ஈரோடு, மார்ச் 23- ஈரோடு அருகே பேருந்தின் முன்பக்க சக்கரங்கள் கழன்று பின் சக்கரத்தில் சிக்கிக்கொண்டது. நல்வாய்ப்பாக பயணி களுக்கு எவ்வித காயமின்றி தப்பித்தனர். ஈரோடு பேருந்து நிலையத்தில் இருந்து புதனன்று மாலை அரசு நகர பேருந்து (6 ஏ நம்பர்) ஈரோட்டில் இருந்து சோலார், மொடக்குறிச்சி வழியாக பாசூர் நோக்கி சென்று கொண்டி ருந்தது. இந்த பேருந்தை கதிர்வேல் என்பவர் ஓட்டுநராகவும், மணி நடத்துநராகவும் பணியாற்றி வந்தனர். இந்நிலையில், பேருந்து ஊஞ்சலூர் அடுத்த சோளாங்காபாளையம் பேருந்து நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென பேருந்தின் முன்பக்க இரு சக்கரங்களும் கழன்று பின் சக்கரத்தில் சிக்கிக்கொண்டது. இதனால் பேருந்து பயங்கர சத்தத்துடன் குலுங்கியபடி நின்றது. இதில் பேருந்தின் பயணம் செய்த 8 பயணிகள் உயிர் தப்பினர். இதையடுத்து, மாற்று பேருந்து வரவழைக்கப்பட்டு அப் பயணிகளை ஏற்றி அழைத்து செல்லப்பட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.