districts

img

திருமுருகன்பூண்டி நகராட்சி அலுவலகம் முற்றுகை

அவிநாசி, மார்ச் 21 - திருமுருகன்பூண்டி நகராட்சி, 18 ஆவது வார்டு வெற்றி வேல் நகர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சாக்கடை வசதி  கேட்டு செவ்வாயன்று நகராட்சி அலுவலகத்தை முற்றுகை யிட்டனர். திருமுருகன்பூண்டி நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன.  18ஆவது வார்டு பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும் பத்தினர் வசித்து வருகின்றனர்.  இங்குள்ள வெற்றிவேல் நகர்  குடியிருப்போர் நல சங்கத்தினர் நகராட்சியில் அளித்த மனு வில் கூறியிருப்பதாவது: எங்கள் பகுதியில் 350க்கும் மேற்பட்ட  குடியிருப்புகள் உள்ளன. இதில் கழிவுநீர் கால்வாய், சாலை  வசதி, ஓவர் டேங்க், பூங்காவிற்கு மின்விளக்கு ஏற்படுத்துதல்,  இல்லம் தோறும் குடிநீர் வசதி மற்றும் தெரு குழாய் அமைத்து  தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முந் தைய ஆட்சி காலத்தில் மனு கொடுத்து வந்தோம். இதுவரை  எந்த பயனும் அளிக்கவில்லை. எனவே உடனடியாக இப்பி ரச்சனைகளை தீர்க்க வேண்டும் என வலியுறுத்தி நகராட்சி  அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட தாகத் தெரிவித்தனர். இவர்களிடம் நகர்மன்ற தலைவரும், நகராட்சி ஆணை யரும் பேச்சுவார்த்தை நடத்தி, விரைவில் பிரச்சனைகள் தீர்க்கப்படும் என தெரிவித்தனர். இதையடுத்து அனைவரும்  கலைந்து சென்றனர்.