அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் திருப்பூர் மாவட்டச் செயலா ளர் எஸ்.பவித்ராதேவி, மாவட்டப் பொரு ளாளர் ஏ.ஷகிலா இருவரும் திருப்பூர் பழைய பேருந்து நிலையம் எதிரே சாலை யோரம் நடந்து வந்து கொண்டிருந்தனர். அப்போது பேருந்து நிலையத்துக்கு எதிரே மேம்பாலத்திற்கு அடியில் ஒரு நப ரின் சடலம் கிடத்தப்பட்டு துணியைப் போர்த்தி, மாலைகள் அணிவித்து ஆண் களும், பெண்களும் சூழ்ந்து நின்று அழுது கொண்டிருந்தனர். இதைப் பார்த்த பவித்ராவும், ஷகிலாவும் அந்த இடத் துக்குச் சென்று அங்கிருந்தவர்களிடம் விசாரித்தனர். என்ன ஆனது, ஏன் இங்கு சடலத்தை வைத்திருக்கிறீர்கள்.. என்று கேட்டிருக்கின்றனர். இவர்கள் கேட்டது தான் தாமதம், அங்கிருந்த பெண்கள் மடைதிறந்த வெள்ளம் போல் தங்கள் மன உணர்வுகளை, குமுறலை இவர் களிடம் கொட்டித் தீர்த்தனர். காலையில் இருந்து இந்த இடத்தில்தான் எங்கள் உறவினரின் சடலம் கிடத்தப்பட்டுள்ளது. நகரின் மையத்தில் இருக்கும் இந்த சாலையில்தான் நூற்றுக்கணக்கானோர் கடந்து சென்று கொண்டிருக்கின்றனர். என்ன ஆனது, யார் இவர்கள் என்று கேட் பதற்கு ஒருத்தருக்குக் கூட தோண வில்லை. நீங்கள் எங்களை நெருங்கி வந்து கேட்டது எங்களுக்கு மிகவும் ஆறுதலாக இருக்கிறது.
நாங்கள் குறவர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். முப்பதுக்கும் மேற்பட்டவர் கள் இருக்கிறோம். தங்குவதற்கென்று எங் களுக்கு வீடு, வாசல் எதுவும் இல்லை. சாலையோரமே எங்கள் வாழ்க்கை போய்க் கொண்டிருக்கிறது. எங்கள் உறவி னர் உடல் நலக் குறைவால் இறந்துவிட் டார். இவரது சடலத்தை வீட்டில் வைத்து முறையாக சடங்கு செய்து எடுத்துச் செல்லக்கூட எங்களுக்கு எந்த வழியும் இல்லை. எனவேதான் பரபரப்பான இந்த சாலையோரம் பாலத்துக்குக் கீழே ஓரத் தில் இவரது சடலத்தை வைத்து எங்கள் சம்பிரதாய சடங்குகளைச் செய்து கொண் டிருக்கிறோம் என்றனர். கேட்பதற்கு நாதியில்லை என்பதற்கு எங்கள் வாழ்க்கைதான் உதாரணம். பகல் நேரங்களில் ஏதாவது சிறு பொருட்கள் விற்பனை செய்யலாம் என்றால் பேருந்து நிலையம், கடை வீதிகளில் எங்களை காவல் துறையினரும், மற்றவர்களும் குச் சியை வைத்து விரட்டிக் கொண்டிருக் கின்றனர். இரவு நேரத்தில் பாதுகாப்பாக படுத்துத் தூங்கக் கூட வழியில்லை. இதோ இப்போது இவர் இறந்துவிட்டார். அநாதை சடலங்களை சுமந்து செல்வது போலத்தான் அமரர் ஊர்தி வாகனத்தில் கொண்டு சென்று மின் மயானத்தில் எரி யூட்டும் நிலை உள்ளது. எங்களுக்கு இருப்பதற்கு வீடு வேண் டும் என்று பல ஆண்டுகளாக மாவட்ட ஆட் சியர் உள்பட அதிகாரிகளிடம் பல முறை மனுக் கொடுத்திருக்கிறோம். இதுவரை எதுவுமே நடக்கவில்லை. என்ன செய் வது நாங்கள்? என்று அவர்கள் கூறினர்.
அவர்களது கூட்டத்தில் 10, 15 வயதுக்கு உட்பட்ட சிறார்கள், சிறுமிகள், குழந்தைகள் பலர் இருந்துள்ளனர். இவர் கள் பாதுகாப்பு பற்றி மாதர் சங்கத்தின் பவித்ராவும், ஷகிலாவும் கேள்வி கேட்க, பகலில் எங்களை விரட்டும் பெரிய மனி தர்கள், இரவில் எங்களை சாலையோரம் நிம்மதியாக தூங்கக்கூட விட மாட்டார் கள். வயது வந்த எங்கள் பெண் குழந்தை களைப் பாதுகாப்பது ஒவ்வொரு நாளும் வயிற்றில் நெருப்பைக் கட்டியதாக இருக் கிறது. எங்கள் ஆண்கள் பகலெல்லாம் வேலை செய்து களைத்துப் போயிருந்தா லும் இரவு நேரத்தில் வீதியோரம் தூங்கும் எங்கள் பெண்களுக்குப் பாதுகாப்பாக முழு இரவும் விழித்துக் கொண்டிருக்க வேண்டும். இதுதான் எங்கள் வாழ்க்கை என்றனர். அவர்கள் பேசிக் கொண்டிருந்த போது, அமரர் ஊர்தி அங்கு வந்து நிற்க வும், இறந்தவரின் சடலத்தை வாகனத்தில் ஏற்றி இறுதி பயணம் தொடங்கியது. கனத்த இதயத்துடன் பவித்ராவும், ஷகிலா வும் விடை பெற்று வந்தனர். வாழும்போதும் வீடில்லை, பாது காப்பில்லை, செத்த பிறகும் ஒரு மனித ருக்குக் கிடைக்க வேண்டிய குறைந்தபட்ச கண்ணியமான இறுதி நிகழ்ச்சி செய்வ தற்கு கூட வழியில்லை...இந்த நிலை யாருக்கும் நிகழக் கூடாது. ஒரு சமுதா யமே புறக்கணிக்கப்பட்ட நிலையில் இருப் பதை எந்த வகையில் ஏற்றுக் கொள்ள முடியும்? எனவே மாவட்ட நிர்வாகம் இவர் களுக்கு வீடு வழங்க வேண்டும். குறைந்த பட்சம் அவர்கள் வாழ்வாதாரத்துக்கு உரிய உதவி செய்ய வேண்டும் என்று மாதர் சங்க நிர்வாகிகள் பவித்ராவும், ஷகிலா வும் வேண்டுகோள் விடுத்தனர். (ந.நி)