districts

தூத்துக்குடி மற்றும் மதுரை முக்கிய செய்திகள்

அங்கன்வாடி ஊழியர் வீட்டில் 32 பவுன் நகை கொள்ளை

தூத்துக்குடி, மே 12-எட்டயபுரம் அருகே அங்கன்வாடி ஊழியர் வீட்டில் 32 பவுன்நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள சிந்தலக்கரையை சேர்ந்தவர் கந்தசாமி மகன் ரகுபதி (36). இவர்வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். அவருடைய மனைவி சாரதா (34). இவர் அங்கன்வாடியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு அஸ்வந்த் (4), மதுஸ்ரீ (2) என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். சாரதா தனது குழந்தைகளுடன் கோவில்பட்டி அய்யனேரியில் உள்ளஉறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார். சிந்தலக்கரையில் கந்தசாமியின் வீடும், ரகுபதியின் வீடும் தனித்தனியாக உள்ளது.இதனால் கந்தசாமி தினமும் மாலையில் மகன் வீட்டுக்கு சென்று மின்விளக்கை போடுவதும், பின்னர் மறுநாள் காலையில் சென்று மின்விளக்கை அணைத்துவிட்டு வருவதும் வழக்கம். அதன்படி கந்தசாமி மின்விளக்கை போடுவதற்கு சென்றுள்ளார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த கந்தசாமி இதுபற்றி தனது மருமகள் சாரதாவுக்கு தகவல் தெரிவித்தார். அவர் உடனடியாக விரைந்து வந்தார். உள்ளே சென்றுபார்த்தபோது, அங்கு பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த32 பவுன் நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்தது தெரியவந்தது. இதுகுறித்து எட்டயபுரம் போலீசில் சாரதா புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் நிகழ்ந்த இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


அதிகாரிகளை கண்டித்து சுயேட்சை வேட்பாளர்கள் தர்ணா

மதுரை, மே 11-மதுரை திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலின் சுயேச்சை வேட்பாளர்களுக்கு கட்சி அலுவலகம் திறக்க தேர்தல் அதிகாரிகளும் காவல் துறையும் தொடர்ந்து அனுமதி தராமல் அலைக்கழிப்பதாக குற்றம் சாட்டி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு 6 சுயேட்சை வேட்பாளர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.சுயேச்சை வேட்பாளர்களான நாகராஜன்,ஆறுமுகம், உக்கிரபாண்டியன், சேகர்,மணிகண்டன் உட்பட 6 பேருக்குதேர்தல் அலுவலகம் திறக்க தேர்தல் பிரச்சாரம் செய்வதற்கும் தொடர்ந்து தேர்தல் அதிகாரிகளும் காவல்துறையும் அனுமதி மறுத்து வருவதாக குற்றம் சாட்டினர்.