வதந்தியால் வடமாநில தொழிலாளர்கள் கலக்கம் தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்படும் - சைமா வேதனை
கோவை, மார்ச் 4- வதந்தி வீடியோவால், ஆயிரத்திற்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளிகள் சொந்த ஊருக்கு படையெடுத்து வருவதாகவும், இதனால், தொழிற்சாலைகளில் உற்பத்தி பாதிக்கப்படுவதாக தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத் தினர் (சைமா) வேதனை தெரிவித்துள்ளனர். பீகார், உத்திரபிரதேசம் ஜார்கண்ட், ஒடிசா உள்ளிட்ட வட மாநிலங்களை சேர்ந்த ஏராளமானோர் கோவையில், பஞ்சாலைகள், சிறு குறு தொழிற்சாலைகள், உணவகங்கள், கட்டிடம் கட்டும் பணியில் என லட்சக்கணக்கான தொழிலா ளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், வட மாநில தொழிலாளர்களை துன்பு றுத்துவதாகவும், தாக்கப்படுவதாகவும் சமூக வலைத்தளங் களில் வீடியோ வைரலாக பரவி வருகிறது. இது உண்மை என நம்பி சம்பந்தப்பட்ட மாநிலங்களில் உள்ள உறவி னர்கள் திரும்பி வரச்சொல்லி அழைப்பு விடுகின்ற னர். இதனால், வடமாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊரை நோக்கி செல்ல துவங்கியுள்ளனர். இது கோவையில் உள்ள தொழிற்துறையினரை பெரிதளவு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து, கோவையில் தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தினர் (சைமா) செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறுகையில், பஞ்சாலை தொழிற்சாலை களில் 60 சதவிகிதம் வடமாநிலத்தவர்கள் பணிபுரிந்து வரு கின்றனர். தற்போது சமூக வலைத்தளங்களில் பரவும் செய்தி யினால், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாநிலத்தவர்கள் குடும்பத் துடன் சொந்த ஊருக்கு சென்றுள்ளனர். இதனால், தொழிற்சாலைகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், வட மாநில தொழிலாளர்களுக்கு தங்களது தொழிற் சாலைகளில் பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து விதமான வசதிகள் உள்ளதாக தெரிவித்த அவர்கள், சமூக வலைத்தளங்களில் பரவும் பொய்யான செய்திகளை நம்ப வேண்டாம் என தெரிவித்தனர். இதேபோன்று, கோவை தொழில் அமைப்புகளின் கூட்ட மைப்பு சார்பில், மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த தொழில் கூட்டமைப்பினர் கூறுகையில், வடமாநில தொழிலாளர் களின் உயிருக்கு ஆபத்து என்று கூறி பீகார் சட்டமன்றத்தில், சட்டமன்ற உறுப்பினர்களின் பதிவுகளிலும், வலைதளங் களில் தவறான செய்திகள் தொடர்ந்து பரவி வருகின்றன. பல நெருக்கடிகளை சந்தித்து வரும் தொழில் முனைவோர் களுக்கு இது அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், வடமாநில தொழிலாளிக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில், இந்தி மொழியில் வீடியோ பதிவுகளை காவல்துறை மூலமாகவும் துறை மற்றும் ஊடகங்கள் மூலமாகவும் பரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், காவல் துறையின் வாகனங்கள் மூலம் தேவையான பகுதிகளில் அச்சத்தைகளையும் அறிவிப்பு களை ஒலிபெருக்கி மூலம் பரப்ப வேண்டும் என கேட்டுக் கொண்டதாகதெரிவித்தனர்.
விபத்தில் பெண் பலி - சிபிஎம் மறியல் அறிவிப்பு
அவிநாசி, மார்ச் 4 - தனியார் பேருந்தில் பலியான பெண்ணின் குடும்பத்திற்கு நீதி கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாலை மறியல் போராட்டத்தை அறிவித்துள்ளது. திருமுருகன்பூண்டி, அம்மாபாளையத்தில் அண்மையில் தெக்கலூர் பகுதியைச் சேர்ந்த செல்வி என்ற பெண் தனி யார் பேருந்தில், அவிநாசி செல்வதற்காக ஏறியுள்ளார். அப்போது, பேருந்து நடத்துநர் பைபாஸ் வழியாக பேருந்து செல்ல உள்ளது என கூறி இறங்குமாறு தெரிவித்துள்ளார். அப்பெண் இறங்குவதற்குள், பேருந்தை நகர்த்தியதால், விபத்து ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி பெண் பலியானார். தனியார் பேருந்து ஓட்டுநர், நடத்துநரின் அலட்சியத்தால், பலியான பெண்ணுக்கு நீதி கேட்டும், உரிய இழப்பீடு வழங்கக் கோரி, மார்ச் 8 ஆம் தேதி சாலை மறியல் போராட்டம் நடத்தப் போவதாக மார்க்சிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.
ஏடிஎம்-யை உடைத்து கொள்ளை முயற்சி
கோவை, மார்ச் 4- கோவையில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர். கோவை, சிங்காநல்லூர், வரதராஜபுரத்தில் தனியார் வங்கி கிளைக்கு சொந்தமான ஏடிஎம் இயந்திரம் செயல்பட்டு வரு கிறது. இதற்குள் வெள்ளியன்று இரவு உள்ளே புகுந்த நபர் ஒருவர், ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயற்சி செய்து கொண்டிருந்தார். இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த போலீசார் ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயன்று கொண் டிருந்த வாலிபரை பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். அதில், அவர் புலியகுளத்தை சேர்ந்த ஆனந்தன்(39) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓடும் பேருந்தில் பெண்ணிடம் நகை பறிப்பு
கோவை, மார்ச் 4- கோவை, வடவள்ளி, அசனூர் சாலையில் வசிப்பவர் சாந்த குமாரி(62). இவர் கோவை டவுன்ஹாலில் இருந்து பேருந்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி யாரோ அவரது கழுத்தில் கிடந்த 3 1/2 பவுன் தங்க செயினை பறித்து தப்பி சென்றுள்ளனர். இது குறித்து சாந்தகுமாரி உக்கடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பறிமுதல்
அவிநாசி,மார்ச் 4- அவிநாசி- சாலை பழங் கரை பிரிவில் போலீசார் கஞ்சா விற்பனை, கடத்தல் தொடர்பான வாகன சோத னையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஆந்திராவில் இருந்து கோவைக்கு வந்த ஆம்னி பேருந்தில் இறங்கிய நபரை போலீசார் சந்தேகத் தின் பேரில் சோதனை மேற் கொண்டனர். அவரிடம் உரிய ஆவணங்கள் இல்லா மல் ரூ.40 லட்சம் இருப்பது தெரியவந்தது. இதனை பறி முதல் செய்து வருமான வரித் துறையினரிடம் ஒப்படைத்த னர்.
கூடுதல் மின்சாரம் - விசைத்தறியாளர்கள் நன்றி
ஈரோடு, மார்ச் 4- தமிழ்நாட்டில் விசைத்தறி களுக்கான இலவச மின்சாரத்தின் அளவு 750 யூனிட்டிலிருந்து 1000 யூனிட்டாக உயர்த்திய தமிழ்நாடு அரசிற்கு விசைத்தறியாளர்கள் நன்றி தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் நலிவடைந்து வரும் விசைத்தறி தொழிலை பாது காக்க விசைத்தறியாளர்கள் கூட்ட மைப்பினர் இலவச வேட்டி, சேலை தயாரிப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை விடுத்து வந் தனர். இவற்றில் சிலவற்றை அரசு நிறைவேற்றியது. அத்துடன் அண்மையில் மின்கட்டணம் உயர்த்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து விசைத்தறியாளர் கள் இலவச மின்சாரத்தின் அளவை உயர்த்துமாறு கோரிக் கை விடுத்தனர். இந்நிலையில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வந்தது. தேர்தல் களத்திலும் விசைத்தறியாளர்கள் சந்திப்பின் போது ஆளுங்கட்சியினர் கோரிக் கைகள் நிறைவேற்றப்படும் என உறுதியளித்திருந்தனர். இதை யடுத்து விசைத்தறிகளுக்கான இலவச மின்சாரத்தின் அளவு 750 யூனிட்டில் இருந்து 1000 யூனிட்டாக உயர்த்தி அரசாணை வெளியிடப் பட்டுள்ளது. இதற்கு விசைத்தறி யாளர்கள் நன்றி தெரிவித்து உள் ளனர். இதுகுறித்து தமிழ்நாடு விசைத் தறியாளர்கள் கூட்டமைப்பின் செய்தி தொடர்பாளர் கந்தவேல் கூறியதாவது, விசைத்தறிக்கான இலவச மின்சாரத்தின் அளவு 1000 யூனிட்டாக உயர்த்தப்படும் என திமுக தேர்தல் வாக்குறுதி அளித் திருந்தது. இதனை நிறைவேற்ற வேண்டுமென வேண்டுகோள் விடுத்து இருந்தோம். இடைத்தேர்த லின் போதும் இந்த கோரிக்கையை வலியுறுத்தினோம். கோரிக்கை நிறைவேற்றப்படும் என அவர் களும் உறுதி அளித்திருந்தனர். அதன்படி விசைத்தறிகளுக்கான இலவச மின்சாரத்தின் அளவு 750 யூனிட்டில் இருந்து 1000 யூனிட் டாகவும், கைத்தறி நெசவாளர் களுக்கான இலவச மின்சாரத்தின் அளவு 200 யூனிட்டில் இருந்து 300 யூனிட்டாகவும் உயர்த்தி அர சாணை வெளியிடப்பட்டுள்ளது. மேலும், ஆயிரம் முதல் 1500 யூனிட் வரையிலான மின் கட்டண மாக யூனிட்டிற்கு 35 பைசாவும், 1500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத் துவோருக்கு யூனிட்டுக்கு 70 பைசாவாகவும் குறைக்கப்பட் டுள்ளது. இதன் மூலம் 1.60 லட்சம் மின் இணைப்புகள் உள்ள நிலை யில் விசைத்தறியாளர்கள் பயன டைவார்கள். விசைத்தறியாளர்க ளின் கோரிக்கையை நிறை வேற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, முத்துசாமி, சாமிநாதன் மற்றும் ஈஸ்வரன் எம்எல்ஏ ஆகியோ ருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.
உடுமலை அணைகளின் நிலவரம்
திருமூர்த்தி அணை நீர்மட்டம்:38.48/60அடி நீர்வரத்து:798கன அடி
வெளியேற்றம்:1174கனஅடி
அமராவதி அணை நீர்மட்டம்:53.87/90அடி.நீர்வரத்து:16கனஅடி
வெளியேற்றம்:121கனஅடி
பட்டாவுக்கு இடம் ஒதுக்காத நிர்வாகம்: சிபிஎம் போராட்டம் நடத்த முடிவு
உடுமலை, மார்ச் 4 - பட்டா கிடைத்தும் இடம் ஒதுக்காமல் இருக்கும் வருவாய் நிர்வாகத்தை கண் டித்து போராட்டம் நடத்த மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது. திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் தாலுகா கொமரலிங்கம் பகுதி மக்க ளுக்கு கடந்த 2017ஆம் ஆண்டு 90க்கும் மேற்பட்ட ஏழை மக்களுக்கு வருவாய் துறை சார்பில் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கபட்டது. பட்டா கிடைத் தும் இன்றுவரை நில அளவை செய்து இடம் ஒதுக்கீடு செய்து தரவில்லை. இது குறித்து அனைத்து அதிகாரிகளுக்கும் பல முறை கோரிக்கை விடுத்தும் இடம் தரப்படவில்லை. இதுதொடர்காக,கடந்த வருடம் கோட்டாட்சியர் அலுவல கத்தை முற்றுகையிட்ட பொது மக்களி டம் வருவாய் துறை அதிகாரிகள் தங்க ளுக்கு வழங்கிய இடத்தில் நீதிமன்ற வழக்கு உள்ளது. உடனடியாக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும், பின்னர் நிலத்தை அளத்து பட்டாவின் படி அனைவருக்கும் இடம் தர நடவ டிக்கை எடுக்கப்படும் என்ற வாக்குறுதி அளித்தனர். ஆனால் அதன்படி தற் போதுவரை பட்டாவிற்கான நிலம் தரப்ப டவில்லை. போராட்டம் நடைபெற்ற போது வரு வாய் துறையால் தரப்பட்ட வாக்குறு திப்படி பொது மக்களுக்கு இடம் தர வேண்டும், இல்லையெனில் விரைவில் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மார்க் சிஸ்ட் கட்சியின் தலைமையில் காத்தி ருப்பு போராட்டம் நடத்தப்படும் என்று மார்க்சிஸ்ட் கட்சியின் கொமரலிங்கம் கிளை சார்பில் முடிவு செய்யபட்டுள் ளது.
தானியங்கி சிக்னல் அமைக்க கோரிக்கை
உடுமலை, மார்ச் 4- உடுமலையிலிருந்து திருப்பூர் செல்லும் சாலை மற்றும் பொள்ளாச்சியிலிருந்து தாராபுரம் செல்லும் சாலை, குடிமங்க லம் பகுதியில் உள்ள நால் ரோடில் இணைகிறது. பொள்ளாச்சி பகுதியிலிருந்து குடிமங்கலம் நால் ரோடு வழியாக தாராபுரம், கரூர் மற்றும் ஈரோடு செல்லவும், உடுமலை, மூணார் பகுதி யிலிருந்து பல்லடம், திருப்பூருக்கு செல்ல அதிகமாக பயன்ப டுத்தும் சாலை என்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகி றது. மேலும் இப்பகுதியில் காற்றாலை நிறுவனங்களின் அலு வலகம் மற்றும் அதன் வாகனங்கள் அதிகமாக பயன்படுத்துவ தால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு தொடர் விபத்துகள் ஏற்படுகிறது. எனவே பொது மக்களுக்கும் வாகன ஓட்டிக ளுக்கு பாதிப்பு ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் நால் ரோடு பகுதியில் தானியங்கி சிக்னல் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்கள்.
பேருந்தில் சிக்கி பலியான பெண் குடும்பத்திற்கு நீதி கேட்டு சிபிஎம் மறியல் போராட்டம் அறிவிப்பு
அவிநாசி, மார்ச் 4 - திருமுருகன்பூண்டி அருகே அம்மாபாளையத்தில் தனி யார் பேருந்தில் இருந்து அவசரகதியில் இறக்கிவிடப்பட் டதால் பேருந்தில் சிக்கி பலியான பெண்ணின் குடும்பத் திற்கு நீதி கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாலை மறி யல் போராட்டம் அறிவித்துள்ளது. திருமுருகன்பூண்டி நகராட்சிக்கு உட்பட்ட அம்மாபாளை யத்தில் அண்மையில் தெக்கலூர் பகுதியைச் சேர்ந்த செல்வி என்ற பெண் தனியார் பேருந்தில், அவிநாசி செல்வதற்காக ஏறியுள்ளார். இந்த நிலையில் பேருந்தின் நடத்துநர் அவிநாசி நகருக்குள் செல்லாமல் பைபாஸ் வழியாக பேருந்து செல்லும் என்று சொல்லி அவரை இறங்கச் சொல்லி இருக்கிறார். பேருந்தில் இருந்து அவர் இறங்கும்போது அவ சரகதியில் பேருந்தை ஓட்டுநர் எடுத்ததால், விபத்து ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி செல்வி உயிரிழந்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அவிநாசி ஒன்றியக் குழு சார்பில், விபத்தில் பலியான பெண்ணுக்கு நீதி கேட்டும், தெக்கலூர், அவிநாசி உள்ளிட்ட இடங்களில் அனைத்து பேருந்துகள் வந்து செல்வதை உறுதிப்படுத்தக் கோரியும், தனியார் பேருந்துகளின் அத்து மீறல்களைக் கண்டித்தும் மார்ச் 8ஆம் தேதி பேருந்து நிறுத்த பகுதிகளில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது.
உடுமலையில் நில வாழ் பறவைகள் கணக்கெடுப்பு
உடுமலை, மார்ச் 4- தமிழ்நாட்டில் ஒருங்கி ணைந்த நில வாழ் பறவைகள் கணக்கெடுப்பானது, காடு கள், காடுகளை ஒட்டிய கிரா மங்கள் மற்றும் நகரங்கள் போன்ற பகுதிகளில் சனியன்று நடைபெற்றது. இந்த கணக்கெடுப்பு பணியில் வனத்துறை பணி யாளர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனம் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர் களும் பங்கேற்றனர். பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிகள், வனப் பகுதிக ளுக்கு அருகிலுள்ள கிராம பகுதிகளில் மற்றும் சிறிய மற்றும் பெரிய நகரங்கள் போன்றவற்றிலும் கணக்கெ டுப்பு பணி மேற்கொள்ளப் பட்டது. சனியன்று திருப்பூர் வனக் கோட்ட உதவி வன பாதுகாவலர் மற்றும் உதவி இயக்குநர் கணேஷ் ராம், பறவைகள் ஆர்வலர் லட்சு மணன், வனக்காவலர் பிர காஷ், வேட்டை தடுப்பு காவ லர்கள் ஆகியோர் அடங் கிய குழு திருமூர்த்தி மலை முதல் பொன்னால் அம்மன் சோலை வரை உள்ள கிராமப் புற பகுதியில் பறவைகள் கணக்கெடுப்பு மேற்கொண் டனர்.
மீண்டும் குறைதீர்முகாம்கள்
ஈரோடு, மார்ச் 4- ஈரோடு மாவட்டத்தில் சட்டமன்ற இடைத்தேர்தலுக்காக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட குறைதீர் முகாம்கள், இனி தொடர்ந்து நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பணிகள் முடிவிற்கு வந்துள்ள நிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டங்கள் திங்கள்கிழமை முதல் நடைபெற உள்ளது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதால் ஈரோடு மாவட்டத்தில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர் முகாம் மற்றும் இதர குறைதீர்க்கும் முகாம்கள் நிறுத்தி வைக்கப்பட்டது. வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கை உள்ளிட்ட பணிகள் முடிந்துள்ள நிலையில்,தேர்தல் நடைமுறைகள் விலக்கிக்கொள்ளப்பட்ட நிலையில், 18.1.2023 நிறுத்தி வைக்கப்பட்ட குறைதீர் முகாம்கள் வரும் 6 ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது.