சேலம், ஜூன் 13- குடிநீர் கேட்டு பொதுமக்கள் மேச்சேரி ஆட்டு சந்தையி லிருந்து பேரணியாக சென்று, பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். சேலம் மாவட்டம், மேச்சேரி பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளது. இதில் 8 ஆவது வார்டு பகுதி கந்தன்காடு, சீரமணி யிர், பெரியான் காடு, ஆண்டியப்பன் வளவு, கடலைகாரன் வளவு ஆகிய பகுதியில் இருந்து சுமார் 200க்கும் மேற்பட்ட பொது மக்கள் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பேரூராட்சி அலுவத்தித்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட தார்ச் சாலை மிகவும் சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சிய ளிக்கிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், பல ஆண்டு களாக இந்த பகுதியில் உள்ள தார்ச்சாலை மிகவும் சேதம் அடைந்துள்ளத்தால் இருசக்கர வாகனத்தில் செல்ல அவதி அடைந்து வருகிறோம். மேலும், பள்ளி மாணவ, மாணவிகள் சைக்கிளில் செல்லும் போது கீழே விழுந்து காயம் ஏற்படு கிறது. பேரூராட்சியில் பலமுறை கோரிக்கை வைத்தும் எந்த வொரு நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதேபோல், இந்த பகுதியில் குடிநீர் பற்றாக்குறை அதிகமாக உள்ளது. சாக்கடை வசதி இல்லாததால் சாலையின் இருபுறமும் சாக்கடை கழிவு நீர் தேங்கி நிற்கிறது. இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகம் எவ் வித நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற் றஞ்சாட்டி உள்ளனர். இந்நிலையில், மேச்சேரி காவல் துறையினர், பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, ஒரு வாரத் தில் குடிநீர், சாலை வசதி ஏற்படுத்தி தருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து, முற்றுகையிட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர்.