districts

img

தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பிற்கு கடும் எதிர்ப்பு

நாமக்கல், ஏப்.8- மக்களவை தேர்தல் வாக்குப்பதி வுக்கு பிறகு ஜூன் 4 ஆம் தேதி வரை, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அம லில் இருக்கும் என்ற தேர்தல் ஆணை யத்தின் அறிவிப்பிற்கு வணிகர் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் நாமக்கல் மாவட்டத் தலைவர் ஜெயக்குமார் வெள்ளையன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, தமிழ்நாட்டில் ஏப். 19 ஆம் தேதி நடைபெற உள்ள நாடாளு மன்ற தேர்தல் வாக்குப்பதிவு முடிந்த  பிறகும், பணம் கொண்டுசெல்ல விதிக் கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் ஜூன் 4 ஆம் தேதி வரை தொடரும் என தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பிற்கு தமிழ்நாடு வணிகர் சங் கங்களின் பேரமைப்பு தனது கடும்  கண்டனத்தை தெரிவித்துக் கொள்கி றது. தேர்தல் வரை கொண்டுசெல்ல அனுமதிக்கப்பட்ட ரொக்கம் ரூ.50 ஆயி ரத்தை, 2 லட்சம் ரூபாயாக உயர்த்த  வேண்டும் என வணிகர்கள் கோரிக்கை  விடுத்து வருகின்றனர். அதற்கு தேர்தல் ஆணையம் செவிசாய்க்கவில்லை. இதனைத்தொடர்ந்து, மாநில தேர்தல் ஆணையரை நேரில் சந்தித்த பேரமைப் பின் மாநிலத் தலைவர் விக்கிரமராஜா,  ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவிற்கு பிறகு பணம் கொண்டு செல்லும்  கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் விலக்கிக் கொள்ளவேண்டும் என  கோரிக்கை மனு அளித்தார். அந்த  கோரிக்கையும் நிராகரிக்கப்பட் டுள்ளது. வணிகர்களின் நியாயமான எந்த ஒரு கோரிக்கையையும் தேர்தல் ஆணையம் ஏற்க மறுப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்த பிறகும் ஜூன் 4 ஆம் தேதி  வரை இந்த கட்டுப்பாடுகள் தொடர்ந் தால் வணிகர்கள் கடும் அவதிக்குள்ளா வார்கள். ஏப்.19 ஆம் தேதிக்கு பிறகு  இந்த கட்டுப்பாடுகளை விலக்கி கொள்ள தேர்தல் ஆணையம் மறுத் தால், தேர்தலை புறக்கணிக்க வேண் டும் என வணிகர்கள் பலரும் கருத்து  தெரிவித்து வருகின்றனர். இதுதொடர் பாக பேரமைப்பின் மாநிலத் தலைவர்  மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகளு டன் கலந்தாலோசித்து முடிவெடுக்கப்ப டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட் டுள்ளது.