவன் ஈரோட்டில் செய்தியாளர் களை சந்தித்தார்.

அப்போது அவர், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெறும். எதிர்த்து நிற்கும் அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் இழப்பார் கள். காங்கிரஸ் தலைவர்கள் திமுக வெற்றிக்காக தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வார்கள். ராகுல் காந்தி எதிர்க்கட்சி தலைவராக வரவேண்டும் என்று தான் விரும்புவதாக தெரிவித் தார். பொது மேடையில் அமித்ஷா தமிழிசையிடம் நடந்து கொண்ட விதம் தவறானது. கருத்து வேறுபாடு ஏதேனும் இருந்திருந்தால் அதை தனி அறையில் பேசி இருக்கலாம்.

 ஒரு மிகப்பெரிய காங்கிரஸ் தலைவரின், இலக்கியவாதி யின் மகளான தமிழிசையை அவர் கண்டித்த விதமானது ஒரு தமிழச்சியை அவமானப்படுத்தியது தவறு என்றார். இந்த செய்தியாளர் சந்திப்பின்போது, காங்கிரஸ் கட்சியின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.