districts

img

ஊத்துக்குளி அரசு மருத்துவமனையில் பணியாளர் இல்லை சிகிச்சைக்கு வருவோரை திருப்பி அனுப்பும் அவலம்

திருப்பூர், ஆக.24 – ஊத்துக்குளி அரசு மருத்துவமனையில் பணியாளர்கள் இல்லை என்று சொல்லி, சிகிச்சை பெற வருபவர்களை திருப்பி அனுப் புவதாகவும், இப்பிரச்சனையில் உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு  விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.குமார் கூறியுள்ளார். இது குறித்து ஆர்.குமார் கூறியதாவது: ஊத்துக்குளி சாலப்பாளையத்தை சேர்ந்த வெங்கடாசலம் மனைவி சிந்தாமணி என்பவர்  தனது காயத்திற்கு கட்டு போட வெள்ளியன்று  ஊத்துக்குளி அரசு மருத்துவமனைக்கு வந் தார். அவர் வரும்போது ஏற்கனவே சிகிச்சை  பெற்ற ஜிப்மர் மருத்துவமனை ஆவணங்க ளையும் கொண்டு வந்துள்ளார். பணியில் இருந்த மருத்துவர்கள் ஆவணங்களை வாங்கி பார்க்கக்கூட மறுத்துவிட்டு, காயங்க ளுக்கு கட்டு போடுவதற்கு இங்கே ஆட்கள் இல்லை. அதனால் நீங்கள் வெளியில் சென்று  பார்த்துக் கொள்ளுங்கள் என்று அவரை திருப்பி அனுப்பியதாக தெரிவித்துள்ளார். ஒரு அரசு மருத்துவமனையில் சிகிச் சைக்கு வருபவர்களுக்கு தேவையான உதவி செய்ய வேண்டியது, பணியில் உள்ள  மருத்துவர்கள் கடமை. அவர்களிடம், பணி யாளர்களை இல்லை போன்ற காரணங்க ளைச் சொல்லி திருப்பி அனுப்புவது ஏற்றுக்  கொள்ள முடியாது. ஆகவே உரிய நடவ டிக்கை எடுத்து வருகிற நோயாளிகளுக்கு சாத்தியமான சிகிச்சைகளை அளிக்க வேண் டும். வெள்ளியன்று நடந்த சம்பவம் குறித்து  விசாரிக்க வேண்டும் என விவசாயிகள் சங்க  மாவட்டச் செயலாளர் ஆர்.குமார் ஊத்துக் குளி அரசு மருத்துவமனை தலைமை மருத ்துவருக்கு புகார் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே கடந்த ஜூலை மாதம் விவசா யிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ். ஆர்.மதுசூதனன், இந்த மருத்துவமனையில் தூய்மைப் பணியாளர்கள் இல்லாதது குறித் தும், இதனால் அறுவை சிகிச்சை அரங்கைத் தூய்மைப்படுத்த முடியாத நிலையில், சிகிச் சைக்கு வருவோர் எண்ணிக்கை குறைந்தி ருப்பதாக திருப்பூர் மாவட்ட நலப்பணிகள்  இணை இயக்குநருக்கு கடிதம் எழுதியி ருந்தார். இதற்கு பதிலளித்த இணை இயக்கு நர், இந்த மருத்துவமனையில் செயல்படுத் தப்பட்டு வரும் முதலமைச்சர் விரிவான மருத் துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் தினக் கூலி அடிப்படையில் தூய்மைப் பணியாளர் களை தலைமை மருத்துவர் நியமித்துக் கொள்ள வழிவகைகள் உள்ளன என்று பதில்  தெரிவித்திருந்தார். இதன் பின்பும் தூய்மைப் பணியாளர் நிய மிக்கப்படவில்லை. தற்போது கட்டுப்போட  வரும் மக்களிடம் பணியாளர் இல்லை என்று சொல்லி திருப்பி அனுப்புவது தொடர்வதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். எனவே இப்பிரச்சனையில் மாவட்ட நிர்வாகம் உரிய  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆர். குமார் கேட்டுக் கொண்டிருக்கிறார்.