districts

img

மதுபானக்கடை அமைக்க எதிர்ப்பு

தருமபுரி, மே 13- தித்தியோப்பனஹள்ளி ஊராட்சி வள்ளூவர் குட் டையில் பகுதியில் அரசு மது பானக்கடையை அமைக் ககூடாது என பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.  இதுகுறித்து தருமபுரி டாஸ்மாக் மேலாளரிடம் அப் பகுதி மக்கள் அளித்த  மனுவில் தெரிவித்திருப்ப தாவது, தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகே தித்தியோப்பனஹள்ளி ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சிக்குபட்ட  வள்ளுவர்  குட்டை பகுதியில் புதிதாக அரசு டாஸ்மாக் மதுபானக் கடை அமைப்பதாக தெரிய வருகிறது. இப்பகுதியில் அழகர் மலை முருகன் கோயிலும், இதனைச்சுற்றி குடியிருப்புகளும் அதிகம் உள்ளது. கோவில் கிரிவல பாதையும் உள்ளது.  மேலும் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள், முதி யோர்கள், குழந்தைகள் அதிகமாக நடமாடும் பகுதி யாக உள்ளது. எனவே, பொது மக்களுக்கு அச்சுறுத்தலாக அமையும். ஆகவே மதுபான  கடையை எங்கள் கிரா மத்தில் அமைக்க கூடாது என  தெரிவிக்கப்பட்டுள்ளது.