districts

img

அனுபவ நிலங்களுக்கு பட்டா கேட்டு ஆட்சியரிடம் திரளானோர் மனு

தருமபுரி, மே 16- பாலக்கோடு அருகே அனுபவத்தில் உள்ள நிலங்களுக்கு பட்டா வழங்க வேண் டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலு வலத்தில் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மனு அளித்தனர். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள சக்கிலிநத்தம் கிராமத்தில் மலைவாழ் மக்கள் உள்ளிட்ட பல்வேறு சமுதாயத்தைச் சார்ந்த 350க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றன. இந்த கிராமத்தில் மூன்று தலைமுறைகளாக மக்கள் வசித்து வருகின்றனர். ஆனால், இங்குள்ள மக்க ளுக்கு இதுவரை அரசு வழங்குகின்ற எந்த சலுகைகளும் கிடைக்கப்பெருவதில்லை. மேலும், மூன்று தலைமுறையாக அரசுக்கு  சொந்தமான இடத்தில் வீடு கட்டி வசித்து வருகின்றனர். அதேபோல் அரசுக்கு சொந் தமான நிலங்களில் விவசாயம் செய்து வரு கின்றனர். இந்த கிராம மக்களின் கட்டுப் பாட்டில் உள்ள வீட்டுமனைகள் மற்றும் விவ சாய நிலங்களுக்கு இதுவரை பட்டா வழங் கப்படவில்லை. இதனால் அரசின் மூலம் வழங்கப்படுகின்ற சலுகைகளைப் பெற  சிட்டா, அடங்கள் தர வேண்டும் என்பதால், பட்டா இல்லாத இடங்களுக்கு வருவாய் துறை சார்பில் சான்றிதழ் வழங்கப்படுவ தில்லை. இதனால் கிராம மக்கள் தர முடி யாத நிலை இருந்து வருகிறது. மேலும், சக்கிலிநத்தம் கிராமத்தில் உள்ள மலைவாழ் மக்கள் உள்ளிட்டோர் தங்கள் வாழ்கின்ற இடத்திற்கு தனி தனியாக பட்டா வழங்க வேண்டும்.

அதேபோல விவசாய நிலங்களுக்கும் பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தனர். ஆனால், இதுவரை இந்த கிராம மக்களின் கோரிக்கைகள் நிறை வேற்றப்படவில்லை. எனவே, மலைவாழ் மக் கள் உள்ளிட்ட பல்வேறு சமுதாய மக்களின் வாழ்க்கை நிலையை கருத்தில் கொண்டு தமி ழக அரசும், மாவட்ட நிர்வாகமும் வீட்டுமனை பட்டா மற்றும் விவசாய நிலங்களுக்கான பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி தனித்தனியாக நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். பென்னாகரம் மக்கள் மனு இதேபோன்று, பென்னாகரம் வட்டம் ஊட்டமலை ஊராட்சிக்குபட்டது, ஒகே னக்கல் இந்திராநகர். இங்கு  சுமார் 80 குடியி ருப்புகள் உள்ளது. பட்டியலினத்தை சேர்ந்த  இம்மக்கள் சேலம் மாவட்டம், மேட்டூரில் வசித்து வந்தனர். சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் மேட்டூர் அணை கட்ட அங்கிருந்த மக் களை இடம் மாற்றம் செய்தனர். அப்படி இட மாற்றம் செய்யப்பட்டபோது, இவர்களை  ஒகேனக்கல் இந்திரா நகரில் குடியமர்த்தப் பட்டனர். இவர்கள் விவசாய கூலிகளாகவும், ஒகேனக்கல் அருவியில், ஆயில் மசாஜ் போன்ற பணிகளை செய்து வருகின்றனர். 1982 ஆம்  ஆண்டு இம்மக்களுக்கு அரசு தொகுப்பு வீடு  கட்டி கொடுத்தது. தற்போது, பெரும்பாலான வீடுகள் பழுதடைந்து இடிந்து விழும் நிலை யில் உள்ளது. ஆகவே, மனைப்பட்டா வழங்க வேண்டும் என மனு அளித்தனர்.